December 2025

Be strengthened by the word of God

Home December 2025

அனுதின வேத தியானம்: மோசடி செய்பவர்களை குறித்து கவனமாக இருங்கள்

            என் குடும்பத்தினரே, நான் உங்களிடத்தில் ஒரு நிமிடம் வெளிப்படையாக பேசலாமா? இந்த வாரத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என்னை அதிகமாக உலுக்கியது. என்னைப் போல் பாசாங்கு செய்து எவரோ ஒருவர் பேஸ்புக்கில் (Facebook) ஒரு போலி கணக்கை உருவாக்கி மக்களிடத்திலிருந்து என் பெயரில் பணம் வாங்கும் அளவிற்கு செயல்பட்டுள்ளார். இதயம் நொறுங்கும் வகையில் இதில் அநேகர் வஞ்சிக்கப்பட்டனர். நான் காலை விழித்தெழுந்து என்னுடைய செய்திகளை பார்த்த போது இச்சம்பவம் நடந்ததை நான் கண்டு என்னுடைய இருதயம் தோய்ந்து போனது. “ஏன் இது நடந்தது? ஏன் மக்கள் இத்தகைய காரியங்களுக்கு பலியாகிறார்கள்?” போன்ற எண்ணங்கள் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இதைக் குறித்து ஒரு சகோதரர் சொல்லிய ஒரு கருத்து என்னை ஜெபத்திற்குள்ளாகவும் சிந்தனை செய்வதற்காகவும் நடத்தியது அந்த நேரத்தில் வந்த இந்த தியான செய்தியை உங்களிடத்தில் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இதில் மெய்யான காரியம் இதுதான்: மோசடி செய்பவர்கள் கொம்புடனும் கையில் மண் கோரி போன்ற கருவியுடனும் வர மாட்டார்கள். அப்படி அவர்கள் வருவார்கள் என்றால் நாம் அவர்களை எளிதாக கண்டுகொள்ள முடியும். ஆனால், பிசாசைப் போலவே, அவர்கள் ஒளியை போல் இருக்கும் ஒரு வஞ்சகத்தை போர்த்தி கொண்டு வருவார்கள். அதாவது, பார்வைக்கு சரியாகவும், கேட்பதற்கு சரியாகவும், நம்புவதற்கு பெரும்பாலும் ஏற்றதாகவும் தோன்றும் ஒரு பாவனையில் வருவார்கள். வேதாகமம், பிசாசு ஒளியின் தூதன் போல் வேஷம் தரித்து வருவான் என்று கூறுகிறது. அதாவது, மெய்யான தேவனின் பிரகாசமான ஒளியாக அல்லாமல் ஒரு காவல் காக்கப்படாத இருதயத்தை வஞ்சிக்க கூடிய ஒரு மங்கலான போலியான ஒளியாக வருகிறான்.

அப்படியெனில், இதற்கு நாம் ஏன் சில நேரங்களில் விழுந்து போகிறோம்? நாம் முட்டாள்களாய் இருப்பதினாலோ அல்லது கவனக்குறைவாக இருப்பதினாலோ அல்ல. மாறாக, அது, அந்த நேரத்தில் இயேசுவோடு இருக்கும் நம்முடைய ஐக்கியம் ஆழமாகவோ, நிலையாகவோ, அல்லது செயல்பாட்டிலோ இருக்க வேண்டிய நிலையில் இல்லாமல் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பாக இதை ஏதேன் தோட்டத்திலும் நாம் காண முடிகிறது. ஆதாமும் ஏவாளும் தேவனோடு அனுதினமும் ஐக்கியமான பிணைப்பில் நடப்பதற்காக ஒரு தோட்டத்தை தேவன் உருவாக்கினார். ஆனால், “அறிவு” என்ற வேஷத்தில் வஞ்சனை வந்த போது அவர்கள் அந்த ஐக்கியத்தில் சார்ந்திருக்கவில்லை. அடிப்படையாக, “இது, உங்களுடைய வாழ்க்கையை மேன்மைப்படுத்தும்.” என்று சர்ப்பம் அவர்களிடத்தில் சொல்லியது. இந்தக் குறிப்பு, கேட்பதற்கு நன்கு அறிந்ததாக இருக்கிறதா?

உலகமும் இன்னும் இதே வாக்கியங்களை தான் நுண்ணியமாக சொல்லிக்கொண்டே இருக்கிறது. ” இங்கு வா, இது உன்னுடைய வாழ்க்கையை மேம்படுத்தும்.” “இதை செய்து பார். இதைத்தான் நீ இவ்வளவு நாள் இழந்து போய் இருக்கிறாய்.” “மெய்யான ஞானம் இதுதான்.” ஆனால், இயேசு இதற்கு மாறாக முற்றிலுமான வேறு ஒரு பாதைக்கு நம்மை அழைக்கிறார். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” என்று சொல்லுகிறார். நாம் அநேக நேரம், காணிக்கை கொடுப்பது, தசம பாகம் செலுத்துவது, வேதம் வாசிப்பது, சடங்காச்சாரமாக ஜெபிப்பது, மற்றும் சபை ஆராதனைகளுக்கும் சுவிசேஷ கூட்டங்களுக்கும் செல்வது போன்ற பக்திக்கு ஏதுவான செயல்களை தேவனுடனான ஐக்கியமான உறவை கொள்வதற்கு பதிலாக கையாளுகிறோம். இவைகள் நமக்கு மன ரீதியாக ஒரு ஆறுதலை தருவது போல் தோன்றுவதினால் இவைகளை செய்கிறோம். கவலைக்கிடமாக, இந்த பழக்கங்களே ஒருவரின் வாழ்க்கைக்குள்ளாக மோசடி செய்பவர்கள் நுழைவதற்கு உகந்தவைகளாக மாறுகின்றன. இந்த வஞ்சனை மோசடிகளாய் மற்றும் வருபவை அல்ல. அது, மாம்சத்திற்கு ஆறுதல் தரும் சோதனைகள் மூலமாகவும் வருகிறது. மது அருந்துதல், புகைபிடித்தல், ஆபாச காட்சிகளை பார்த்தல் அல்லது வாசித்தல், கட்டுப்படுத்த முடியாத கோபம், கசப்பு, குற்றப்படுத்துதல், மற்றும் அனைத்து விதமான அழிவிற்கான பழக்க வழக்கங்களாக இருக்கலாம். இவை சிற்றின்பம், நிவாரணம், ஒரு சூழ்நிலையில் இருந்து மனரீதியாக பிரிக்கப்பட்டு தப்பிப்பதற்கு, அல்லது “இன்னும் ஒரே முறை மாத்திரம்” போன்றவைகளாக வேஷம் தரித்து வருகின்றன. ஆனால், இதற்கு கீழாக அவைகள் ஆத்துமாவைக் கட்டுப்படுத்த விரும்புகின்றன, விடுதலை செய்ய அல்ல.

குடும்பத்தினரே, உங்களுக்கான மெய்யான அழைப்பு இதுதான்: குறுக்கு வழியில் ஒரு மேம்படுத்தப்பட்ட நல்ல வாழ்க்கைக்காக வாக்குத்தத்தம் பண்ணப்படும் அறிவை நாடாதீர்கள். பரிசுத்த ஆவியானவரோடு கிட்டி சேர்ந்து இருங்கள். தேவனுடைய சரீரமான விசுவாசிகளின் கூடுகையில் வேரூன்று இருங்கள். நாம் ஒன்றாக நடக்கும் போது, ஒன்றாக வளரும் போது, ஒன்றாக ஜெபிக்கும் போது, மற்றும் பரிசுத்த ஆவியானவருடன் ஒரே நிலையில் இருக்கும் போது தேவனுடைய ராஜ்யம் என்பது நாம் வெறுமென பேசும் ஒரு காரியமாக அல்லாமல் நாம்  மெய்யாகவே வாழ்வதாக மாறுகிறது.

மேலும், நீங்கள் சமீபத்தில் வஞ்சிக்கப்பட்டு, வேதனைப்படுத்தப்பட்டு, அல்லது தவறாக வழிநடத்தப்பட்டு இருப்பீர்கள் என்றால் நான் சொல்லுவதை தயவு செய்து கேளுங்கள். அவமானமோ வெட்கமோ படாதிருங்கள். அது, தேவனை விட்டு உங்களை தள்ளுவதாக அல்லாமல் அவருடன் உங்களை கிட்டி சேர்ப்பதாக இருக்கட்டும். இயேசுவுடன் நாம் வைக்கக்கூடிய ஆழமான ஐக்கியம் அவரின் இரத்தத்தின் மூலமாக வாங்கப்பட்டும் உறுதிப்படுத்தப்பட்டும் இருப்பதினால் நமக்கு அதற்கு முழு அங்கீகாரம் இருக்கிறது. எந்த ஒரு மங்கலான போலியானதும் நம்மை இனி ஏமாற்றாத படி நாம் அவருடைய மெய்யான ஒளியின் அருகிலே நிற்போமாக.

 

இன்றைய சிந்தனைக்கு:

            இயேசு கிறிஸ்து, ஏற்கனவே பிசாசையும் அவனுடைய அனைத்து திட்டங்களையும் கல்வாரியின் சிலுவையிலே வெற்றி சிறந்தார் என்று இன்றைக்கு நான் நினைவு படுத்தப்படுகிறேன். இருப்பினும் விசுவாசிகளாக நாம் சில நேரங்களில் சத்துருவின் கண்ணியில் சிக்கிக் கொள்கிறோம். இது அவன் பலனானவன் என்பதால் அல்ல, ஆனால், நாம் தொடர்ச்சியாக இயேசு கிறிஸ்துவுடன் ஐக்கியத்தில் நெருக்கமாக இல்லாமல் இருப்பதினால். இந்த உலகம், நம்மை எளிதான முறையில் வெற்றி கொள்ள, துரிதமாக சந்தோஷத்தை பெற்றுக்கொள்ள, மற்றும் பலருக்குக் கிடைக்காத இரகசிய அறிவை பெற்றுக்கொள்ள வாக்களித்து நம்மை ஆசை காட்டுகிறது. ஆனால் இவைகள் எல்லாம் அவருடைய சத்தியத்தில் இருந்து நம்மை கவனம் சிதற வைக்கிறவைகள். இயேசு கிறிஸ்துவுடன் நாம் ஐக்கியமாக பிணைக்கப்பட்டு அவருடைய பிரசன்னத்தில் அனுதினமும் நடப்பது நம்மை வஞ்சனைகளை கண்டு கொள்ளவும் அவர் ஜெயித்து பெற்ற வெற்றியை வாழவும் நம்மை தகுதிப்படுத்துகிறது. ஆகவே, நம்முடைய பெலனும், ஒளியும், அசைக்க முடியாத கோட்டையுமாக இருக்கும். இயேசு கிறிஸ்துவை நாம் பற்றிக் கொள்வோமாக.

 

ஜெபம்:

            பரலோகத்தில் இருக்கும் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உமக்கு முன்பாக வருகிறோம். நீர் ஒருவரே எங்களை அனைத்து கண்ணியில் இருந்தும் தீய திட்டங்களில் இருந்தும் பாதுகாக்கிறவராய் இருக்கிறீர். ஆனால், அநேக நேரம், நீர் எங்களுடைய வாழ்க்கையை தீமையிலிருந்தும் அழிவிலிருந்தும் வஞ்சனையிலிருந்தும் எண்ணற்ற நேரங்களில் பாதுகாத்து வைத்திருப்பதை நாங்கள் அங்கீகரிக்கவும் அதற்காக நன்றி சொல்லவும் மறந்து விடுகிறோம். நீர் எப்பொழுதும் எங்களுடைய வழிநடத்தும் ஒளியாய், மீட்பராய், மற்றும் இரட்சகராய் இருக்கிறீர். இரட்சணியத்தின் சந்தோஷத்தில் நாங்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கும்படியாக உம்முடைய செட்டைகளின் கீழ் அடைக்கலம் பெற எங்களுக்கு உதவி செய்யும். மேலும், நாங்கள் புரிந்து கொள்ளாமல் ஜெபம் செய்யும் பொழுதோ அல்லது நடந்துகொள்ளும் பொழுதோ எங்களை உம்முடைய கிருபையின் அன்பிலே நினைவுகூர்ந்து எங்களுடைய அர்ப்பணிப்பை ஏற்றுக்கொண்டு உம்மோடு கிட்டி சேர்ப்பீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமென்.

 

இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது:

வஞ்சனையானது, அநேக நேரம், கவர்ச்சிகரமாகவும் நம்பத்தக்கதாகவும் அல்லது ஒளி நிறைந்ததாகவும் காணப்படுகிறது. ஆனால், நம்முடைய இருதயங்கள் இயேசு கிறிஸ்துவை விட்டு தூரமாய் இருக்கும்போது மட்டுமே சத்துருவின் திட்டங்கள் பலிக்கின்றன. ஜெபம், வேதம் வாசித்தல், மற்றும் ஐக்கியம் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் இயேசு கிறிஸ்துவுடன் நாம் வைக்கும் அனுதின நெருக்கமே நம்முடைய பகுத்தறியும் தன்மையை கூர்மைப்படுத்தி பொய்யானவைகளில் இருந்து நம்மை பாதுகாத்து மெய்யான ஒளியிலே தொடர்ந்து நடக்க வைக்கின்றது. குறுக்கு வழிகள் அல்லது துரிதமாக ஆதாயம் பெற்றுக் கொள்ளும்படியான வாக்குத்தத்தங்கள் மூலமாக ஈர்க்கப்படும் போது, சற்று ஓய்ந்திருங்கள், இயேசு கிறிஸ்துவின் மேல் சார்ந்து இருங்கள், மற்றும் அவருடைய பிரசன்னத்தில் வேரூன்றி நில்லுங்கள்.

 

(2025 டிசம்பர் மாதம் 06 அன்று கேள் மத்தேயு 11:28 ஊழியத்தின் சார்பாக Rev. இம்மானுவேல் அருள் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி ஜெசிந்த் ஏஞ்சலால் மொழிப்பெயர்க்ப்பட்டது).

 

அறிவிப்புகள்:

     1.உங்களுடைய  சீஷத்துவ   பயணத்தில்   நீங்கள்  ஆதரவை தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும்  காலை 6   மணிக்கு  (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்.

இணைப்பு: https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09 (சந்திப்பு ஐடி (Meeting ID) : 8114423 5750.    கடவுச்சொல் (Password): 12345).

  1. தனிப்பட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை உபயோகித்த தயவாக ஏற்பாடு செய்யுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul/appointment
  2. எங்களுடைய ஊழியங்கள்  மற்றும்  கூடுகைகளை குறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல் தொடர்புகளை பெற்றுக் கொள்ள எங்களுடைய வாட்ஸ்அப் (WhatsApp) குழுவில் சேர உங்களை அழைக்கிறோம் https://chat.whatsapp.com/K8DxEhNz9cn6xW12gKBVL0?mode=wwt உங்களுடன்             விசுவாசத்திலும்             ஐக்கியத்திலும்               நடக்க            நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

 

Read More →

అనుదిన ఆధ్యాత్మికత: మెసగాళ్ళ పట్ల జాగ్రత్త వహించండి.

కుటుంబమా, ఒక నిమిషం మీతో నిజంగా వుండవచ్చా? ఈ వారంలో ఒక సంఘటన నన్ను చాలా కుదిపివేసింది ఎవరో ఒక దొంగ ఫేస్బుక్ అకవంట్ సృష్టించి నాలా నటించి మరియు అనేకులను డబ్బులు అడిగి తీసుకున్నారు.హృదయవికారం మేంటంటే, చాలా మంది మోసపోయారు. నేను ఉదయము లేచి, నా మెసేజ్లు చూసుకున్నప్పుడు ఏం జరిగిందన్నది చూసి నా గుండె జారిపోయింది. మీకు ఆ అనుభూతి ఎలా వుంటుంది అన్నది అర్థమైందనుకుంటాను – ఇది ఎందుకు జరుగుతుంది? ఎందుకు ప్రజలు వీటికి పడిపోతున్నారు / మోసపోతున్నారు? అప్పుడు, ఒక సహోదరుడు చేసిన వ్యాఖ్య నన్ను నిజముగా ప్రార్ధన లోనికి మరియు పరివర్తనకు నేరుగా నడిపెను. ఆ సంభవములో నుండి వచ్చిన ఈ ఆధ్యాత్మికత మీతో పంచుకోదలచాను.

సత్యము ఇదియే: మోసగాళ్లు కొమ్ములతో మరియు త్రిశూలాలతో కనిపించరు. ఒకవేళ అలా వారు కనిపిస్తే మనం వెంటనే వారిని కనిపెట్టేస్తాం. కానీ శత్రువు లాగానే, వారు వెలుగు సంబందుల వలే ముసుగు కప్పుకొని వచ్చెదరు- విశ్వసనీయముగా, సరియైన వారిగా, సత్యవంతులుగా కనిపిస్తారు. గ్రంధం తెలియజేయునది ఏమనగా శత్రువు వెలుగు దూత వలె మారువేషం వేసుకొనును; నిజమైన దేవుని ప్రకాసవంతమైన వెలుగు కాదు గాని, ఒక తేలికపాటి అనుకరణ – ఏదైతే రక్షణ లేని హృదయమును మెపపరచగలదో. అయితే మనం ఎందుకు వీటికి కొన్ని సమయాల్లో పడిపోతున్నాము? మనం మూర్ఖులమని కాదు, మనం నిర్లక్ష్యంగా వున్నామని కాదు. కానీ, ఆ సమయములో మనం యేసుక్రీస్తుతో సాన్నిహిత్యం లోతుగా, స్థిరంగా, చురుకుగా లేదని అర్థం . ఇది అంతా మనం ఏదెను లో చూస్తాం. ఆదాము హవ్వ ప్రతిదినము దేవునితో సాన్నిహిత్యముగా నడువుటకు ఏదేను తోటను దేవుడు సుృష్టించెను. కానీ మోసము జ్ఞానము అనే ముసుగు వేసుకొని వచ్చినప్పుడు వారు ఆ సాన్నిహిత్యముపై ఆధారపడలేదు. వారికి సర్పము చెప్పినది ఏమనగా, “ఇది మీ జీవితాలని మెరుగు పరుస్తుంది”. పరిచయమైన మాటల్లా అనిపిస్తున్నాయా ? ప్రపంచం ఇదే మాటల్ని చెబుతూ వుంటుంది; ” ఇక్కడికి రండి – ఇది మీ జీవితాన్ని మెరుగు పరుస్తుంది. ” ఇది ప్రమత్నించి చూడండి – ఇదే మీరు కోల్పోతున్నది”. “ఇదే నిజమైన జ్ఞానం”. కానీ, యేసు క్రీస్తు దీనికి సంపూర్ణ విత్యాసమైన దారిలోనికి పిలుస్తున్నారు. ఆయన చెప్పునది ఏమనగా “మెదట మీరు దేవుని నీతిని, రాజ్యమును వెతుకుడి అప్పుడు ఇవన్నీ మీకు కలుగును. తరచు, మనం మరొక కోణం లో క్రీస్తు తోని సంబంధమును ప్రయత్నిస్తుంటాం – మతసంబంధమైన క్రియలు ; కానుకలు ఇవ్వడం, దశమభాగం ఇవ్వడం, వాఖ్యం చదవడం, ఆచారాల ప్రకారము ప్రార్ధించుట, సంగమ్ యెక్క పరిచర్యల్లో సువార్త కూటాల్లో పాల్గోవడం, ఇదే దేవునితో సంబంధం అనుకుంటాం.. ఇవన్నీ ఎందుకు చేస్తామంటే ఇవి మనకు భావోద్వేగ సౌకర్యమును కలిగించునట్లు మనకి కనిపిస్తాయి. నిజానికి, ఈ అలవాట్లే మోసగాళ్లకి వ్యక్తుల జీవితాలు తెలుసుకొనుటకు మార్గాలు అవుతాయి. ఈ మోసం మోసపోయినప్పుడు మాత్రమే బయటపడదు. అది లోపలికి శోధనల ద్వారా ప్రాకుతూ (శరీరం) మాంసమునకు సౌకర్యం కలిగేలా కనిపిస్తుంది ఎటువంటి వంటే నీలి చిత్రాలు చూచుట, పొగ త్రాగుట, త్రాగుడు, కోపం, పగ, నిందించుట, ఇంక అనేక రకాలైన పాడుచేసే అలవాట్లు. ఇవి విడుదల, సుఖం, తప్పించుకొనుట, లేక “ఇంకొక్కసారి” అన్నట్లు ముసుగు వేసుకొని వస్తాయి, కానీ అవి ఆత్మను సంకెళ్లు వేయుటకు మాత్రమే ఆశపడతాయి. విడుదల చేయుటకు కాదు. కుటుంబమా, ఇది నిజమైన ఆహ్వనం : మెరుగైన జీవితము కొరకు అడ్డుదారులు చూపే జ్ఞానము వైపు పరుగెత్తకుడి. యేసు క్రీస్తు వైపు పరుగెత్తుడి.పరిశుద్దాత్మకు సన్నిహితముగా వుండుడి. క్రీస్తు శరీరమైన విశ్వాసులతో కలసుకొనుటలో వేరుపారి యుండుడి. ఎందుకంటే, ఎప్పుడైతే మనం కలిసి నడుస్తామో, కలిసి ఎదుగుతామో, కలిసి ప్రార్ధిస్తామో, మరియు ఏక ఆత్మ కలిగియుంటామో, దేవుని రాజ్యము మనము కేవలము మాట్లాడుకొనేదిగా కాక దానిలో జీవించువారమగుదుము.

మరియు, మీరు మోసపోయినట్లు అయినా, గాయపడినా, లేక తప్పుతోవ పట్టినా, దయచేసి వినండి: సిగ్గుపడవద్దు, తద్వారా దేవునికి సమీపించుటకే, మిమ్మును త్రోసివేయుటకు కాదు. మనలను కొనుక్కొని మరియు రక్షిస్తున్న ఆయన సొంత రక్తము ద్వారా మనకు యేసు క్రీస్తుతో మనకు మరి లోతైన సాన్నిహిత్యముకు అవకాసము కలదు. కనుక ఆ వెలుగుకు దగ్గరగా వుందుము గాక, ఆయన నిజమైన వెలుగు నొద్ద ఉందుము గాక. తద్వారా ఎలాంటి అబద్దపు వెలుగు మనలను మరలా మోసము చేయుకుండునట్లు.

పరివర్తన : కల్వరి సిలువలో యేసు క్రీస్తు సైతాను యెక్క ప్రతీ మోసపూరితమైన పధకములను జయించి యున్నారు అని ఈరోజు నేను జ్ఞాపకము చేసుకొనుచున్నాను. కానీ, విశ్వాసులైయుండి కూడా, మనం కొన్ని సమయాల్లో శత్రువు పన్నాగములో పడిపోతున్నాము. సైతాను బలవంతుడని కాదు, యేసు క్రీస్తుతో మనకు ఎడతెగని సాన్నిహిత్యం లేనందువలన. ఈ ప్రపంచం సులువైన విజయాలు, సంతోషం, జ్ఞానములను ప్రమాణము చేస్తూ మనలను శోధిస్తుంది, కానీ అవి నిజమైన సత్యము నుండి దారి మళ్ళిస్తాయి. యేసు క్రీస్తు తో సాన్నిహిత్యం కలిగి అనుదినము ఆయన సన్నిధిలో నడచినపుడు ఆయన గెలిచిన విజయములో మనం జీవిస్తాము. మరియు మోసమును కనిపెట్టగల సిద్ధపాటు ఆయన సన్నిధి అనుగ్రహిస్తుంది. కనుక మనం యేసుక్రీస్తుతో అంటుకట్టబడియుందాం; ఆయనే మన బలం, మన వెలుగు, మన ఆశ్రయదుర్గం.

ప్రార్ధన : పరలోక మందున్న తండ్రి, యేసు క్రీస్తు నామములో మీ ముందుకు వస్తున్నాము. మమ్మును ప్రతీ ఉచ్చులలో నుండి వలలలో నుండి రక్షించువాడవు నీవే, ప్రతీ హాని, విద్వంశం మరియు మోసములనుండి మా జీవితాలను లెక్కలేనన్నిసార్లు రక్షించినందుకు కృతజ్ఞత చెల్లించుట మరిచిపోయాము. మీరు ఎప్పుడూ మమ్మును – నడిపే వెలుగై,మా సహయకుడివై, మా రక్షకుడవై యున్నావు. రక్షణ యెక్క సంతోషము మాలో నిలిచియుండునట్లు మరియు బద్రపరచబడునట్లు మీరెక్కల క్రింద ఆశ్రయము కనుగొన్నట్లు మాకు సహయము చేయుము, మరియు మేము అర్ధం కాకుండానే ప్రార్థన చేసినా,మెలిగినా, మీ ప్రేమపూరిత దయతో మమ్మును జ్ఞాపకము చేసుకొనుము మరియు మమ్మును మీకు అప్పగించుకొనుట అంగీకరించి, మీకు దగ్గర చేసుకొనుము. యేసుక్రీస్తు నామములో ప్రార్థిస్తున్నాము ఆమెన్,

సారాంశం: మోసం ఎప్పుడూ ఆకర్షనీయముగా, నమ్మసక్యముగా,వెలుగు నిండినదిగా కనిపిస్తుంది, కానీ మన హృదయాలు క్రీస్తుకి దూరముగా వున్నపుడే శత్రువు పథకాలు సాధ్యమవగలవు.యేసు క్రీస్తుతో అనుదిన సాన్నిధ్యం – ప్రార్ధన ద్వారా, వాక్యం మరియు సహవాసము ద్వారా మన వివేచన పదునవుతుంది, అది మనలను అసత్యము నుండి రక్షిస్తుంది మరియు నిజమైన వెలుగులో నడిపిస్తుంది. అడ్డదారులు లేక త్వరిత లాభ ప్రమాణములు మనలను శోధించినపుడు, ఆగి, యేసు పై ఆనుకొని, ఆయన సాన్నిధ్యంలో వేరు పారి యుండుడి.

 

(అనుదిన ఆధ్యాత్మిక పరివర్తన, రచయిత. రెవరెండ్. ఇమ్మానువేల్ అరుల్ పాల్. హియర్ మేత్త్యూ 11:28 మినిస్ట్రీస్ తరుపున. ముద్రణ 6.2025)

ప్రకటనలు:

1. మీ శిష్యత్వపు ప్రయాణములో మా సహకారం ఆశించినట్లు అయితే మా వారాంతపు శిష్యత్వపు సమావేశమునకు మీకు మా హృదయపూర్వక ఆహ్వానం – ప్రతి శనివారం జరుగును. ఉదయం 6 గంటలకు. Zoom Link: https://us06web.zoom.us/j/81144235750? pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09.(meeting id:81144235750.passcode:12345)

2. వ్యక్తిగత కౌన్సెలింగ్ కొరకు మమ్మల్ని సంప్రదించండి. విశ్వాసములో మరియు సహవాసములో మీతో కూడా నడువుటకు మేము ఆశిస్తున్నాము. మా వాట్సాప్ గ్రూప్ లో జాయిన్ అవ్వండి మా సమా చారములకై  https://chat.whatsapp.com/FQuH58GtkEEApPCm9gN8no

వ్యక్తిగత కౌన్సెలింగ్ కొరకు :https://scheduler.zoom.us/rev-immanuel-paul/appointment.

Read More →