Newsletter Tamil

Be strengthened by the word of God

Home Category : Newsletter Tamil

அன்புள்ள திருச்சபையோரே,

இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

இந்த செய்திமடல் உங்களை உற்சாகமான ஆவியிலும்ஆரோக்கியத்துடனும் சந்திக்கிறது என்று நம்புகிறேன். தேவனுடைய ராஜ்யத்தை நிறுவுவதில் ஒரு ஐக்கியமாய் நீங்கள் எனக்கு அளித்த ஊக்கத்திற்காகவும் மற்றும் ஜெபத்தினால் அளித்த ஆதரவிற்காகவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும், தேவனிடமிருந்து பெற்றதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வலிமை ஒரு சிலருக்கு மட்டுமே உள்ளது என்பதை நான் உணர்ந்தேன். பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக, நமது வேதாகம ஆய்வு கூடுகையிலும், சபை கூடுகையிலும், வீட்டு கூடுகையிலும் பல வழிமுறைகளை அறிமுகப்படுத்த முயற்சித்தேன். ஆயினும்கூட, திருச்சபையார் தங்கள் பணத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தாலும், இன்னும் தங்களின் வெளிப்பாடுகளையும் அனுபவங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தில் வளர முன்வரவில்லை. இது நாம் கவனம் செலுத்தவேண்டிய சிவப்பு எச்சரிக்கை. மத்தேயு 25:14 – 30 இல் பிதாவின் சித்தத்தின்படி ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட தாலந்துகளைப் பற்றிய உவமையைக் காண்கிறோம். அதைப் பெருக்கப் பயன்படுத்தியவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள், ஆனால் தனது தாலந்துகளை ஒளித்துவைத்தவன் அவனுக்கு கொடுக்கப்பட்டதை இழந்தான்.

Read More →

இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

இந்தச் செய்திமடலை எழுத அமர்ந்தபோது, ​​நாம் இதுவரை முடித்த பயணம் எவ்வளவு அற்புதமாக இருந்தது என்பதை உணர்ந்ததில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். கடந்த காலத்தில் நாம் எகிப்தின் பாரங்களுக்குள்ளாக கடந்து சென்றபோது தேவன் நம்மைப் பாதுகாக்க மிகவும் நல்லவராக இருந்தார். நாம் நோய், பலவீனம் மற்றும் பிரச்சனைகளில் சிக்கியிருந்தபோது அவர் நம் நலனில் அக்கறை கொண்டிருந்தார். இந்தச் செய்திமடல் மிகச் சிறிய மக்கள் குழுக்காகவும், சில எளிய காரணங்களுக்காகவும் தொடங்கப்பட்டிருந்தாலும், தேவன் இந்த எண்ணத்தை பாதுகாத்து, ஒரு மரமாக வளரச் செய்திருக்கிறார். இதன் மூலமாக குணப்படுத்துதல், மீட்கப்பட்டு புதிப்பிக்கப்படுதல், மற்றும் நிலைநிற்பது போன்ற கனிகள் உருவாகியதற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்தச் செய்திமடலில், ‘உறவுக்கான நமது பொறுப்புகள்’ என்ற செய்தியை கையாளப் போகிறோம். இந்த மாதச் செய்திமடல் முறிந்த உறவுகளுக்கெல்லாம் விடையாக இருக்கப் போகிறது.

Read More →

இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

இந்தச் செய்திமடலை எழுத அமர்ந்தபோது, ​​நாம் இதுவரை முடித்த பயணம் எவ்வளவு அற்புதமாக இருந்தது என்பதை உணர்ந்ததில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். கடந்த காலத்தில் நாம் எகிப்தின் பாரங்களுக்குள்ளாக கடந்து சென்றபோது தேவன் நம்மைப் பாதுகாக்க மிகவும் நல்லவராக இருந்தார். நாம் நோய், பலவீனம் மற்றும் பிரச்சனைகளில் சிக்கியிருந்தபோது அவர் நம் நலனில் அக்கறை கொண்டிருந்தார். இந்தச் செய்திமடல் மிகச் சிறிய மக்கள் குழுக்காகவும், சில எளிய காரணங்களுக்காகவும் தொடங்கப்பட்டிருந்தாலும், தேவன் இந்த எண்ணத்தை பாதுகாத்து, ஒரு மரமாக வளரச் செய்திருக்கிறார். இதன் மூலமாக குணப்படுத்துதல், மீட்கப்பட்டு புதிப்பிக்கப்படுதல், மற்றும் நிலைநிற்பது போன்ற கனிகள் உருவாகியதற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்தச் செய்திமடலில், ‘உறவுக்கான நமது பொறுப்புகள்’ என்ற செய்தியை கையாளப் போகிறோம். இந்த மாதச் செய்திமடல் முறிந்த உறவுகளுக்கெல்லாம் விடையாக இருக்கப் போகிறது.

Read More →

அன்புள்ள திருச்சபையோரே,

இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

கர்த்தருடைய கிருபையால் இந்த வருடத்தின் கடைசி மாதத்தைக் காண அவருடைய இரக்கம் நமக்கு கிடைத்தது. இந்த வருடம், நாம் பல தேவனுடைய ஊழியர்களை இழந்திருந்தாலும், மற்றும் சபைகள் அவருடைய பரிசுத்த ஸ்தலத்திலிருந்து அவரை ஆராதிக்க பல இடையூறுகளை எதிர்கொண்ட போதிலும், தேவனின் கரம் அவரை மகிமைப்படுத்த நமக்கு உதவுவதை நாம் இன்னும் பார்க்க முடிகிறது. இத்தனை இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நம்முடைய கர்த்தராகிய தேவன் நம்மை அழிந்துபோக ஒருபோதும் அனுமதிக்கவில்லை. எனவே, நம்முடைய ஒவ்வொரு ஆராதனையும் அர்த்தமுள்ளதாக இருக்கட்டும். மற்றவர்களின் வாழ்க்கையை வலுவாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதன் மூலம் உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கட்டும். ஒவ்வொரு உரையாடலும், ஐக்கியமும் அன்பின் கனிகளால் நிரப்பபட்டிருப்பதாக. உங்கள் அன்பை வெளிப்படுத்த உங்களுக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும், அதை இன்றே செய்யுங்கள், நாளைக்காக காத்திருக்காதீர்கள், ஏனென்றால் நாளை நமக்கானது அல்ல.

Read More →

அன்புள்ள திருச்சபையோரே,

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன். இந்த செய்திமடல் மூலம் உங்களை சந்திக்க எனக்கு உதவிய தேவனுடைய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் நான் நன்றி கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவின் அன்பும் கிருபையும் உங்கள் வாழ்க்கையில் போர்களை எதிர்கொள்ளவும், உங்களை சகிப்புத்தன்மையில் வளர்க்கவும் போதுமானதாக இருக்குமென்று நம்புகிறேன். மனஉளைச்சலை தரும் எந்த ஒரு சூழ்நிலையைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று நான் உங்களை தைரியப்படுத்துகிறேன், ஏனெனில் நீங்கள் எதிர்கொள்ளும் போராட்டம் மற்றும் துன்பம் என்பது தற்காலிகமானது. அது உங்களை என்றென்றைக்கும் துன்புறுத்திக்கொண்டிருக்க முடியாது. உருவாக்கினவரின் பார்வையில் நீங்கள் விலைமதிப்பற்றவர்கள். எனவே தளர்ந்துவிடாதீர்கள், உங்களுக்கான விடியற்காலம் மிக அருகில் உள்ளது.

Read More →

அன்புள்ள திருச்சபையோரே,

நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன். இதுவரை உங்கள் அனைவரின் ஜெபத்திற்கும் ஊக்கத்திற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த செய்திமடல் உங்களை உற்சாகமான ஆவியில் சந்திக்கிறது என்று நம்புகிறேன். நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளால் உங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள், ஏனென்றால் தேவனுடைய வார்த்தையானது காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள் என்று கூறுகிறது. ஆகையால், கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருங்கள், அவர் தாமே உங்களுக்கு முன்பாகச் சென்று கோணலானவைகளை செவ்வையாக்குவராக.

Read More →

அன்புள்ள திருச்சபையோரே,

இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக. இந்த மாதம், பலரையும் சந்திக்கும் பாக்கியத்தை தேவன் எனக்குக் கொடுத்தார், அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நம்மை விட கடினமான சூழ்நிலைகளில் இருப்பவர்களுக்காக ஜெபியுங்கள். தேவனிடமிருந்து இதுவரை நாம் பெற்ற அனைத்து நன்மைகளுக்காகவும் பாதுகாப்பிற்காகவும்  நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். இந்த செய்திமடல் உங்களை உற்சாகமான ஆவியில் சந்திக்கிறது என்று நம்புகிறேன். இதுவரையும் நீங்கள் எனக்கு அளித்த ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் உங்கள் அனைவருக்குமாய் நன்றி சொல்லுகிறேன். இது ஒரு ஆசீர்வாதம். எனக்காக தொடர்ந்து ஜெபிக்க கேட்டுக்கொள்கிறேன். என் தனிமையை மறந்து, ஊழியத்தில் கவனம் செலுத்த தேவன் எனக்கு மிகவும் நல்லவராக இருக்கிறார். நான் கற்றுக்கொண்ட ஒவ்வொரு நல்ல பாடத்திற்கும் இயேசு கிறிஸ்துவின் பாதத்தண்டையில் நான் கண்டறிந்த சத்தியத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

Read More →

அன்புள்ள திருச்சபையோரே,

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் சமாதானமும் சந்தோஷமும் உங்களோடிருந்து உங்களை ஆளுகை செய்வதாக.

இந்த வாரத்தைக் காண்கிறதற்கு கர்த்தர் நமக்கு கிருபை செய்திருக்கிறார். நாம் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் நடந்தாலும் அவர் நம்மை அழிவுக்கு நீக்கினபடியினால், அவரை நாம் ஆராதிப்பதே சரியானது மற்றும் தகுதியானது. உங்களை எகிப்திலிருந்து புறப்பட பண்ணின தேவனாகிய கர்த்தர் நானே என்று தம்முடைய நாமத்தை அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.  எனவே, தேவனுக்கு நன்றி சொல்லும் அற்புதமான மற்றும் தெய்வீக பழக்கத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்கள் வாழ்க்கையில் உள்ள குறைபாட்டைக் கண்டு, அவர்களின் கஷ்டங்களை குறித்து கர்த்தரிடத்தில் கேள்வி கேட்க முடிவு செய்த பலர் இந்த உலகத்தில் உள்ளனர். ஆயினும்கூட, கர்த்தரை துதிக்க தீர்மானித்த சிறுகூட்ட ஜனத்தை கர்த்தர் தமக்காக தெரிந்துகொண்டு அழைத்திருக்கிறார். அதனால்தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தாங்கள் அக்கினியிலும் மற்றும் கஷ்டமான சூழ்நிலைகளையும் கடந்து செல்லும்போது, உருவாக்கினவரை துதித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் தங்கள் கஷ்டமான சூழ்நிலைகளை தங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்கி வைக்க முடிந்தது. கர்த்தரை துதிப்பது ஒரு தேவபக்திக்கேற்ற செயலாகும், அது நம் வாழ்வை ஒரு ஆசீர்வாதமாக மாற்றி நம் வாழ்வில் வெளிப்படுகிறது. கர்த்தரை துதிப்பது நம்முடைய சுய பிரயோஜனத்துக்காகவே. நாம் கர்த்தரை துதிக்கும்போது, நம்முடைய சிந்திக்கும் செயல்முறை குணமாகும், மேலும் நம்முடைய மனது சரியான நிலையில் வேலை செய்யும். பல சமயங்களில், சில விஷயங்களைச் செய்வது தவறு என்று நமக்குத் தெரியும், ஆனாலும் நாம் அவற்றைச் செய்கிறோம். இதற்கு காரணம் நம் இருதயம் உணர்வற்றுப்போய்விட்டது. சத்தியத்தின் மீதான அன்பை வளர்க்க சிலர் போராடினார்கள். கர்த்தரை துதிப்பது நம்முடைய ஆத்துமாவை குணப்படுத்தும் தைலம் போன்றது மற்றும் சத்தியத்தை நேசிக்க அது நம்மை வழிநடத்தும்.

Read More →

அன்புள்ள திருச்சபையோரே,

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.

தேவனை ஆராதிக்கவும் ஐக்கியத்தில் மகிழவும் நம் வாழ்வில் அவர் அளித்த வாய்ப்பிற்காக நான் தேவனுக்கு மிகவும் நன்றி கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவிடமிருந்து நாம் பெற்ற நல்ல ஈவுகளை எண்ணி, அதற்காக நன்றி செலுத்துவது முக்கியம். அவருடைய நாமத்தை நாம் துதிப்பதற்காக அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாக இருக்கிறோம். எனவே, அவருடைய நாமத்தையும், அவருடைய வழியையும், அவருடைய சத்தியத்தையும் அறிந்து கொள்வதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். பலமுறை, அவரை அறிந்துகொள்வது எவ்வளவு பாக்கியம் என்பதை நாம் உணராமலிருக்கிறோம். ஆகவே, தேவனில் களிகூரவும், மற்றவர்கள் கர்த்தரிடத்தில் வளர உதவவும் நான் திருச்சபையை ஊக்குவிக்கிறேன்.

Read More →

அன்புள்ள திருச்சபையோரே,

நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.

எல்லாவித பேரழிவுகளிலிருந்தும் அவர் நம்மைக் காப்பாற்றி, நம் வாழ்வில் அருளிய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். அரசாங்கம் விதிகளை தளர்த்தியதால், எல்லா பிரச்சினைகளும் முடிந்துவிட்டன, அல்லது எல்லா வகையான நோய்களிலிருந்தும் நாம் முற்றிலும் விடுபட்டுள்ளோம் என்று நினைக்க வேண்டாம். “நான் தேவனுக்காக வாழ்கிறேனா?” என்பதைக் அறிய நாம் எப்போதும் தேவனின் முன்னிலையில் அமர்ந்திருப்பது மிக முக்கியம். நான் அவரில் வாழ்கிறேனா? நான் அவர் மூலமாக வாழ்கிறேனா? ” இந்த கேள்விகள் நம் வாழ்க்கைமுறையாக மாறாவிட்டால், நாம் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட மாட்டோம். வேதாகம சத்தியத்திற்கு அடித்தளம் இல்லாத ஒரு கிறிஸ்தவ மத அமைப்பில் நாம் வாழ்கிறோம். ஆகையால், அன்புள்ள சக கிறிஸ்தவர்களே, உங்களிடம் உள்ள உங்களுடைய இரட்சிப்பின் வஸ்திரங்களை காத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் முக்கியமானவற்றைப் பாதுகாக்க முன்னுரிமை கொடுங்கள், இதனால் உங்கள் வாழ்க்கையை வேடனுடைய கண்ணியிலிருந்து பாதுகாக்க முடியும்.

Read More →