Article Tamil

Be strengthened by the word of God

Home Category : Article Tamil

அனுதின வேததியானம் :உங்கள் கொள்கைகளைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்

இன்றைய வேததியான குறிப்பு: பிலிப்பியர் 2-5.

“உண்மையாகவே, என் வாழ்க்கையை ஆளுகை செய்து வழிநடத்துவது எது? என் சிந்தனைகள், என்னுடைய உணர்ச்சியின் வெளிப்பாடுகள் மற்றும் முடிவுகளை ஒவ்வொரு நாளும் வடிவமைப்பது எது?” என்று உங்களை ளை நீங்களே கேட்டுக்கொண்டதுண்டா? நாம் நம்முடைய வெளிப்புற தோற்றத்தில் மட்டுமல்லாமல் நம்முடைய உள்ளான இயல்பிலும் தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்டு இருக்கிறோம் என்று வேதாகமம் சொல்லுகிறது. அவருடைய இயல்பு, மகிமை, அன்பு. சத்தியம், மற்றும் நீதி ஆகியவை நம்மூலமாக பிரகாசிக்க வேண்டும் என அவரால் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த மனுகுலம் பாவம் செய்தபோது நாம் அந்த மகிமையை இழந்தோம். ஆனாலும், தேவன் நம்மை அப்படியே விட்டுவிடவில்லை. அவருடைய மகத்தான அன்பினால், இழந்ததை மீட்டெடுக்கவும், அவருடன் நம்மை மீண்டும் இணைக்கவும் அவர் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். கிறிஸ்தவத்தின் உண்மையான நோக்கம். நாம் ஒழுக்க நெறிமுறைகளோடு வாழ்வதோ அல்லது தேவலாயத்திற்குச் சொல்வதோ மட்டுமல்ல அது, தேவனுடன் ஐக்கியமாக இருப்பதைப் பற்றியது. அதாவது, அவருடைய சுவாபமும் கொள்கைகளும் கோட்பாடுகளும் நமக்குள்ளாக நிலைத்து நிற்கும் வரை நாம் மறுரூபமாகப்படுவதையே குறிக்கிறது. இப்படி இருக்க, நாம் அவரோடு இணைய வேண்டும் என்று விரும்பும் தேவன் யார்? இதை வேதாகமம் தெளிவாகக் வரையிட்டு காட்டுகிறது: தேவன் அன்பாகவே இருக்கிறார். அவரே சத்தியம். அவர், சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் இச்சையடக்கம் உள்ளவர். அவர், நியாயமாகவும் இரக்கமாகவும் இருக்கிறார். அவர் நீதி மற்றும் கொள்கைகளும் நெறிமுறைகளும் நிறைந்தவராய் இருக்கிறார். எனவே, அவர் தம்முடைய கொள்கைகளின்படி செயல்படுவதால், அவருடைய கொள்கைகள் நம்முடைய இருதயங்களில் எழுதப்படாவிட்டால் மெய்யாகவே நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்று சொல்ல முடியாது. இதனால் தான் பிலிப்பியர் 2:5 நம்மை இவ்வாறு வலியுறுத்திகிறது. “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.” இதைப்பற்றி நன்றாக சிந்தித்து பாருங்கள். தேவன் நாம் சில விதிகளைப் பின்பற்றுவதை மட்டும் விரும்பவில்லை. நாம் கிறிஸ்துவைப் போல சிந்திக்கவும், உணரவும். செயல்படவும் அவர் விரும்புகிறார். அவருடைய கொள்கைகள் நம்முடைய இருதயங்களில் பதிந்து நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

“கொள்கைகள்” அல்லது “கோட்பாடுகள் என்று நாம் பேசும் போது உண்மையில் அதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும்? ஆக்ஸ்போர்டு அகராதி அதை. “நம்முடைய நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் வடிவமைத்து அவைகளின் தோற்றத்தின் அடிப்படையாக இருக்கும் உள்ளார்ந்த சத்தியம்” என்று வலியுறுத்துகிறது. அது, நீங்கள் ஒரு மனிதராய் யாராய் இருக்கிறீர்கள்? உங்களுடைய குணாதிசயத்தை எது ஆளுகை செய்கிறது? உங்களுடைய சிந்தனைகளை ஊக்குவிப்பது எது? உங்களுடைய நடவடிக்கைகளை உந்துகிறது எது? மற்றும், உங்களுடைய அடிப்படையான அமைப்பு என்னவாய் இருக்கிறது? என்பதே ஆகும். வேறு வார்த்தையில் சொல்வோமனால், உங்கள் ஆத்துமா எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது? உங்கள் அத்துமா கிறிஸ்துவுடனான கோட்பாடுகளால் நிரப்பப்பட்டுள்ளாதா அல்லது உலகக் கோட்பாடுகளால் நிரப்பப்பட்டுள்ளதா? நீதிமொழிகள் 4:23 “ எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவவூற்று புறப்படும்”. நாம் செய்கிற அனைத்தும் நம் இருத்தயத்தின் நிலையிலிருந்து அதன் விளைவாக வருகிறது. நாம் ஒரு நிமிடம் சற்று சிந்தித்துப் பார்ப்போம். கிறிஸ்தவர்களாகிய நாம் நம் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறோமா? நாம் யார் என்றும் தேவனுக்கு விரோதமான எந்த கொள்கைகளை நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் உண்மையாகவே பகுத்தறிந்து ஆராய்ந்து பார்க்கிறோமா? இதை நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால், நாம் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை மெய்யாகவே கிறிஸ்துவுக்குள் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வோம்.

நாம் இயேசுவைப் நோக்கி பார்க்கும்பொழுது தேவனுடைய கொள்கைகளும் கோட்பாடுகளும் செயல்முறையில் நடப்பிக்கப்பட்டதின் பூரணமான உதாரணத்தை காணலாம். அவர் தன்னலமற்றவராகவும், இரக்கமுள்ளவராகவும், வஞ்சகம் அல்லாதவராகவும், தாழ்மையானவராகவும், உண்மையானவராகவும் தைரியம் உள்ளவராகவும். நம்பத்தக்கவராயும் இருந்தார். சமுதாயத்தின் பொது கருத்துக்களும் சிந்தனைகளும் அவரின் நடக்கையை கட்டுப்படுத்தவில்லை. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்புவதற்காக மற்றவர்களை முகஸ்துதி செய்யவோ அல்லது சத்தியத்தை புரட்டவோ இல்லை அவருடைய பதில்கள் எப்பொழுதுமே ஆம் என்றும் இல்லை என்று மட்டுமே இருந்தன. அவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தும் அவர் அன்பாகவே இருந்தார். பிதாவின் சித்தத்திற்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தவராய் இருந்து. அவர் இறுமாப்பை வெளியரங்கம் ஆக்கினார், பலவீனர்களை பாதுகாத்தார். நொறுங்குண்டவர்களை கட்டினார். அவர் தம்முடைய சீஷர்களை அவர்களுடைய பலவீனங்களின் மத்தியிலும் தாங்கினார். அவர் மற்றவர்களுக்காக தன்னையே அர்ப்பணித்திருந்தாலும் மற்றவர்கள் தன்னை தவறாக துஷ்பிரயோகம் செய்து கையாளுவதற்கு அனுமதிக்கவில்லை. தனக்கு சுகமான வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த உலகத்தில் அவர் வாழவில்லை. மேலும், நாம் பழைய ஏற்பாட்டை ஆராய்ந்து பார்த்தால் அதில் இருக்கும் அனைத்து நியாயப்பிரமாணங்களும் தேவனின் குணாதிசயத்தின் பிரதிபலிப்புகளாகவே இருக்கின்றன என்பதை நாம் காண முடியும். புதிய ஏற்ப்பாட்டிலும் இதே கருத்து தொடர்கிறது. அதாவது, சீஷர்களும் அப்போஸ்தலர்களும் கிறிஸ்துவின் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே வாழ்ந்து முடிவுகளை எடுத்தார்கள். அவருடைய குணாதிசயம் இல்லாமல் செயல்பட்ட எவரும் அவரால் நீக்கப்பட்டனர் அல்லது அவரால் சிட்ச்சிக்கப்பட்டார்கள். இதுவே ஆரம்பகால கிறிஸ்தவமும் திருச்சபையும் நிறுவப்பட்டதின் ஒரே அடிப்படையாகும்.

எனவே, இப்போது கேள்வி நம்மை நோக்கி கேட்கப்படுகிறது: நாம் இந்தக் கொள்கைகளின்படி வாழ்கிறோமா? நம்முடைய வார்த்தைகள், உறவுகள், முடிவுகள் மற்றும் மனப்பான்மைகள் அவரைப் பிரதிபலிக்கின்றதாய் இருக்கிறதா? இது எளிதான செயல்முறை அல்ல. நம்மை நாம் உள்நோக்கிப் பார்ப்பது வேதனையாக தான் இருக்கும். ஏனென்றால், நமக்குள்ளாக கிறிஸ்துவுடன் பொருந்தக்கூடாத சில குணாதிசயங்களை கண்டறிவோம். ஆனால், அங்குதான் நம்முடைய மறுரூபமாகப்படுதல் தொடங்குகிறது. எரேமியா 17:10 -ல் “கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை உள்ளிந்திரியங்களைச் ஆராய்கிறவரும் சோதித்தறிகிறவருமாயிருக்கிறன்.” நமக்குள் என்ன தவறு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து அதனை அங்கீகரிக்கும் போது இறுதியில் நாம் அதிலிருந்து குணப்படுவதற்காக தேவனிடம் ஒப்புக்கொடுக்க முடியும். இது ஒரு யுத்தமாக தான் இருக்கும். ஆனால், இதில் போராடுவதற்கு தேவன் நமக்கு உதவி செய்வார். கலாத்தியர் 5:24,25 இப்படியாக நம்மை நினைவூட்டுகிறது. “24. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். 25. நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்.”நாம் தேவனுடைய கொள்கைகளில் நம்மை உறுதிப்படுத்தும் போது சத்துரு தனது பலத்தை இழக்கிறான். ஏனென்றால், தேவனுடைய கொள்கைகள் எங்கு ஆளுகை செய்கின்றனவோ அங்கு அவருடைய பிரசன்னம் ஆளுகை செய்கிறது. நம்முடைய கொள்கைகளை நாம் சீர்படுத்தாமல் நம்முடைய சத்துருவுக்கு எதிராக போராடுவது அர்த்தமற்றது. ரோமர் 8:31 “இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” அவருடைய கொள்கைகள் நமக்குள் வாசம் செய்யும்போது அவர் நம்முடன் இருக்கிறார். ஆனால் நாம் அவருடைய குணாதிசயங்களை எதிர்க்கிறவர்களாய் இருந்தால் அவருடைய பிரசன்னத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? கிறிஸ்துவைப் போல் வாழுவது நமக்கு ஒரு யதார்த்தமான இயல்பான வாழ்க்கையாக மாறும் வரைக்கும் நம்முடைய இருதயங்களை அவர் ஆராய்ந்து அறிவதற்கும், நம்முடைய சிந்தனைகளை சீர் அமைப்பதற்கும், அவருடைய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்முடைய உள்ளான மனிதனுக்குள் எழுதும் படியாகவும் இன்று அவரை நாம் அழைப்போமாக.

இன்றைய சிந்தனைக்கு:

ஒரு கிறிஸ்தவராக, உங்களுடைய இயல்பான நடத்தை முறை என்னதாய் இருக்கிறது? உங்கள் சிந்தனையையும் நடத்தையையும் கட்டுப்படுத்தக்கூடியதாய் இருக்கும் அஸ்திபாரம் எது? எந்தக் கொள்கைகள் உங்களுடைய ஆத்துமாவை ஆளுகை செய்கின்றன? நீங்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களை உடையவர்களாய் இருக்கிறீர்கள்? தேவனுடைய குணாதிசயத்துடன் உங்களுடைய குணாதிசயம் பொருத்தப்பட்டுள்ளதாய் இருக்கிறதா?

ஜெபம்:

பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, நாங்கள் பெரும்பாலும் உம்முடைய குணாதிசயத்தை உடையவர்களாய் இல்லை. நீர் இந்த பூமியில் உதாரணமாய் வாழ்ந்து காட்டின உம்முடைய கொள்கைகளை குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லாமல் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் பெரும்பாலும் எங்களுடைய வாழ்க்கையை மேலோட்டமாக வாழ்ந்து எப்படியோ ஒரு வழியில் எங்களுடைய வாழ்க்கையில் கடந்து சென்றால் போதும் என்று வாழ்கிறோம். எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அல்லது சந்தர்ப்பத்திலும் உம்மைப் போல் செயல்படுகிறோமா என்று சற்று நின்று நாங்கள் சிந்திப்பதில்லை. உண்மையாகவே எது எங்களுடைய அஸ்திபாரமாய் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள நீர் தந்த இந்த வாய்ப்புக்காக நன்றி சொல்லுகிறோம். எங்களுடைய இருதயத்தின் மேலும் ஒவ்வொரு சிந்தனை முறைகளுக்கு மேலும் உம்முடைய கொள்கைகள் மேலானதாய் ஆட்சி செய்து அவைகளை கட்டுப்படுத்துவதாக. உம்முடைய குணாதிசயமும் சாரம்சமும் எங்கள் ஆத்துமாவை ஆளுகை செய்வதாக. இதன் நிமித்தம் உம்முடைய சுபாவம் எங்களுக்குள் இருப்பதினால் நாங்கள் மற்றவர்களை நிலை நிறுத்துவோமாக. எங்கள் இராஜாதி இராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் இதைக் கேட்கிறோம் நல்ல பிதாவே ஆமென்.

இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது:

கிறிஸ்தவம் என்பது வெறும் ஜெபம் செய்வது, வேதாகமத்தை வாசிப்பது, சபைக்கு செல்லுவது, கிறிஸ்தவ பாடல்களை கேட்பது மற்றும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது மட்டுமல்ல. அது, அதை விட மிகவும் ஆழமானது. அது, நம்மை எது கட்டுப்படுத்துகிறது என்பதின் பிரதிபலிப்பாகும். கிறிஸ்துவின் சிந்தையானது நம்முடைய சிந்திக்கும் முறைகளை கட்டுப்படுத்துமானால் நம்முடைய வாழ்க்கையில் அவரோடு பொருந்தாத எல்லா காரியங்களையும் நாம் எளிதாக களைப்புடுங்க முடியும். நாம் அநேக நேரம் நம்முடைய பொருளாதாரம். உறவுகள், தொழில்கள், எதிர்காலம் போன்றவைகளில் தோல்வி அடைந்து இருக்கிறோம். ஏனென்றால், நம்முடைய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சீர் பொருத்தாமல் இவைகளை அடைய நாம் முயற்சிக்கின்றோம். இது விதைகளை நட்டு, நீர்ப்பாசனம் செய்து. அதை வளர்த்து. பழத்தை உற்பத்தி செய்யாமல் பழங்களை விரும்புவது போன்றதாகும். நமது குணாதிசயத்தின் அஸ்திபாரம் சீரமைக்கப்பட்டு அவரில் நிலைநிறுத்தப்படாவிட்டால், நாம் கட்டுகிற எதுவும் பெரும் வெள்ளத்தில் நிலை நிற்காது பெரும்பாலும், கவலைக்கிடமாக, நாம் கட்டிடத்தில் கவனம் செலுத்தி அஸ்திபாரத்தை மறந்து விடுகிறோம். நீதிமொழிகள் 4:23 சொல்வது போல் நமது வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் அனைத்தும் நம்முடைய இருதயத்தின் நிலைப்பாட்டின் விளைவாகும். நாம் விடுதலைக்காக ஜெபிக்கும்போது, தேவன் எப்போதுமே நம்முடைய குணாதிசய வளர்ச்சிக்கு ஏதுவாக பதிலளிப்பார். எனவே, கிறிஸ்தவ மனப்பான்மை என்பது பிரச்சனைகளைத் தீர்க்க பாடுபடுவதற்குப் பதிலாக  தன்னுடைய கொள்கைகளுக்காகவும்  நெறிமுறைகளுக்காகவும் அமைதியுடனும் விடாமுயற்சியுடனும் செயல்படுவதாகும்.

(2025 நவம்பர் மாதம் 3 அன்று மத்தேயு 11:28 ஊழியத்தின் சார்பாக சகோதரி ஜெஸிந்த் ஏஞ்சல் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி லல்லியால் மொழிப்பெயர்க்ப்பட்டது).

அறிவிப்புகள்:

1. உங்களுடைய சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவைத் தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இணைப்பு:https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNSINXYWIZ WmNnb3EvQT09

(சந்திப்பு ஐடி: 811 4423 5750. கடவுச்சொல்: 12345).

2.  தனிப்பட்ட ஆலோசனை பெறுவதற்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்களுடன் விசுவாசத்திலும் மற்றும் ஐக்கியத்திலும் நடக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

  • எங்களுடைய ஊழியங்கள் மற்றும் கூடுகைகளை குறித்த அறிவிப்புகளுக்கும் மற்றும் தகவல் தொடர்புக்கும் எங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேரவும்:  https://chatwhatsapp.com/FQuH58GtkEEApPCm9gN8no
  • நேரடி ஆலோசனை பெற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால், கீழே உள்ள இணைப்பை உபயோகித்து ஏற்பாடு செய்யுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul-appointment

Click Here to Download as PDF -> Tamil

Read More →

அனுதின வேததியானம் : நம்முடைய விடுதலைக்காக நம் ஆத்துமா குணமடைதல்.

இன்றைய வேததியானத்தின் நோக்கம் சங்கீதம் 41:4.

நம்முடைய வாழ்க்கையில் நாம் அடிக்கடி குழப்பங்களையும் அல்லது சிக்கலான சூழ்நிலைகளை சந்திக்கும் போது நாம் அவற்றிற்கு எப்படி தீர்வு காணலாம் மற்றும் அவைகளை எப்படி மேற்கொள்ளலாம் என்று சிந்திக்கிறோம். நாம் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கோணத்தையும் ஒரு தீர்வைக் கண்டறிவது அல்லது ஒரு பணியை நிறைவு செய்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்வதையே நோக்கமாக வைத்து அணுகுகிறோம். மனிதர்களாகிய நாம், நாம் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பதிலைத் தேடவேண்டும் என்று இயல்பாகவே அமைக்கப்பட்டு இருக்கிறோம். இது தினசரி சமையல், வேலை, படிப்பு, விட்டிற்கு தேவையான உபகரணங்களை வாங்குவது போன்ற எளிய விஷயங்களாக இருக்கலாம் அல்லது திருமணப் பிரச்சனைகள், உடல்நலக் குறைபாடுகள், பொருளாதார பிரச்சனைகள் போன்ற முக்கியமான விஷயங்களாகவும் இருக்கலாம். இவ்வாறு எந்தவொரு சூழ்நிலையிலும், நாம் அதனைப் பகுத்தறியவும் அதற்க்கான காரணத்தை அறிந்து கொள்வதிலும், பதில்களைத் தேடுவதிலும் மற்றும் அதற்கான தீர்வைக் கண்டறிவதில் மட்டுமே நம்முடைய முழுமையான ஒருங்கிணைந்த கவனத்தை செலுத்துகிறோம். இந்தக் கவனத்துடன் இதற்கான பதில்களையும், விடுதலையையும் நாடி நாம் தேவனிடம் அதற்காக ஜெபிக்கிறோம். நம்முடைய கவனம் வெளிப்புறமான பதில்களின்மேல் இருக்கிறது. மாறாக இதற்கான பதில் உட்புறமானதாய் இருக்கலாமா? மத்தேயு 11:28.30 28. “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்: நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 30 என் நுகம் மெதுவாயும். என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.” ஏன் தேவனாகிய கரத்தர் நமது சுமைகளையும் வலிகளையும் நம்முடைய ஆத்துமாவுடன் இணைத்துப் பேசுகிறார்? நம்முடைய வெளிப்புற பிரச்சனைகளுக்கு ஆத்துமாவில் இளைப்பாறுதல் பெறுவது எவ்வாறு நமக்கு தீர்வாக இருக்க முடியும்?.

ஆத்துமா என்றால் என்ன? ஆத்துமா என்பது “மனிதர்களுக்குள் உட்ப்படுதப்பட்ட ஆவிக்குரிய கொள்கை அல்லது ஆவிக்குரிய மற்றும் நீதிநெறிமுறையின் வலியுறுத்தல் அல்லது மனிதர்களின் நெறிமுறையையும் மற்றும் இயல்பான உணர்ச்சிப் பண்பையும் குறிக்கிறது.” (மேரியம் வெப்ஸ்டர் அகராதி). நமக்குள்ளாக உட்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டிருக்கும் ஆவிக்குரிய, நீதிநெறிமுறைக்குரிய, மற்றும் உணர்ச்சிகளுக்குரிய கொள்கைகளே நம்முடைய ஆத்துமாவாக இருக்கிறது. இது நமது வெளிப்புற சரீரத்திற்கு அப்பார்ப்பட்டு செல்லுகிறது. இது மனிதனுடைய சரீரத்தைத் தாண்டி அவனுக்கு தனித்துவத்தை கொடுக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது. இப்படியிருக்க, நாம் எவ்வளவு தூரம் ஆத்துமாவின்மேல் கவனம் செலுத்துகிறோம்? ஆத்துமா என்பது அன்பு, ஆசைகள், உணர்ச்சிகள் , விருப்பங்கள், மனப்பான்மை, நெறிமுறை, கொள்கைகள் மற்றும் குணாதிசயங்களின் இருப்பிடமாகும். நம்முடைய ஆத்துமா ஒன்று தேவனை கவரச்சிசெய்வதாய் அல்லது வெறுப்பூட்டுவதாய் இருக்கிறது. நம்முடைய பாவங்கள் ஆத்துமாவிலிருந்து உண்டாகின்றன. இது வேறு விதமாக சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய ஆத்துமாவே நம்முடைய குணாதிசயமாக இருக்கிறது. குணாதிசியம் என்பது “ஒருவரை மற்றவரிடமிருந்து தனித்துவமாகக் வெளிப்படுத்தக்கூடிய மனநிலைப் பண்புகள் மற்றும் நெறிமுறை சார்ந்த பண்புகள் ஆகும்” (ஆக்ஸ்போர்ட் அகராதி). நாம் நம்முடைய வாழ்க்கையை எவ்வளவு சிறப்பாக வாழ்கிறோம் என்பதைவிட நம் குணாதிசயங்களைப் பற்றியே தேவன் அதிக அக்கறை உள்ளவறாக இருக்கிறார். ஆகவே நம் ஆத்துமாவில் நாம் குணமடைய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதையே அவர் விடுதலையாக கருதுகிறார். சங்கீதம் 41:4 கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன். என ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.

நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு தடையையும் ஒரு குறிக்கோளோடு தேவன் வைக்கிறார். அவர் நம்முடைய பாதைகளில் வைக்கும் ஒவ்வொரு கடினத்துக்கும் ஒரு குறிப்பான திட்டத்தை வைத்திருக்கிறார், நமது ஆத்துமாவில் இருக்கும் குறிப்பான பலவீனங்கள் மற்றும் குறைகளை சரி செய்யும்படிக்கு அவர் நம்முடைய எல்லா சூழ்நிலைகளையும் தனிப்பட்ட முறையில் ஒழுங்குபடுத்துகிறார். நாம் ஒரு கணக்காளாராக மாற விரும்பினால் 12 ஆம் வகுப்பில் குறிப்பிட்ட கணிதம் மற்றும் கணக்கியல் படிப்புகளை தேர்வு செய்து படிக்கிறோம். அதுபோலவே, தேவன் நமக்குள்ளாக ஒரு குறிப்பிட்ட குணாதிசய வளர்ச்சியைக் காண்பதற்காகவும் அல்லது நம்முடைய ஆத்துமாவிலுள்ள ஒரு குறிப்பிட்ட பாவத்தை சரி செய்வதற்காவும் அவருடைய கரங்களில் அதற்காக பயிற்றுவிப்பதற்கு நம்மை ஒப்புக்கொடுப்போம் என்ற நம்பிக்கையில் அவர் நமது வாழ்வில் ஒரு தனிப்பட்ட சூழ்நிலையை உருவாக்குகிறார். மாறாக, அந்த சூழ்நிலைகளில் தேவன் நம்முடைய குணாதிசயத்தை கட்டுவதற்க்காக கொடுக்கும் பயிற்சி என்று எண்ணுவதற்கு பதிலாக அவைகளை நீக்குவதற்காக போராடுகிறோம். நம்முடைய ஆத்துமா குணமடையாமல் நாம் தேவனின் முகத்தை எப்படி பார்க்க முடியும்?.

இன்றைய சிந்தனைக்கு:

என்னுடைய வாழ்க்கையின் முதன்மையான நோக்கம் என்னதாய் இருக்கிறது ? நான் என்னுடைய சரீரத்தைவிட என்னுடைய குணத்தை அதிகமாக மதிக்கிறேனா? என்னுடைய ஆத்துமா குணமடைய நான் துன்பப்படத் தயாராக இருக்கிறேனா? அல்லது குணமடைதலை நிராகரித்து என்னுடைய பிரச்சனைகளுக்கு விரைவான தற்காலிக தீர்வுகளைக் காண விரும்புகிறேனா?

ஜெபம்:

பரோலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, எங்களுக்குள்ளாக காணமுடியாத பகுதியாய் இருக்கும் எங்கள் ஆத்துமாவை குறித்து நாங்கள் அறியாமை உள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் எங்களுடைய நெறிமுறைகள், ஒழுக்கங்கள், கொள்கைகள், அன்பு, ஆசைகள், நடத்தைகள், மனப்பான்மை மற்றும் குணாதிசயங்களுக்கு மிகவும் குறைந்த கவனத்தையே செலுத்துகிறோம். எங்களுடைய வாழ்க்கையை சுலபமாக நகர்த்தி செல்வதிலே அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அதை நிறைவேற்றுவதற்கு எந்த விலையையும் செலுத்தி உறுதியுடன் போராடுகிறோம். எங்களுடைய ஆத்துமா உம்மோடு இணைக்கப்பட வேண்டும் என்று நீர் விரும்புகிறதினால் அது குணப்படுத்தப்படவேண்டும் என்பதை நாங்கள் மறந்துவிட்டோம். எனவே எங்கள் ஆத்துமா குணப்படுதலுக்கு நேராக திருப்பப்பட வேண்டும் என விரும்புகிறோம். நீர் எங்களுடைய ஆத்துமாவை குணப்படுத்தாவிட்டால் நாங்கள் உம்முடைய பிள்ளைகளாக இருக்க முடியாது. நாங்கள் எங்களுடைய உள்ளான குணப்படுதலை நிராகரித்ததின் நிமித்தம் பாவம் செய்திருக்கிறோம். கர்த்தாவே, எங்களை மன்னித்து, எங்களுடைய ஆத்துமாவில் குணமடைவதற்காக ஒவ்வொரு நாளும் உம்முடைய இரக்கத்தை பெற்றுக்கொள்வதற்கு எங்களுக்கு நினைவூட்டும்.

இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது:

நம்முடைய ஆத்துமாவை சீரபொறுத்துவதே தேவனுடைய முதன்மையான நோக்கமாக இருக்கிறது. ஒரு சீர்கெட்ட ஆத்துமா தேவனோடு ஒருபோதும் ஒருங்கிணைந்து இருக்க முடியாது. எனவே நமக்குள் இருக்கும் உள்ளான ஆவிக்குரிய ஜீவன் குணமாக்கப்படுவதே மெய்யான விடுதலையாகும். நம் வாழ்க்கையில் தோன்றும் ஒவ்வொரு சூழ்நிலையும் ஒரு அடிப்படையான பிரச்சனையிலிருந்தே உருவாகிறது. நமக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் நாம் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றதினால் அதே நாளிலே அது குணமடைய வேண்டும் என்று எதிர்பார்த்து செல்லுவதில்லை. நாம் எலும்பு முறிவிலிருந்து குணமடைய மருத்துவரின் பரிந்துரையின்படி அனைத்து சோதனையையும் மற்றும் 2 மாதங்கள் சிகிச்சையையும் நாம் மேற்கொள்கிறோம். இதன் மூலம் வரும் வலி மற்றும் வீக்கம் என்பது எலும்பு முறிவிற்க்கான அடிப்படை அறிகுறிகளாக இருந்தாலும், நம்முடைய வலி மற்றும் வீக்கத்திற்கு நாம் சிகிச்சை பெறாமல் எலும்பு முறிவிற்கே சிகிச்சை பெறுகிறோம். அது போலவே, நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வதற்கு பதிலாக நம்முடைய பரம மருத்துவரிடம் சென்று அவருடைய சிகிச்சையின் மூலம் நமது சீர்கெட்ட உள்ளான சுய நெறிமுறையற்ற ஆத்துமாவில் மெய்யான விடுதலையை அவர் மூலமாய் பெற்றுக்கொள்வதற்கு அர்ப்பணிப்போமாக.

(2025 அக்டோபர் மாதம் 26 அன்று மத்தேயு 11:28 ஊழியத்தின் சார்பாக சகோதரி ஜெஸிந்த் ஏஞ்சல் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபளிப்பு சகோதரி லல்லியால் மொழிப்பெயர்க்ப்பட்டது).

அறிவிப்புகள்:

1. உங்கள் சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவைத் தேடுகிறீர்கள் என்றால். ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்கள் வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இணைப்பு:https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNSINXYWIZ WmNnb3EvQT09

(சந்திப்பு ஐடி: 811 4423 5750. கடவுச்சொல்: 12345).

2. தனிப்பட்ட ஆலோசனைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்களுடைய நம்பிக்கையிலும் மற்றும் கூட்டுறவிலும் உங்களுடன் நடக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

  • புதுப்பிப்புகள் மற்றும் தகவல்தொடர்புக்கு எங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேரவும்:  https://chatwhatsapp.com/FQuH58GtkEEApPCm9gN8no
  • நேரடி ஆலோசனை பெற்றுக்கொள்ள விரும்பினால் கீழே உள்ள இணைப்பில் திட்டமிடுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul-appointment

Click Here to Download as PDF ->Tamil

Read More →

அனுதின வேததியானம்: கடமை, பொறுப்பு, மற்றும் இறக்கம்.

இன்றைய வேததியானத்தின் நோக்கம் :உபாகமம் 21: 1-9, லூக்கா 10 : 25 -37.

தேவன், எந்தவிதமான குழப்பமான சூழ்நிலையிலும் நீதியைக் குறித்து எவ்வளவு அக்கறை உள்ளவராக இருக்கிறார் என்பதைப் பற்றி நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? உபாகமம் 21:1-9 ல், கொலை செய்யப்பட்டு கிடந்தவன் யார் என்றும் அவனைக் கொன்றவன் இன்னான் என்றும் தெரியாத ஒரு சம்பவம் இருக்கிறது. இச்சமயத்தில், அந்த சமுதாயத்திற்கு ஒரு பொறுப்பு இருந்தது – அதாவது, நடந்த தவறை அங்கீகரித்து, மரித்தவரை கனம்பண்ணி, மற்றும் குற்றமில்லாதவர்கள் மேல் பழி சுமத்தப்படாமல் இருக்கும் படியாக பார்த்துக் கொள்ளுவதுமாய் இருந்தது இது வெறும் ஒரு சடங்காக அல்லாமல், “எவ்வளவு சிரமமான சூழ்நிலையாக இருந்தாலும், அல்லது ஒரு நபர் தனக்காக பேச முடியாத சூழ்நிலையிலும் கூட நீதியே முக்கியமானதாகும் என்று தேவன் வெளிக்காட்டுவதாகும்.

பல நூற்றாண்டுகளுக்கு பின்னர், இயேசு கிறிஸ்து நல்ல சமாரியனுடைய உவமையின் மூலம் இந்த கருத்தை வெளிச்சமிட்டுக்காட்டினார் அந்த சமாரியன், வேறு யாரேனும் உதவ முன்வரவேண்டும் என்றோ அல்லது அந்த குற்றுயிராக கிடந்த மனிதன் தானாகவே அவரிடத்தில் உதவி கேட்க வேண்டும் என்றோ காத்திருக்கவில்லை. அவன், அந்த மனிதனுடைய தேவையை பார்த்து, அவனுக்கு உதவுவதற்கு முன்வந்தது மட்டுமல்லாமல், தைரியத்துடனும், இரக்க குணத்துடனும் செயல்பட்டான். இதன் மூலம், இயேசு கிறிஸ்து, பொறுப்பேற்றுக்கொள்வது என்பது நம்முடைய நண்பர்களுக்காகவோ அல்லது நமக்கு தெரிந்த மக்களுக்காகவோ மட்டுமல்லாமல் அது அறியாதவர்களுக்கும், கவனிக்கப்படாதவர்களுக்கும், புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும்  பொருந்தக்கூடியது என்று நமக்கு காட்டுகிறார்.

இன்றைக்கு, இந்த அழைப்பானது இன்னும் அவசரமானதாக இருக்கிறது. நம்மை சுற்றிலும் வன்முறை, வறுமை, புறக்கணிக்கப்படுவது, மற்றும் மக்கள் முறைகேடுபடுத்தப்படுதல் போன்ற துன்பங்கள் எல்லா இடத்திலும் இருக்கிறது. இயேசு கிறிஸ்து. இதனை பார்த்து மனம் நொறுங்குகிறார். எனவே, இந்த கேள்வியானது நம்மை நோக்கிக் கேட்கப்படுகிறது: நாம் பொறுப்பேற்றுக்கொள்ளுவதற்கு தயாராக இருக்கிறோமா? அவருடைய கூக்குரலை கேட்டு உண்மையாகவே அதற்காக நாம் ஏதேனும் செய்ய விரும்புகிறோமா? விசுவாசம் என்பது நாம் எதை நம்புகிறோம் என்பதை பொருத்தது மட்டுமல்ல. மாறாக அது, நீதிக்கடுத்த தைரியம் கொள்வதும், தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்களை பார்ப்பதற்கு விருப்பம் கொண்டு, அங்கீகரித்து, அவர்கள் சார்பாக செயல்படுவதுமே ஆகும்.

இன்றைய சிந்தனைக்கு:

உங்கள் வாழ்க்கையிலோ அல்லது துன்பப்படுகிறவர்கள் கண்டுகொள்ளப்படாதவர்கள், சமுதாயத்திலோ அல்லது உதவி தேவைப்படுகிறவர்களாக இருக்கிறவர்கள் யார்? உங்களால் முயன்ற சிறிய வழிகளில் இரக்கமுள்ளவர்களாகவும் நீதியுள்ளவர்களாகவும் இன்று நீங்கள் எவ்வாறு முன்வந்து உதவமுடியும்?

ஜெபம்:

பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே, இரட்சகரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் உமக்கு முன்பாக ஜெபத்தில் வருகிறோம். அநேக நேரங்களில் கவனிக்கப்படாமலும் காணப்படாதவைகளுமாய் இருக்கிறவைகளை பார்க்கக்கூடிய கண்களையும், அதற்காக தயக்கமின்றி செயல்படக்கூடிய இருதயத்தையும் எங்களுக்குத் தாரும் நீதி மற்றும் இரக்கத்திற்கான உமது கூக்குரலுக்கு பதிலளிக்கிறவர்களாய் இருக்கவும். ஒடுக்கப்பட்டவர்களை கவனிப்பதற்கும், மற்றும் அநேகர் மறுபுறம் திரும்பும் சூழ்நிலைகளில் நாங்கள் பொறுப்பெடுத்து செயல்படவும் எங்களுக்கு உதவும். இராஜாதி இராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் இணையற்ற நாமத்தின் மூலம் இவைகளை கேட்டுக்கொள்கிறோம். எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமேன்.

இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது:

மெய்யான விசுவாசம் என்பது நம்மை பொருப்பெடுக்கவும், செயல்படவும் அழைக்கிறது உபாகமத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தவன் யார் என்று தெரியாதது போலவும், சமாரியனால் உதவப்பட்ட குற்றுயிராய் கிடந்த மனிதனைப் போலவும் கவனிக்கபடாமல் புறக்கணிக்கப்பட்ட அநேகர் நம்மைச் சார்ந்து இருக்கிறார்கள் ஒவ்வொரு நாளும் அவருடைய நீதி மற்றும் இரக்கத்தினை பார்ப்பதற்கும், அதனை செயல்படுத்துவதற்கும், அதின்படி வாழ்ந்துகாட்டுவதற்கும் நம்மை தேவன் அழைக்கிறார்.

(2025 அக்டோபர் மாதம் 15 அன்று மத்தேயு1128 ஊழியத்தின் சார்பாக Rev இம்மானுவேல் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு, சகோதரி லல்லியால் மொழிபெயர்க்கப்பட்டது).

அறிவிப்புகள்:

1. எங்கள் வேத்தியானக் கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் பெற விரும்பினால், தயவுசெய்து நீங்கள் எங்கள் (மின்னஞ்சல் நிரப்பவும். மூலம் பெறப்படும்) குறுகிய கேள்வித்தாளை பிரதிபலிப்புகள் ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படுகின்றன. மேலும் அவை நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

2. உங்கள் சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவைத் தேடுகிறார்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்கள் வாராந்திர சீஷத்துவ கூட்டத்தில் சேர உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இணைப்பு: https://us06web.zoom.us/j/81144235750? pwd=EsfuED6du4T8YMjFdSXd‌pvWuPXpCOW.1
(சந்திப்பு ஐடி: 811 4423 5750. கடவுச்சொல்: 12345).

3. தனிப்பட்ட ஆலோசனைகளுக்கு, தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
https://us06web.zoom.us/j/81144235750?pwd=EsfuED6du4T8YMjFdSXd‌pvWuPXpCOW.1
உங்களுடைய நம்பிக்கையிலும் மற்றும் கூட்டுறவிலும் உங்களுடன் நடக்க நாட்கள் எதீர்நோக்குகிறோம்.

Read More →

தேவனுடைய நற்செய்தியின் மிகுந்த சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ளுதல்

நற்செய்தி என்பது வெறும் செய்திமட்டுமல்ல. அது நம்முடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒன்றாகும். இது நமக்கு கற்றுக்கொடுப்பதோடு நின்றுவிடாமல் மேலும் நம்மை விடுதலையடையச்செய்து ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் இன்னும் நெருங்கி சேர்க்கிறதாயிருக்கிறது. யோவான் 4: 28-30 ம் வசனங்களிலிருந்து சமாரிய ஸ்திரீயினுடைய நிகழ்வுகழ்வுகளை சிந்தித்துப்பாருங்கள். இயேசு கிறிஸ்து அந்த சமாரிய ஸ்திரீயை சந்தித்த பிற்பாடு, அவள் பெற்ற அனுபவங்களை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற கட்டளைக்காகவோ எப்படிப்பட்ட அல்லது எடுத்துக்கூற வேண்டும் அதை என்ற விதத்தில் திட்டத்திற்க்காகவோ அவள் காத்திருக்கவில்லை. அவள் உடனடியாக அந்த நற்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவதற்காக ஓடினாள் எல்லையில்லாத அவளுடைய மனமகிழ்ச்சியானது தொற்றுபோல மற்றவர்களுக்குள்ளும் பரவக்கூடியதாக இருந்தது. இந்தவிதமாகவே ஒரு நற்செய்தியானது இயங்குகிறது அதை நமக்கென்று மட்டும் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களிடத்திலும் பகிர்ந்துகொள்வதற்க்காகவே கொடுக்கப்பட்டுள்ளது.

அவளுடைய செய்கையை கவனித்துப்பாருங்கள்: அவள் அதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதற்கு தனிப்பட்ட நுட்பங்கள் அல்லது திறமைகளை வளர்க்கவில்லை. நற்செய்தியை ஒருவர் ஏற்றுக்கொள்வதென்பது தேவனாகிய கர்த்தருடைய செயலேயன்றி அதை தன்னுடைய வேலையாக எண்ணி அவள் கவலைப்படவுமில்லை. அவள் மிகவும் சாதாரணமாக எளிமையுடன் கூடிய நம்பிக்கையான விசுவாசத்தின் மூலமாக அதை செய்தாள் தேவனிடத்திலிருந்து நற்செய்தியை நாம் பெற்றுக்கொள்ளும்போது அது நம்மை மீட்டுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் நம்முடைய உள்ளான மனிதன் மறுரூபமாக்கப்படுவதன் மூலம் நமக்குள்ளிருக்கும் இயேசு கிறிஸ்துவை வெளியரங்கமாக பிரதிபலிக்கக் கூடிய குணாதிசயங்களை நமக்குள்ளாக உருவாக்குகிறது.

இயேசு கிறிஸ்து ,தேவனை விசுவாசிக்கிறவனுக்குள்ளாக ஜீவ தண்ணீரின் ஊற்றானது இருக்கிறது என்று யோவான் 4 -14 ம் வசனத்தில் கூறுகிறார். இந்த ஜீவ தண்ணீரின் ஊற்றானது உள்ளிருந்து வெளிப்புறமாக பாய்ந்து செல்லும் ஆகையால் அதை நமக்குள்ளாக தேக்கி வைக்க முற்படும் பொழுது அது ஒரு நீரூற்றினை அடைத்து வைப்பது போன்ற தீங்கிற்கு ஒப்பானதாகும்.

லோத்துவை நினைவில் கொள்ளுங்கள் அவன் ஆபிரகாம் தேவனாகிய கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவதை பார்த்தும் அதைபற்றி வெளியே பேசாமல் சோதோமில் அமைதியாக வாழ்ந்துவந்தான் அதைப்பற்றி அவன் பேச முன்வராத காரணத்தினால் அவன் பெற்றுக்கொண்ட எல்லாவற்றையும் இழக்க நேரிட்டது அதுபோலவே தேவனாகிய கர்த்தரின் மூலமாக நமக்கு கொடுக்கப்பட்டதை மற்றவர்களுடன் பகிரவில்லையானால் அதை நாமும் இழக்க நேரிடும்.

மத்தேயு 25:14 – 30 ல் இயேசு கிறிஸ்து, இதை பற்றி தெளிவாக கூறுவது என்னவென்றால், தேவனாகிய கர்த்தரால் நமக்கு கொடுக்கப்பட்டதை கொண்டு நாம் பெருக்கமடைய செய்யும் போழுது அது இன்னும் கொடுக்கப்படும். அப்படியல்லாமல் அதை மறைத்து வைப்போமேயானால் நம்மிடத்திலுள்ள கொஞ்சமும் எடுத்துக்கொள்ளப்படும். நற்செய்தியானது பெரும்பாலும் “விலையேறப்பெற்றது” என்று உலகத்தால் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் அது மிகவும் வல்லமையுள்ளதாகும். அந்த சமாரிய ஸ்திரீனுடைய எளிமையுள்ள சாட்சியானது மற்றவர்களையும் கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தியது – இது நம்முடைய மனமகிழ்ச்சியை பகிர்தலினுடைய முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துகிறது.

ஆகையால் நாம் நற்செய்தியை பெற்றுக்கொண்டு அதன் மூலம் மறுரூபமடைந்து அதனை விசுவாசத்துடன் மற்றவர்களிடத்தில் பகிர்ந்துகொள்ளக்கடவோம் என்பதை நம் நினைவில் கொள்வோம். உங்களுடைய வாழ்க்கையின் மூலமாக தேவனாகிய கர்த்தர் அதை பெருக்குவார் என்று நம்பிக்கையாயிருங்கள் உங்களுடைய சந்தோஷம், ஜீவ தண்ணீரைப்போல பெருகி பாய்ந்து ஓடக்கடவது.

சிந்தனைக்கு:

இன்று உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்: தேவனாகிய கர்த்தர் எனக்கு கொடுத்த சந்தோஷத்தையும், வாழ்க்கையையும் தடுத்து வைத்திருக்கிறேனா? எது அவருடைய அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள என்னை தடுக்கிறது ? சில நேரங்களில் நம்முடைய பயம், தாழ்வுமனப்பான்மை, மற்றும் நான் அதற்கு தயாராக இல்லை” என்ற எண்ணங்களே ஆகும். ஆனால் அந்த சமாரிய ஸ்திரீயானவள் நமக்கு நினைவூட்டுவது என்னவென்றால்: எளிமையுள்ள விசுவாசம் மட்டுமே போதுமானது மற்றவைகளெல்லாம் தேவனாகிய கர்த்தரால் பார்த்துக்க்கொள்ளப்படும் என்பதே.

ஜெபம்:

பரலோகத்திலுள்ள எங்கள் பிதாவே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்வதாவது நாங்கள் உம்மாலே மிகுதியாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தும் பல நேரங்களில் சுயநலமாக வாழ்ந்து உம்முடைய இராஜ்யத்தை விட்டு வழி விலகி செல்கிறவர்களாக இருக்கிறோம். நீர் என்னுடைய இருதயத்தில் ஊற்றிய ஜீவ தண்ணீருக்காக நன்றி செலுத்துகிறேன். நீர் எனக்கு கொடுத்த நற்செய்தியின் சந்தோஷத்தை நான் எந்த வித தயக்கமோ அல்லது பயமோ இல்லாமல் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள எனக்கு உதவி செய்யும். எளிமையுள்ள ஒரு சாட்சியம் கூட உணர்வடையச்செய்வதாகவும் வாழ்வை மாற்றக்கூடியதாகவும் இருக்கும் என்று நான் அறிந்துக்கொள்ளவும் என்னுடைய வாழ்வில் உம்முடைய முடிவுகள் ஏதுவாயினும் அதை நம்புவதற்க்கு கற்றுத்தாரும். ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவே தைரியத்தினாலும், அன்பினாலும் நிரப்பி அதனால் உம்முடைய ஆசீர்வாதமானது என் வழியாக மற்றவர்களுக்கும் கிடைக்கும்படி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

கற்றுக்கொள்வதற்கு:

கிறிஸ்துவை அறிந்துகொள்வதின் சந்தோஷமானது உட்புறம் இருந்து வெளிப்புறமாக வழிந்தோடும் நீரூற்றுக்கு ஒப்பானது. தேவனாகிய கர்த்தரால் உங்களுக்கு கொடுக்கப்பட்டதை பகிர்ந்துகொள்ள வேண்டும் உங்களுடைய சாட்சி, உற்சாகம், அன்பு இவைகளே ஆகும். பூரணப்படுதலுக்காவோ அல்லது அனுமதிக்காகவோ காத்திருக்க வேண்டாம். உங்கள் இருதயம் சந்தோஷத்தினால் நிரம்பி வழியக்கடவதாக அதை தேவனாகிய கர்த்தர் பெருக்கமடைய செய்வார் என்பதை நம்புங்கள்.

(அக்டோபர் மாதம் 09.10.2025 அன்று மத்தேயு11:28 ஊழியத்தின் சார்பாக சகோதரி ஜலஜாக்ஷி அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபளிப்பு சகோதரர் டேவிட் மற்றும் சகோதரி அபிகேலால் மொழிபெயர்க்கப்பட்டது).

அறிவிப்புகள்:

1. எங்கள் வேததியானக் கட்டுரைகளை நீங்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து பெற விரும்பினால், எங்களுடைய சிறு வினாத்தாளை நிரப்பவும். இந்த சிந்தனைகள் ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படுகின்றன. மேலும் அவை உங்கள் இன்பாக்ஸுக்கு நேரடியாக அனுப்பப்படும்.

2 உங்கள் சீஷத்துவப் பயணத்தில் ஆதரவு தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்கள் வாராந்திர சீஷத்துவ அமர்வுகளில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். இணைப்பு:https://us06web.zoom.us/i/811442357507pwd=EsfuED6du4T 8YMjFdSXdpvWuPXpCOW.1 (சந்திப்பு ஐடி: 811 4423 5750.கடவுக்குறியீடு:  12345).

3. தனிப்பட்ட ஆலோசனைக்கு, தயக்கமின்றி எங்களைத் தொடர்பு கொள்ளவும் விசுவாசத்திலும் ஐக்கியத்திலும் உங்களுடன் நடக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

Click here to Download as PDF -> Tamil

Read More →

தலைப்பு :ஒரு உறவு என்பது மதத்திற்கு அப்பார்ப்பட்டது என்பதை தியானித்தல்

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக!. நீங்கள் தேவ சமாதானத்துடன் சிந்திக்கவும் தேவனாகிய கர்த்தருடன் நீங்கள் இன்னும் நெருங்கவும் இந்த தினசரி தியானம் உங்களுக்கு உதவியாக இருக்கும்படி அவருடைய சமூகத்தில் உங்களுக்காக ஜெபிக்கிறேன்.

நாம் அறிந்திருக்கிறபடி கிறிஸ்தவம் என்பது ஒரு மதமாகத்தான் இன்றும் எல்லாராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் சத்தியத்தின்படி கிறிஸ்தவம் என்பது விதிகளைப் பின்பற்றுவதோ, நமக்குள் இருக்கும் நமது பழைய முறைமைகளின் வழக்கத்தைப் பின்பற்றுவதோ அல்லது நம்முடைய சுயமுயற்சியினால் நம்மை நாமே சரி செய்வதோ அல்லாமல் நாம் இயேசு கிறிஸ்துவோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் உறவைப் பற்றியே குறிக்கிறது. தேவன் தம்முடைய ஜீவனை நமக்குள் நிரப்ப வேண்டும் என விரும்புகிறபடியால் நம்முடைய இருதயம் ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருக்கின்ற போது நம்முடைய புறம்பான அலங்காரத்தினை அவர் நம்மிடத்தில் விரும்புகிறதில்லை.

எரேமியா வாழ்ந்த நாட்களை சிந்தித்து பாருங்கள், அனனியா போன்ற கள்ளத்தீர்க்கதரிசிகள் புறம்பான விடுதலை மற்றும் செழிப்பினை மையமாக கொண்டு தேவனுடைய ஆசீர்வாதமானது நிர்ணயிக்கப்படுவதாக வலியுறுத்துகிறார்கள். ஆனால் எரேமியாவினுடைய தீர்க்கத்தரிசனமோ ஜனங்களை தேவனுடைய நோக்கத்திற்கு நேராக திருப்புகின்றதாகவும் மேலும் நம்முடைய மறுரூபப்படுதலானது உள்ளான இருதயத்திலிருந்து துவக்கப்பட்டு அத்துடன் நின்றுவிடாமல் வெளியரங்கமான மாற்றத்தினையும் கொடுக்கக்கூடியதாய் இருக்கிறது. இதுவே இன்றும் நம்முடைய வாழ்க்கைக்கும் தகுந்த சத்தியமாக இருக்கிறது. சுவிசேஷம் என்பது நம்முடைய சூழ்நிலைகள் மாறுவதைப் பற்றிக் குறிக்கவில்லை. இயேசு கிறிஸ்துவின் மூலமாக நம்முடைய சிந்தனைகள், விருப்பங்கள் மற்றும் நோக்கங்கள் மறுசீரமைக்கப்பட அல்லது புதுப்பிக்கப்பட வேண்டும் இந்த தொடர செயல்முறையானது தேவனுடைய ஆளுகையின் கீழ் நாம் முழுவதுமாக வரும்வரை நடைபெறும் என்பதை குறிக்கிறது.

இயேசு கிறிஸ்து இதை பற்றி மத்தேயு 12:43-45 -இல் எச்சரித்திருக்கிறார் “43 அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: 44. நான் விட்டுவந்த என் விட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, 45. திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார் “. நம்முடைய இருதயமானது சுத்தமாக காணப்பட்டாலும் அது வெறுமையாக இருக்கும் போது பிசாசு நம் இருதயத்திற்குள் எளிதில் வந்து தங்குவதற்கு வழிவகுக்கிறதாய் இருக்கிறது என்று கூறினார். அதுபோலவே கிறிஸ்தவம் என்பது நமக்கு வெறும் வெளிப்புற பழக்கவழக்கங்களாக இருக்கும்போது நம்முடைய இருதயம் அலங்கரிக்கப்பட்டு வெறுமையாக காணப்படுமாயின் பாதுகாப்பாற்ற வீட்டிற்கு ஒப்பாயிருக்கிறது. அதற்கு மாறாக இயேசு கிறிஸ்து நம்முடைய இருதயத்தில் வாசம்பண்ணுகையில் அவர் நமது பழைய காரியங்களை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் அவரைக் கொண்டு நம்மை நிரப்பி எல்லாவற்றையும் புதிதாக்குகிறார். இவைகளே முழுமையான மனந்திரும்புதல் ஆகும்.

இது நம்முடைய போராட்டங்களிலிருந்து விடுதலை பெறும் நோக்கத்தைப்பற்றி மட்டும் குறிக்கப்படவில்லை. தேவனாகிய கர்த்தர் தம்முடைய சாயலை நமக்குள் மீண்டும் உருவாக்குவதையே குறிக்கிறது. இது சீஷத்துவம் மூலம் எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். ஆரம்ப நாட்களில் சீஷர்கள் இயேசு கிறிஸ்துவோடு எப்படி நடந்தார்களோ, அது போலவே நாமும் அவருடைய சன்னிதியில் அவருக்காக நேரத்தை செலவிட்டு பக்திவைராக்கியம் நிறைந்த பழக்கவழக்கங்களை கற்றுக்கொண்டு மற்ற விசுவாசிகளோடு இணைந்திருந்து அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டு ஒவ்வொரு நாளும் அவருடைய சமூகத்தில் நம்மை முழுமையாக அர்ப்பணிக்கக் கற்றுக்கொள்வோம் இந்த செயல்முறையானது துரிதமாக நடந்து முடிந்துவிடாமல் நம்முடைய ஜீவனுள்ள நாள் மட்டும் இது தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வு.

நம்முடைய பணத்தினாலும், ஜெயத்தினாலும், மனநிறைவினாலும் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை அளவிட முடியாது. உண்மையான ஆசீர்வாதம் என்பது இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்குள் உருவாக்கப்படும் அவருடைய குணாதிசயமே ஆகும். அது இந்த உலகத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் எந்த காரியத்தை விடவும் மிகவும் மேன்மையானதாகும்.

இன்று உங்களை உற்சாகப்படுத்தும்படியாக சில காரியங்களை உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் இழந்தைவைகளைக் குறித்தோ அல்லது நீங்கள் எந்த காரியங்களில் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிறதை குறித்தோ ஒருபோதும் சிந்திக்க வேண்டாம். அதற்கு பதிலாக உங்களுக்குள் எல்லாவற்றையும் புதிதாக்குகிறவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளாய் மகிழ்ந்து களிகூறுங்கள். அவரே உங்களுடைய மிகப்பெரிய அழியாத பொக்கிஷமாயிருக்கிறார் என்பதை உங்கள் இருதயத்தில் நினைவில் கொள்ளுங்கள்.

சிந்தனைக்கு:

“என் வாழ்க்கையில் எந்த இடங்களில் எல்லாம் நான் என் உள்ளான மாற்றத்தைவிட வெளிப்புற மாற்றத்தில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறேன்? நான் உண்மையாகவே இயேசு கிறிஸ்துவை என் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு இருக்கிறேனா? என் இருதயத்தில் அவருடைய ஆளுகை இருக்கும்படி எந்த இடங்களில் எல்லாம் அவரை அனுமதித்திருக்கிறேன்? நான் மற்றவர்களுக்கு முன்பாக நேர்த்தியான புறதோற்றத்தை மட்டும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேனா?

ஜெபம்:

என் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவே நீர் என்னை வெளிப்புறத்தில் மட்டும் சுத்திகரிக்காமல் எனக்குள் வாசம் செய்து என் உள்ளான மனுஷனை புது சிருஷ்டியாய் மாற்றுகிறவராய் இருக்கிறபடியால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னுடைய புறம்பான ஆசீர்வாதங்களை நோக்கிப் பார்க்காமல் எனக்குள்ளான மனுஷனிலே மாறுதல் உண்டாவதையும் உமது ஜீவன் எனக்குள்ளாக வாசம் செய்வதையும் நான் அறிந்து நாளுக்கு நாள் உமக்குள் வளரும்படி எனக்கு உதவி செய்யும். நான் தினந்தோறும் உம்முடனே கூட நடக்கவும் என் இருதயத்தின் ஒவ்வொரு சிந்தனையையும் உம்முடைய சமூகத்தில் அர்ப்பணிக்கவும் எனக்குக் கற்றுத்தாரும்.

ஒவ்வொரு நாளும் உம்முடைய பிரசன்னத்தில் நான் மகிழ்ந்து களிக்கூரும்படி என்னை அரப்பணிக்கிறேன் இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமேன்.

கற்றுக்கொள்ள

உண்மையான ஆசீர்வாதம் என்பது நம்முடைய சூழ்நிலைகளில் உண்டாகும் மாறுதல் அல்ல. ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் வாழ்க்கையானது நமக்குள்ளிருந்து துவக்கப்பட்டு வெளியரங்கமாக்கப்படுவதையே குறிக்கிறது.

(செப்டம்பர் மாதம் 2025 ஆம் ஆண்டு மத்தேயு 11:28 ஊழியத்தின் சார்பாக Rev. இம்மானுவேல் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபளிப்பு சகோதரி லல்லியால் மொழிப்பெயர்க்கப்பட்டது)

Read More →

மனிதனுடய திறமையை விட அவனுடய நம்பகத்தன்மையே மேலானது: வேத தியான பகுதி எரேமியா 28 மற்றும் 29.ம் அதிகாரங்களிலிருந்து

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமாதானம் சபையோடு கூட இருப்பதாக.

நமது வாழ்க்கையின் சில நேரங்களில் நாம் மற்றவர்களை விட குறைவுபட்டவர்களாக நம்மை எண்ணுகிறோம். அவர்கள் தங்கள் திறமையின் மூலமாக அடைந்த வெற்றி மற்றும் அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகள் மூலமாக பெற்ற அங்கீகாரங்களைப் பார்த்து. நாம் குறைவுபட்டவர்களென்று நம்மை நாமே தீர்மானிக்கின்றவர்களாக இருக்கின்றோம். உலகமானது திறமை அழகு மற்றும் செயல் திறன் இவைகளை அடிப்படையாகக் கொண்டு, வெற்றியாகிறது தீர்மானிக்கப்படுவதாகக் கூறுகிறது. இருப்பினும் பெரும்பாலான சமயங்களில் தேவனுடைய செயல்படும் விதமானது உலகத்தைக் காட்டிலும் முற்றிலும் முரண்பட்டதாக இருக்கிறது. அவர் திறமையை விட நம்பகத்தன்மையையே மிகவும் முக்கியத்துவப்படுதுகிறார். இந்த சத்தியத்தைப் பற்றி எரேமியா 28 மற்றும் 29.ம் அதிகாரங்களில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. எரேமியா 28.ம் அதிகாரத்தில், அன்னியா தீர்க்கதரிசி யூத மக்களிடத்தில் தேவன் கூடிய விரைவில் நம் மீது பாபிலோனுக்கு இருக்கும் அதிகாரத்தினைத் தகர்த்துப் போட்டு நம்மை மீட்டுக்கொள்வார் என்று தைரியம் கொண்டு கூறினான் அவனுடைய உணர்ச்சித்துவமிக்க மற்றும் பிரபலமான இந்தச் செய்தியானது மக்களுக்கு எளிதில் நம்பிக்கை அளித்தாலும் அது பொய்யானதாகும் அனனியாவின் கவர்ச்சிகரமான செய்தி மக்களை ஈர்க்கின்ற வகையில் இருந்தாலும் அது அவர்களுடைய அடிமைத்தனத்தைப் பற்றிய உண்மையான தேவ நோக்கத்தை விட்டு வழிவிலகச் செய்தது.

அதற்கு மாறாக, எரேமியா தீர்க்கதரிசி கூறிய சத்தியம் ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருந்தது. எரேமியா 29.ம் அதிகாரத்தில், அவன் அடிமைகளாக இருந்த யூதர்களை நோக்கி. நீங்கள் பாபிலோனில் தங்கியிருந்து. உங்கள் வாழ்க்கையை அங்கே கட்டி எழுப்பி, அந்த நகரத்தினுடைய சமாதானத்தை நாடுங்கள் என வலியுறுத்தினான். இந்தச் செய்தியானது கவர்ச்சிகரமாக அல்லது பிரபலமானதாக இல்லாவிட்டாலும், தேவனுடைய சித்தத்தின் மீதான நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளது. மேலும், தானியேல், நெகேமியா போன்ற தலைவர்கள் உருவாக்கப்பட அடித்தளமாக அமைந்தது எரேமியா தேவனுடைய வாக்குத்தத்தங்களை அவர்களுக்கு நினைவூட்டினான்

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

எரேமியா 29:11
அனனியாவின் செய்தியோ கீழ்ப்படிதல் இல்லாத ஈர்ப்பு தன்மையினுடைய ஆபத்தினை வெளிப்படுத்துகிறது. எரேமியாவின் செய்தியோ, காணப்படாத மற்றும் பிரபலமானதாக இல்லாவிட்டாலும், நம்பகத்தன்மையினுடைய முக்கியத்துவத்தினை நமக்குக் காண்பிக்கிறது. தேவன் நம்பகத்தன்மையைக் குறித்து மகிழ்கிறார். திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். ஆனால் அதைவிடவும் மேலான, நிலைத்து நிற்கக்கூடிய குணாதிசயங்களை அவர் நமக்குள்ளே உருவாக்குகிறார்.

நீங்கள் இன்று கவனிக்கப்படாதவர்களாகவும். திறமையற்றவர்களாகவும். சாதாரணமானவர்களாகவும் உணர்கின்றபோது சோர்ந்து போகாதிருங்கள். தேவன் உங்களுக்குள்ளாக இருக்கின்ற நம்பகத்தன்மையை பொக்கிஷமாகப் பார்க்கிறார். கீழ்ப்படிதல் உள்ள ஒவ்வொரு செயல்களும், நம்பிக்கையுடைய ஒவ்வொரு தருணங்களும். அன்பில் வளர்வதற்கு எடுக்கப்படுகிற மிகச் சிறிய தேவனால் முயற்சிகளும் நித்யத்துக்குரியவைகளாக இருக்கின்றன. உங்களுக்கு கொடுக்கப்பட்ட

நம்பகத்தன்மையினுடைய வளரச்சியானது. உங்களுடைய வாழ்வின் போராட்டம் மற்றும் சந்தேகங்களை இயேசு கிறிஸ்துவினிடத்தில் அவருடைய அர்ப்பணிப்பதன் மூலமாகத் தொடங்குகிறது. நம்பகத்தன்மையானது நமக்குள்ளாக உருவாக்கப்பட அவரிடத்தில் அர்ப்பணிக்க வேண்டும். நீங்கள் ஒருவராலும் கவனிக்கப்பட்டாவிட்டாலும், நம்பகத்தன்மை உடையவர்களாகவும். கீழ்ப்படிதல் உள்ளவர்களாகவும் தினமும் வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறதேயல்லாமல், நீங்கள் பூரணமடைவதை பற்றியதல்ல இந்தத் தாழ்மையுள்ள அரப்பணிப்பின் மூலமாக தேவன் உங்களுடைய குணாதிசயங்களை மாற்றவும். அவருடைய அன்பில் ஆழமாக வேரூன்றி வளரவும் செய்கிறார்.

ஆகையால், நீங்கள் கிறிஸ்துவின் கிருபையை நாடுங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப்பாராதிருங்கள். தேவன் உங்களுடைய நம்பகத்தன்மையில் மகிழ்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு முயற்சியிலும் உள்ள நம்பகத்தன்மை மற்றும் கீழ்ப்படிதலே அவருக்கு

விலையேறப் பெற்றதாக உள்ளது. மேலும், இவைகள் உங்களுடைய வாழ்வில் தேவனால் வளர்த்தெடுக்கப்படுகிற விதைகளின் நித்திய அறுவடையாக உள்ளது.

(08 செப்டம்பர் மாதம் 2025 அன்று மத்தேயு 11:26 ஊழியத்தின் சார்பாக Rev இம்மானுவேல் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபளிப்பு சகோதார் டேவிட் மற்றும் சகோதரி அபிகேலால் மொழிபெயர்க்கப்பட்டது).

Click here to download as PDF -> Tamil

Read More →

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.

நம்முடைய கடினமான சூழ்நிலையின்போது நம்முடைய விடுதலைக்கான நேரத்தை நாம் எதிர்பார்ப்பது இயல்பானது தான் ஆனால் தேவனுடைய நிறைவான மகிமையைக் காண நாம் தவறுகிறோம். நாம் துரிதமாய் விடுதலையடைய ஏக்கமுடையவர்களாய் இருப்பதினால் நம்முடைய வாழ்க்கையில் தேவன் செயல்படுத்துகிற வல்லமைகள் நன்மைகள் மற்றும் மகிமைகளை பார்க்க முடியாதவர்களாக நம்மை மாற்றுகிறது.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பெரும்பாலும் எரேமியா 29:11 -ல் இருக்கிற வசனம் நம்மை ஊக்குவிக்கறதாக இருக்கிறது. ஆனால் அந்த வசனத்தைத் தியானிக்கும்பொழுது அதன் அர்த்தம் ஆழமாகவும் மற்றும் ஆவிக்குரிய கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் நம்மால் உணர முடியும். இந்தத் தீர்க்கத்தரிசனம் வெளிப்படுதப்பட்ட நேரத்தில் பாபிலோனில் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் தங்களுடைய சொந்த நிலங்களை இழந்து சோர்வடைந்து அவர்களுடைய விடுதலையை மாத்திரமே பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இருந்தார்கள். அவர்களிடத்தில் இரண்டு எதிர்மறையான கருத்துக்களையுடைய இரண்டு விதமான தீர்க்கதரிசிகள் அவர்களுக்குக் கூறினார்கள். அனனியா துரிதமான விடுதலையை குறிக்கும் தீர்க்கதரிசனம் மூலம் முரட்டாட்டத்தை உண்டாக்கும் பொய்யான நம்பிக்கையை ஜனங்களுக்குள் உண்டாக்கினான். ஆனால் அதற்கு மாறாக ஏரேமியா தீர்க்கதரிசியோ இந்த வேதனையான அடிமைத்தனம் எழுபது ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறியது கேட்ட ஜனங்களுக்கு கடினமாக இருந்தது. ஆனால் ஏரேமியா கூறின தீர்க்கத்தரிசனமானது தேவனுக்கு உண்மையாகத் தேவனுடைய சத்தியத்தை வெளிப்படுத்துகிறதாய் இருந்தது.

எரேமியா மூலம் தேவன் அறிவித்ததாவது: “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” (ஏரேமியா 29:11). இந்தக் காத்திருப்பின் காலங்களில் தேவன் அவர்களைக் கைவிடவில்லை என்கிற நம்பிக்கையையும் மேலும் சுகமடையும் வழிகளையும் மற்றும் இழ்ந்துபோன தேவனால் கொடுக்கப்பட்ட அடையாளங்களையும் மறுபடியும் பெற்றுக்கொள்வதினால் தேவனுடைய பிரசன்னத்தில் உண்டாகும் இரட்சிப்பின் சந்தோஷத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவர்களை ஆயத்தப்படுத்தியது.

நம்முடைய சூழ்நிலைகள் கடினமாக மாறும்பொழுது சிந்தனைகளில் மாற்றம் உண்டாகி தேவன்மேல் உள்ள நம்பிக்கை குறைகிறது. ஆனால் தேவனுடைய வாக்குத்தத்ததின் வல்லமைகளோ ஒருபோதும் மாறுவதில்லை. காத்திருப்பது மற்றும் மறுக்கப்படுவது அவைகள் இரண்டும் ஒன்றல்ல மாறானவைகள். பெரும்பாலும், நம் அறிவுக்கு எட்டாத முறைமையில் தேவனாகிய கர்த்தர் செயல்படுகிறார் என்கிற செய்தியை நமக்கு நினைவுபடுத்துகிறார்.

நீங்கள் எதிர்பார்க்கிற விடுதலை காலதாமதமானாலும் உங்களுக்கு நன்மை உண்டாகும்படி தேவனுடைய நேர்த்தியான நேரத்தில் பெற்றுக்கொள்வீர்கள் அதற்குத் தேவனுடைய வார்த்தையினாலே சிந்தனைகளில் மாற்றம் அடைந்து தேவன் ஆயத்தப்படுத்தின இரட்சிப்பின் நம்பிக்கைக்குள் நடத்தப்படுகிறோம். எனவே உங்களுடைய கடந்தகால தோல்விகள், பலவீனங்கள் மற்றும் இயலாமைகளை நாம் நோக்கிப் பார்க்காமல் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மற்றும் அவருடைய ஆவியும் ஜீவனுமான வார்த்தைகளுக்கு நேராக நம்முடைய சிந்தனைகளை நாம் திருப்புவோமாக ஒழிந்துபோவதில்லை. அவருடைய வாக்குத்தத்தம் ஒருபோதும் ஒழிந்துபோவதில்லை.

(ஆகஸ்ட் மாதம் 2025 அன்று மத்தேயு ஊழியத்தின் சார்பாக Rev. இம்மானுவேல் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபளிப்பு சகோதரி லல்லியால் மொழிபெயர்க்கப்பட்டது).

Click to download as PDF -> Tamil

Read More →