Article Tamil

Be strengthened by the word of God

Home Category : Article Tamil

ாராந்திர வேத தியானம்: பரிசுத்த ஆவியின் வல்லமையால், வேதத்தில் வேரூன்றிய வாழ்க்கை.

வேத தியானக் குறிப்பு: நியாயதிபதிகள் 15:14-15.

14.அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள். அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று.

15. உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம்பேரைக் கொன்றுபோட்டான்.

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் வாழ்த்துக்கள். இன்று, நாம் நம்மை இடைநிறுத்தி, தேவனுடனான நம்முடைய வாழ்க்கை பயணத்தில் நம்மேல் பலருக்கும் அமைதியாக மறைந்து சவாலாக இருக்கும் ஒரு கேள்வியைப் பற்றி சிந்திக்க விரும்புகிறேன்: வேதத்தின் அசைக்க முடியாத அஸ்திபாரத்தின் மீது நாம் உண்மையாகவே நம்முடைய வாழ்க்கையைக் கட்டியெழுப்புகிறோமா, அல்லது தேவனுடைய வார்த்தையை விட நம்முடைய அனுபவங்களும் உணர்ச்சிகளும் மேலோங்கி நிற்கும்படி அனுமதித்து வருகிறோமா?

ஒரு கணம் சிம்சோனைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அதிசயமான செயல்களை செய்யும் வல்லமை அவனுக்குக் கொடுக்கப்பட்டது என்று வேதாகமம் சொல்கிறது. அவன் மரித்துக் கிடந்த ஒரு கழுதையின் தாடை எலும்பைப் பயன்படுத்தி ஆயிரம் எதிரிகளை அவன் தோற்கடித்தான். அது உண்மையிலேயே அற்புதமானது! ஆனாலும் சிம்சோன் அவனுடைய வாழ்க்கையில் வீழ்ச்சியடையக்கூடிய  தவறான தீர்மானங்களை எடுத்தான். அவன் தவறான நண்பர்களைத் தேர்ந்தெடுத்தான், தற்காலிக இன்பங்களைப் பின்தொடர்ந்தான். மேலும் தேவனிடமிருந்து தன்னை விலகி இருக்கச் செய்யும் ஒரு கலாச்சாரத்துடன் இணைந்து வாழ்ந்தான். இறுதியில், தவறான வலியுறுத்தல்கள் அவனுடைய இருதயத்தை ஆதிக்கம் செலுத்த அவன்  அனுமதித்ததினால், அவனுடைய கண்களும் மற்றும் பெலனும் பறிக்கப்பட்டன.

இது ஒரு வல்லமையான நினைவூட்டல் இல்லையா? பரிசுத்த ஆவியின்  வல்லமையை நாம் பெற்றிருந்தாலும், நாம் எடுக்கும் முடிவுகள் — யாருடன் நாம் அமர்கிறோம், எதிலே நாம் ஈடுபடுகிறோம், எதனை நாம் முதன்மைப் படுத்துகிறோம். இவைகளே நாம் உண்மையான ஜெயத்தில் நடக்கிறோமா அல்லது தடுமாறுகிறோமா என்பதை தீர்மானிக்கின்றன. இராஜாவாகிய சவுலும் இதையே அனுபவித்தான். ஆவியானவர் அவனோடு கூட இருந்தார். ஆனாலும் அவனுடைய கவனச்சிதறல்கள், பொறுமையின்மை மற்றும் மோசமான தீர்மானங்கள் இவை அனைத்தும் தேவனோடு இருக்கக்கூடிய அவனுடைய ஐக்கியத்தை  அழித்துவிட்டன.

ஆபாசம்,       மது, புகையிலை, கசப்பு மற்றும் தேவனிடமிருந்து வராத வேறு எதுவும் நம்முடைய ஆவிக்கூரிய வளர்ச்சியை அழித்துவிடும். மேலும் அதிகமாக, நாம் உலக இன்பங்களில் வாழ்ந்து, தேவனைப் புறக்கணித்தால், நம்முடைய வாழ்வில் ஆவியின் வல்லமையை இழக்க நேரிடும். ஆனால் இன்னும் நான் மீட்கப்படுவதற்கு  நம்பிக்கை இருக்கிறது. யோபுவைப் போல, நாம் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு உடன்படிக்கை செய்யலாம்—அவரை மகிமைப்படுத்துவதற்க்கும், அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதற்கும், அவருடைய கொள்கைகளின்படி வாழ்வதற்குமான உறுதியான அர்ப்பணிப்பு. இந்த உடன்படிக்கை உலக இன்பங்களின் வலியுறுத்தல்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது மற்றும் நம்முடைய அடித்தளத்தை உறுதியாகவும் வைத்திருக்கிறது.

எனவே, இன்று நம்முடைய சவாலாக இருப்பது இதுதான்: கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, உலக முறைமைகளை விட்டுவிட்டு, ஒரு புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் கேள்வி இதுதான்: தேவனை மகிமைப்படுத்தும் தேர்வுகளை நாம் எடுப்போமா? அல்லது தவறான வலியுறுத்தல்களில் அமர்ந்து, தவறான இன்பங்களைத் தேடி, உலகக் கலாச்சாரம் நம்முடைய முடிவுகளை வடிவமைக்க அனுமதிப்போமா? உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

  • என்னுடைய இந்த எண்ணம், என்னுடைய இந்த செயல், என்னுடைய இந்த உறவு வேதத்தில் வேரூன்றியதா?
  • இயேசு கிறிஸ்து இதை அங்கீகரிப்பாரா?
  • நம்முடைய பரிசுத்தமும் நீதியுமான தேவனுடைய பார்வையில் இது பிரியமானதா?

சபையே, ஆவியானவர் நமக்கு அவருடைய வல்லமையை அளிக்கிறார். ஆனால் அவர் கீழ்ப்படிதலுக்குப் பதிலாக வேறொன்றையும் மாற்றும்படி அறிவுறுத்தவில்லை. கீழ்ப்படிதல் நம்முடைய விருப்பத்தில்  மாத்திரம் அல்ல , அது நம்முடைய அவசியமானதாக மாற வேண்டும். கீழ்ப்படிதல்கள் மற்றும் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக அவருடைய வல்லமை அளிக்கப்படுகிறது. நம்முடைய வாழ்க்கை தேவனுடைய வார்த்தையைக் கொண்டு கட்டப்படும்போது, நம்முடைய அடித்தளம் அசைக்க முடியாததாக இருக்கும்போது மற்றும் வேதத்தின் மூலம் ஆவியானவர் நம்மை வழிநடத்த அனுமதிக்கும் போது உண்மையான ஜெயம் வருகிறது. இப்படியே நாம் மாற்றம், சுதந்திரம் மற்றும் நித்திய ஜீவனுக்குரிய திருப்தியை அனுபவிக்கிறோம்.

எனவே, இன்று, வார்த்தையினால் வேரூன்றி இருக்கவும், ஆவியால் அதிகாரம் பெறவும், நிலையற்ற உலக இன்பங்களிலிருந்து பிரிந்து செல்லவும் ஒருவரையொருவர் ஊக்குவிப்போம். சிம்சோனின் வாழ்க்கை நமக்கு சவாலாக இருக்கட்டும். சரியான அடித்தளமும் மற்றும் தீர்மானங்களும் இல்லாத போது  பெரிதான வல்லமையும் நம்மை அழிவுக்கு நேராக நடத்தக்கூடும். ஆனால் அவருடைய வல்லமை கீழ்ப்படிதல், ஜெபம், வேதம் மற்றும் ஆவிக்கூரிய ஐக்கியம் ஆகியவற்றுடன் இணைந்து இராஜாதி இராஜாவின் பிள்ளைகளாகிய நம்மை உண்மையான ஜெயத்திற்குள்  நடத்திச் செல்கிறது.

இன்றைய சிந்தனை:

இன்று, உண்மையான பெலனும், ஜெயமும் தேவனுடைய வார்த்தையில் வேரூன்றி, ஆவியால் வழிநடத்தப்படும் வாழ்க்கையிலிருந்து வருகிறது என்பதை நான் நினைவூட்டுகிறேன். இயேசு ஊழியம் செய்வதற்கு முன்பாக ஜெபித்தார், உபவாசித்தார், வேதத்தைப் படித்தார், அதே போல், ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்க தேவனுக்கு முதன்மையான நேரத்தை நான் கொடுக்க வேண்டும். என்னுடைய எண்ணங்கள், செயல்கள் மற்றும் உறவுகளை நான் ஆராய வேண்டும். அவைகள் தேவனை மகிமைப்படுத்துகின்றதா, அவருடைய வார்த்தையுடன் சீர்பொருந்துகின்றதா என்று கேட்க வேண்டும். ஆவி எனக்கு வல்லமையை அளிக்கிறது, ஆனால் கீழ்ப்படிகிறதர்க்கும் அவருடைய சித்தத்தை பிரதிபலிக்கும் வகையில் தீர்மானங்களைச் செய்வதற்கும் நானே பொறுப்பாக இருக்கிறேன். ஆவிக்குரிய அடித்தளம் இல்லாத பெரிதான வல்லமை நம்மை அழிவுக்கு நேராக நடத்தக்கூடும் என்பதை சிம்சோனின் வாழ்க்கை எனக்கு எச்சரிக்கிறது. தினமும் வேதம், ஜெபம் மற்றும் ஆவிக்குரிய ஐக்கியத்தை தேடுவதன் மூலம், உண்மையான மாற்றத்தையும் சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியும். இன்று, நான் தேவனுடைய வார்த்தையில் வேரூன்றி இருக்கவும், ஆவியானவர் என்னை வழிநடத்தும்படி அனுமதிக்கவும், துரிதமான உலக இன்பங்களை எதிர்க்கவும் முடிவு செய்கிறேன்.

ஜெபம்:

எங்கள் பரலோகத்தின், பிதாவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, நான் உம்முடைய சமூகத்திற்கு வருகிறேன். உம்முடைய வார்த்தைக்காகவும், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்காகவும், பரிசுத்த ஆவியின் ஆறுதலுக்காகவும் நன்றி. தேவனாகிய கர்த்தாவே , நீர் என்னை உம்முடைய சாயலில் உருவாக்கினீர். அதே சாயலில் வாழவும், உம்மிடம் நெருக்கமாக வளரவும், இருளில் நடப்பவர்களுக்கு நான் வெளிச்சமாகவும் இருக்க எனக்கு உதவி செய்யும். பல நேரங்களில், நீர் எனக்குக் கொடுத்தவற்றின் மதிப்பை நான் புரிந்து கொள்ளவில்லை. கெட்ட குமாரனைப் போல, நான் நித்தியமானதை தற்காலிகமானவற்றிற்க்காக  மாற்றக் கொண்டேன். தேவனாகிய கர்த்தாவே உம்முடைய ஆசீர்வாதத்தை பொக்கிஷமாகக் பார்க்காமல் இருந்ததற்கு என்னை மன்னியும். உம்முடைய பிள்ளை என்று அழைக்கப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று எனக்குத் தெரியும், ஆனால் ஒரு அடிமையாக என்னை உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் மூலம் உமக்குப் பிரியமானதை மட்டுமே செய்து, என் வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் உமக்கு உண்மையாக ஊழியம் செய்ய என்னை அனுமதியும். தேவனாகிய கர்த்தாவே, என்னில் ஏதாவது தவறு இருக்கிறதா என்று ஆராய்ந்து பாரும். இயேசு கிறிஸ்துவே, உம்முடைய வழியாகிய – நித்திய பாதையில் – என்னை வழிநடத்தும். தேவனாகிய கர்த்தாவே, என்னுடைய கண்ணீரையும், என் இருதயத்தையும், என் முழுமையான ஒப்புக்கொடுத்தலையும் ஏற்றுக்கொள்ளும். என்னைச் சுத்திகரித்து, என்னைப் பெலப்படுத்தி, இயேசு கிறிஸ்துவின் மகிமைக்கென்று என்னை ஒரு கருவியாக மாற்றும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இந்த வாரம் கற்றுக்கொள்ள வேண்டியது:

உண்மையான பெலன் தேவனுடைய வார்த்தையில் வேரூன்றி, ஆவியால் வழிநடத்தப்படுவதிலிருந்தே வருகிறது. தேவனை மகிமைப்படுத்தும் தீர்மானங்களை எடுப்பதற்கு கீழ்ப்படிதல், ஜெபம் மற்றும் ஆவிக்குரிய ஐக்கியம் அவசியமாகும். உறுதியான அடித்தளம் இல்லாமல், பெரிய வல்லமை கூட அழிவுக்கு நேராக நடத்தக்கூடும், ஆனால் உறுதியான அடித்தளத்தினாலும்  தேவனுடைய வல்லமையினாலும், நாம் உண்மையான ஜெயத்தையும் மாற்றத்தையும் அனுபவிக்கிறோம்.

(2026 ஜனவரி மாதம் 17 அன்று கேள் மத்தேயு 11:28 ஊழியங்கள் சார்பாக Rev. இம்மானுவேல் எபனேசர் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி லல்லியால் மொழிப்பெயர்க்ப்பட்டது).

 அறிவிப்புகள்:

  1. உங்களுடைய சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவை தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்.

இணைப்பு: https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09

(சந்திப்பு ஐடி (Meeting ID): 8114423 5750.  கடவுச்சொல் (Password): 12345).

  1. தனிப்பட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை உபயோகித்து தயவாக ஏற்பாடு செய்யுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul/appointment
  1. எங்களுடைய ஊழியங்கள் மற்றும் கூடுகைகளை குறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல் தொடர்புகளை பெற்றுக் கொள்ள எங்களுடைய வாட்ஸ்அப் (WhatsApp) குழுவில் சேர உங்களை அழைக்கிறோம் https://chat.whatsapp.com/EokMFGuZdgb23Sg8BsHzas

உங்களுடன் விசுவாசத்திலும் ஐக்கியத்திலும் நடக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

Click here to download as PDF ->Tamil

Read More →

வாராந்திர வேத தியானம்: உங்களுடைய குடும்பம் யார்?

வேத தியானம் : நியாதிபதிகள் 15 : 10 -13.

12.அப்பொழுது அவர்கள்: உன்னைக்கட்டி, பெலிஸ்தியர் கையில் ஒப்புக்கொடுக்க வந்திருக்கிறோம் என்றார்கள். அதற்குச் சிம்சோன்: நீங்களே என்மேல் விழுகிறதில்லை என்று எனக்கு ஆணையிடுங்கள் என்றான்.

13.அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள்.

அன்புள்ள திருச்சபையே,

நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் விலையேரப்பெற்ற நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்கள். நான் உங்களிடம் ஒன்றைக் கேட்கிறேன் – உங்களுடைய சொந்த குடும்பத்தினரால் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களினால் எப்போதாகிலும் கட்டுண்டவர்களாக, தவறாக புரிந்து கொள்ளபட்டவர்களாக அல்லது தள்ளபட்டவர்களாக உணர்ந்திருக்கிறீர்களா? இப்படிபட்ட அனுபவம் உங்களுக்கு மாத்திரம் நிகழவில்லை. சில மிக ஆழமான போராட்டங்கள் நம்முடைய அந்நியர்களிடமிருந்து அல்ல, நம்முடைய சொந்த வட்டத்திற்குள் இருக்கும் மக்களிடம் இருந்தே வருகின்றன என்பதை வேதாகமம் நமக்குத் திரும்பத் திரும்ப வெளிப்படுத்துகிறது.

இதை நாம் கல்தேயர்களுக்கு பின்னாக செயல்பட்ட ஆவியினூடாக தெளிவாகக் காண்கிறோம். வேதாகமத்தில், கல்தேயர்கள் வெறும் ஆளுகை செய்கிறவர்களாக மட்டுமல்ல, அவர்கள் தேவ ஞானத்தைப் போலத் தோன்றும் போலியான ஞானத்தை உடையவர்களாக, தேவனுடைய சத்தியத்தையும் சித்தத்தையும் விட்டு விலகி வழிதவறச் செய்யும் ஞானத்தையுடைய அமைப்பாக இருக்கிறார்கள் — அவர்கள் கற்றறிந்தவர்களாகவும், ஆவிக்குரியவர்களாகவும், நம்பகமானவர்களாகவும் தோன்றினார்கள். அவர்கள் தேவனாகிய கர்த்தருடைய நடத்துதலுக்கு அப்பாற்ப்பட்டு செயல்பட்டார்கள். அவர்களுடைய ஆதிக்கத்தை வன்முறையால் மட்டுமல்லாமல் மறைமுக ஊடுருவலின் மூலமாகவும் உருவாக்கிக் கொண்டார்கள். விசுவாசங்களையும் மற்றும் அடையாளங்களையும் மெதுவாக மாற்றி அமைத்து, தேவனாகிய கர்த்தருடைய மக்களின் உள்இருதயங்களை பெலவீனப்படுத்தும் வகையில் அவர்கள் செயல்பட்டார்கள். எந்தப் போராட்டங்களும் இல்லாமல் பாபிலோன் திடீரென வீழ்ந்து போனது; வெளிப்படையாகத் தெரியும் எதிர்ப்பைவிட, மறைந்துள்ள கையாளுதலும் சூழ்ச்சியின் வஞ்சகமும் மிகவும் ஆபத்தானவை என்பதை அது வெளிப்படுத்துகிறது.

சிம்சோனைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவருடைய வாழ்க்கையானது வல்லமையான ஜெயங்களினாலும் மற்றும் வேதனையூட்டும் தீர்மானங்களினாலும் அடையாளப்பட்டிருக்கிறது. அவர் தவறான உறவுகளுடன் தன்னை இணைத்துக் கொண்டபோது, அந்த தீர்மானங்களின் விளைவுகள் அவருக்கு மட்டுமல்லாமல், அவரைச் சுற்றியிருந்த மக்களுக்கும் ஏற்ப்பட்டன. இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால்: பெலிஸ்தியர்கள் சிம்சோனை கட்டுப்படுத்த விரும்பியபோது, ​​அவர்கள் முதலில் அவரை நேரடியாகத் தாக்கவில்லை. அதற்கு மாறாக, அவருடைய சொந்த ஜனமான யூதமக்களுக்கு அவர்கள் நெருக்கடியைக் கொடுத்தார்கள். பெலிஸ்தியர்களின் ஆட்சிக்கும் மற்றும் பயத்திற்கும் கீழ்ப்பட்டு நடந்த யூதமக்கள், சிம்சோனைக் கட்டி, எதிரியிடம் ஒப்படைக்கத் தீர்மானித்தார்கள் .

நாம் சற்று நிதானித்துச் சிந்திக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது. உண்மையான குடும்பம் என்பது நம்முடைய சுகமான நேரத்தில் நம்மோடு இருப்பது அல்ல எதிரிகளினால் நெருக்கடி எழும்பும்போது நம்முடன் நிற்கிறவர்களே. பயம், மாம்சம் அல்லது உலகத்தினுடைய ஆளுகைகள் மக்களுக்குள் இருக்கின்ற வேளையில் ​​ சூழ்நிலைகள் அமைதியாக இருக்கும் போதும் அவர்கள் உங்களிடம் அன்பாகப் பேசக்கூடும். ஆனால் நெருக்கப்படுகிற சூழ்நிலையில் வரும்போது, ​​அவர்கள் விசுவாசத்தை விட பாதுகாப்பைத் தேர்ந்தெடுத்து உங்களை எதிரியின் கைகளில் ஒப்படைக்கக்கூடும். இதே மாதிரியான நிகழ்வுகளை ஒன்றுக்கும் மேற்ப்பட்ட இடங்களில் காண்கிறோம். இயேசு கிறிஸ்து கூட காட்டிக் கொடுக்கப்பட்டார் – அந்நியரால் அல்ல, பன்னிரண்டு பேரில் ஒருவரான யூதாஸால். அவருடன் நெருக்கமாக நடந்த ஒருவன். அவன் பார்வைக்கு உண்மையுள்ளவராகவும் அவருடன் நெருங்கிய உறவில் இருப்பவனாக தன்னைக் காட்டிக்கொண்டான் ஆனால், மெய்யாக அவனுடைய விசுவாசம் மற்றவர்களுடைய பார்வைக்காக மாத்திரமே இருந்தது .

இங்கு உங்கள் மேல் கரிசனையின் நிமித்தம் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் விரும்புகிறேன் : நீங்கள் எப்போதாவது துரோகம் செய்யப்பட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா? அடக்குமுறையில் வாழ்ந்ததாக உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் நம்பிக்கை வைத்திருந்தவர்களால்— உணர்வுப்பூர்வமான, ஆவிக்குரிய வாழக்கையில் அல்லது உறவுகளில்— உங்கள் எதிரிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா? இதோ உங்களுக்கு ஒரு நற்செய்தி: நமக்கு முன்னே போய், கோணலான பாதைகளைச் செவ்வையாக்குகிற கர்த்தர் நம்மோடு சேர்ந்து நடக்க நம்மை அழைக்கிறார். அவர் இந்தப் போராட்டங்களை நாம் தனித்து போராடுவதற்க்கு நம்மிடம் கேட்கவில்லை. நாம் அவரோடு நடக்கும்போது, அவர் நமக்காக யுத்தம்பண்ணுவார்.

ஆனால் அவர் நம்மை ஞானமான தீர்மானங்களை எடுக்கவும் அழைக்கிறார். நாம் நம்முடைய நேரத்தையும் பெலனையும் சரியான குடும்பத்தையும் கண்டறிந்து அவர்களிடத்தில் முதலீடு செய்ய வேண்டும்— சவால்களும், அச்சுறுத்தல்களும், நெருக்கங்கள் வரும் போது நம்மோடு உறுதியாக நிற்கிறவர்களே சரியான குடும்பம் மற்றும் அவர்களே ஒரு ஆவிக்குரிய குடும்பமாயும் இருக்கிறார்கள். குடும்பம் என்பது நாம் தவறுகள் செய்யும் போது நம்மை புறக்கணிக்காமல், அந்த தவறுகளினுடைய விளைவுகளின் வழியாக நம்மோடு நடந்து, அன்பினால் சத்தியத்தை போதித்து, மேலும் சிறந்த தீர்மானங்களை எடுத்து அதில் வளர உதவி செய்கிறவர்கள்.

ஒரு உண்மையைக் உங்களுக்குச் சொல்கிறேன். சரியான தேர்வுகளை செய்ய உண்மையாகவே விரும்புகிற அநேக மக்கள் இன்றும் இருக்கிறார்கள்—ஆனால் அவர்களுடைய போராட்டதிற்க்கான காரணம் சுதந்திரத்தையும் விசுவாசத்தையும் வளர்க்கும் ஆரோக்கியமான, தேவபக்தியுள்ள குடும்பத்தை அவர்கள் ஒருபோதும் அனுபவிக்கத்தவறியதே.

ஆகையால், அன்பான சபையினரே, இதை நீங்கள் வாசிக்கும் போது இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுப் பாருங்கள் :நம்முடைய நெருக்கத்தில் நம்மைச் சார்ந்தவர்களை எதிரிகளின் கைக்கு ஒப்புக்கொடுக்கிறோமா? அல்லது இயேசு கிறிஸ்துவின் ஆளுகையின் கீழ் ஒன்றாய் நின்று, ஜெபித்து, போதித்து, அவருடைய மீட்புக்காக அவர்களோடு இணைந்து போராடும் குடும்பமாகக் காணப்படுகிறோமா?

நாம் சரியானதைத் தேர்ந்தெடுக்க தேவன் நமக்கு உதவுவாராக—அவருடைய இருதயத்தை பிரதிபலிக்கும் குடும்பமாக நம்மை இருக்கச் செய்வாராக.

இன்றைய சிந்தனைக்கு:

இன்று நமக்கு நினைவூட்டப்படுவது என்னவென்றால், வாழ்க்கையின் மிகப்பெரிய போராட்டங்கள் சில நேரங்களில் அந்நியர்களிடமிருந்து அல்ல, நமக்கு மிகவும் நெருக்கமானவர்களிடமிருந்தே வருகின்றன. பயமும் சமரசமும் நம்மோடு பழக்கமானவர்களைக் கூட தற்காலிக பாதுகாப்பிற்காக தேவனுடைய நோக்கங்களை விட்டுக்கொடுக்கச் செய்யும் என்பதை வேதம் நமக்கு காட்டுகிறது. சிம்சோனைப் போலவே, நம்முடைய பெலன் எதிரிகளால் மட்டுமல்ல, நாம் நம்பத் தேர்ந்தெடுக்கும் உறவுகளாலும் சோதிக்கப்படுகிறது. ஆனாலும் நாம் கீழ்படிதலோடு நடக்கும்போது தேவனாகிய கர்த்தர் நமக்கு முன்னே போய், கோணலானவைகளை செவ்வையாக்கி நமக்காக யுத்தம்பண்ணுகிறவராய் இருக்கிறார், துரோகம் நேர்ந்தாலும், இயேசு கிறிஸ்து அதை புரிந்துகொள்கிறார்; ஏனெனில் அவரும் தம்முடன் நெருக்கமாக நடந்த ஒருவரால் ஒப்புக்கொடுப்பட்டார். இந்த சத்தியம், பயத்தினால் அல்ல, விசுவாசத்தில் உறுதியாக நிற்கும் ஒரு ஆவிக்குறிய குடும்பத்தை நாம் தேடவும், அத்தகைய குடும்பமாக நாம் மாறவும் அழைக்கிறது. இன்று, கிறிஸ்துவின் இருதயத்தை பிரதிபலிக்கும் விசுவாசம், ஞானம் மற்றும் அன்பை நாம் தேர்ந்தெடுப்போமாக.

ஜெபம்:

பரலோகத்தில் இருக்கும் எங்களுடைய பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, நான் உமக்கு முன்பாக வருகிறேன். முதலாவதாக, என்னைப் பாதுகாத்ததற்கும், நான் தவறான தேர்வுகளைச் செய்து அதன் விளைவுகளுடன் போராடும்போது என்னைத் கைவிடாததற்கும் நன்றி செலுத்துகிறேன். அநேக முறை, நான் இந்த உலகத்தினுடைய கொள்கைகளைப் பின்பற்றினேன், என்னுடைய குடும்பம் மாறும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் வேதத்தில் குடும்பம் மற்றும் உறவுகளுக்கு தெளிவான மற்றும் சரியான கொள்கைகளை நீர் கொடுத்திருக்கிறீர். உலகத்தின் கொள்கைகளிலிருந்து என்னுடைய இருதயத்தை விடுவித்து, உம்முடைய வார்த்தையில் உள்ள கொள்கைகளின்படி வாழ எனக்கு உதவி செய்யும். நீரே எங்களுடைய உண்மையான குடும்பம், எப்போதும் என்னை உண்மையான ஐக்கியத்திற்குள் நடத்துவதற்கு வல்லவராய் இருக்கிறீர். ஆயினும், என்னுடைய வசதிக்காக உம்முடைய வழிநடத்துதலை நான் பலமுறை விட்டு விலகியிருக்கிறேன். உம்முடைய அன்பான எச்சரிக்கைகளுக்கும் சீர்திருத்தங்களுக்கும் நன்றி செலுத்துகிறேன். இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்து, விசுவாசமுள்ள மக்களுடன் நடந்து, பிசாசுக்கும் எல்லா தீமைக்கும் எதிரான போராட்டத்தில் பெலப்படுத்தப்படுவதன் மூலம் சரியான தேர்வுகளைச் செய்ய எனக்கு உதவும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் ஜெபிக்கிறேன். ஆமேன்.

இந்த வாரம் கற்றுக்கொள்ள வேண்டியது :

நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள் நம்முடைய வெளிப்படையான எதிரிகளிடமிருந்து அல்ல, நம்முடைய நெருங்கிய வட்டத்திற்குள் இருக்கும் மக்களிடம் இருந்தே வருகின்றன. பயமும் சமரசமும், தேவனுடைய நோக்கத்தை கூட பொருட்படுத்தாமல், மக்களுடைய விசுவாசத்தை விட பாதுகாப்பைத் தேர்ந்தெடுக்கச்செய்கிறது. இயேசு கிறிஸ்து நம்மை ஞானமாக நடக்கவும், நெருக்கத்தின் மத்தியில் உறுதியாக நிற்கும் ஒரு ஆவிக்குரிய குடும்பத்துடன் நம்மைச் சூழ்ந்து கொள்ளவும் அழைக்கிறார். நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை இந்த வகையான குடும்பத்தை தேர்ந்தெடுத்து— தேவனாகிய கர்த்தருக்குள் ஒன்றுப்பட்டு ஜெபிக்கிற, மீட்டெடுக்கிற மற்றும் ஒன்றாக சேர்ந்து நிலையாக நின்று நெருக்கக்கூடிய குடும்பமாக இருக்க வேண்டும்.

(2026 ஜனவரி மாதம் 10 அன்று கேள் மத்தேயு 11:28 ஊழியங்கள் சார்பாக Rev. இம்மானுவேல் அருள் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி லல்லியால் மொழிப்பெயர்க்ப்பட்டது). 

அறிவிப்புகள்:

1.உங்களுடைய சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவை தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும்காலை 6 மணிக்கு

(இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்.

இணைப்பு:https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09 (சந்திப்பு ஐடி (Meeting ID): 8114423 5750.  கடவுச்சொல் (Password): 12345).

2. தனிப்பட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை உபயோகித்த தயவாக ஏற்பாடு செய்யுங்கள்.

https://scheduler.zoom.us/rev-immanuel-paul/appointment

3. எங்களுடைய ஊழியங்கள் மற்றும் கூடுகைகளை குறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல் தொடர்புகளை பெற்றுக் கொள்ள எங்களுடைய வாட்ஸ்அப் (WhatsApp) குழுவில் சேர உங்களை அழைக்கிறோம் https://chat.whatsapp.com/EokMFGuZdgb23Sg8BsHzas

4. இனி வரும் எங்களுடைய தியான செய்திகளை நீங்கள் தொடர்ந்து பெற விரும்புவீர்கள் என்றால், உங்களுடைய பெயரையும் மின்னஞ்சல் ஐடி யையும் (email ID) எங்களுடைய தகவல் சேகரிக்கும் தரவுதளத்தில் புதுப்பித்து மேம்படுத்துவதற்காக உங்களுடைய உதவியை நாங்கள் தயவாக கேட்டுக் கொள்கிறோம்.

இதற்காக, நீங்கள் நிரப்பும் படியாக ஒரு சிறிய கேள்வித்தாளை நாங்கள் தயார் செய்து இருக்கிறோம். இதை நீங்கள் நிரப்பி அனுப்பியவுடன் ஒரு ஆறு மாத பதிவு திட்டத்தில் நீங்கள் சேர்க்கப்படுவீர்கள். தமிழ், ஆங்கிலம், மற்றும்/ அல்லது தெலுங்கு மொழிகளில் நீங்கள் எந்த மொழியில் இந்த வெளியீடுகளை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யலாம். நீங்கள் ஒன்று அல்லது பல மொழிகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த செயல்முறையை நாங்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மறுபடியும் புதுப்பிப்போம். இந்த கேள்வித்தாளிற்கான இணைப்பை உங்களுடன் மின்னஞ்சல் மூலமாக அல்லது எங்களுடைய இணையதளத்திலும் நீங்கள பெற்றுக்கொள்ளலாம்

இணையதளத்திற்கக்கான இணைப்பு: https://hearmatthew1128.org/

கேள்வித்தாளிற்கானஇணைப்பு: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd1CqDjh3ofH8KyqVfzTnG38kCZxAzOyp8MHecoFrY6lL4p3Q/viewform

இந்த செயல்முறை மூலமாக கேள்வித்தாளை முடிப்பவர்களுக்கு மட்டுமே இனி வரும் தியான செய்திகள் அனுப்பப்படும் என்பதை தயவாக குறித்துக் கொள்ளுங்கள்.

உங்களுடன் விசுவாசத்திலும்  ஐக்கியத்திலும்  நடக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

Click Here to Download as PDF -> Tamil

Read More →

வாராந்திர வேத தியானம்: இல்லை என்று சொல்ல மறந்துவிடுதல் – பொய்யான அடையாளத்தை விட, தேவனாகிய கர்த்தருடைய சத்தியத்தைத் தேர்ந்தெடுப்பது.

வேத தியானக் குறிப்பு : எண்ணாகம் 13 & 14 அதிகாரங்கள்.

அன்புள்ள தேவனுடைய சபையே,

எங்கள் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்கள்! இந்த புதிய ஆண்டிற்குள் நாம் அடி எடுத்து வைக்கும் போது, புதிய வாக்குத்தத்தங்கள், புதிய தொடக்கங்கள், கடந்த காலத்தின் வலி மற்றும் காயங்களைப் நாம் பின்னாக விட்டுச் செல்வதற்கான வழிகளைத் தேடுவது இயல்பானது தான். ஆனால், எண்ணாகமம் 13 மற்றும் 14 ஆம் அதிகாரங்களில் உள்ள சம்பவத்தை நோக்கிப் பார்த்தால், இந்த ஆண்டிற்குள் தெளிவுடனும் தைரியத்துடனும் நம்மை வழிநடத்தக்கூடிய ஒரு வல்லமையான பாடத்தை நாம் காண்கிறோம்.

தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு கானான் தேசத்தை வாக்குத்தத்தமாக அளித்தார். ஆனால், அவர்களுடைய பெலத்தை அடிப்படையாக கொண்டு அவர்களை அவர் அனுப்பவில்லை. அவர்கள் அவரை முழுமையாக விசுவாசித்தால், அவர்கள் எவ்வாறாக இருக்க முடியும் என்பதை அடிப்படையாக கொண்டு அனுப்பினார். தேசத்தை சுற்றிப் பார்த்த வேவுக்காரர்களில் 10 பேர் தவறான அறிக்கையுடன் திரும்பினார்கள். அது, அந்த தேசத்தில் ஆசீர்வாதங்கள் இல்லை என்பதாலல்ல, ஆனால், தேவனாகிய கர்த்தருடைய கண்ணோட்டத்தோடு அவர்களுடைய சிந்தைகளும் இருதயங்களும் ஒத்திருக்காமல் இருந்ததே காரணம் ஆகும். தேவனாகிய கர்த்தருடைய சத்தியத்தைப் பற்றிக்கொள்வதற்கு பதிலாக, பயமானது தங்களுடைய நிஜத்தை வரையறுக்க அனுமதித்தார்கள்.

இதில், விஷயம் என்னவென்றால், சில நேரங்களில், நம்முடைய சொந்த வாழ்க்கையிலும் தவறான கேள்விகளுக்கு “இல்லை” என்று பதில் சொல்ல நாம் மறந்து விடுகிறோம். “நான் உண்மையிலேயே இதை செய்ய முடியுமா?” அல்லது “நான் உண்மையிலேயே போதுமானவனா/ போதுமானவளா?” — இத்தகைய கேள்விகளே நம்மை பயத்தில் சிக்கவைக்கின்றன. அந்த பத்து வேவுக்காரர்கள் போலவே, நாமும்   வாக்குத்தத்தங்களை நோக்கிப் பார்ப்பதற்குப் பதிலாக, நம்முடைய குறைகளையே நோக்கிப் பார்க்கிறோம். பயத்தினாலும், நமக்கு முடி சூட்டப்பட்ட பெயர்களினாலும், உலகத்தின் பொய்களினாலும், மற்றும் சத்துரு நம் மீது வைத்த கட்டுப்பாடுகளினாலும் நாம் பொய்யான அடையாளத்துக்குள் வனையப்படும் படியாக நம்மை அனுமதித்திருக்கிறோம்.

ஆனால், நமக்கு நம்பிக்கை இருக்கிறது. நிஜமான நம்மை நாம் கண்டடைவதற்காக இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார். நம்முடைய பயம், சந்தேகம், மற்றும் பொய்யான அடையாளத்தை விட்டு விடுதலையோடு அவருக்குள் நாம் மெய்யாக யாராக இருக்கிறோம் என்பதற்குள் நம்மை அழைக்கிறார். தேவனாகிய கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் கூடுமானவைகளா என்று கேட்பதற்கு பதிலாக, நாம், “என்னுடைய சிந்தனையானது அவருடைய சத்தியத்தோடு ஏன் பொருந்தி இருக்கவில்லை?” என்று கேட்டு அவருடைய புதுப்பிக்கும்
கிரியைய்க்கு ஒப்பு கொடுக்க வேண்டும்.

யோசுவாவும் காலேபும் அந்த வேவுகாரர்கள் பார்த்த அதே பலவான்களையும் கோட்டைகளுடைய பட்டணங்களையும் பார்த்தார்கள். ஆனால், அவர்கள் காணப்படுகிறவைகளை விட தேவனாகிய கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்க தேர்ந்தெடுத்தார்கள். அவர்களுடைய நம்பிக்கை அவர்களுடைய பெலத்தின் மேல் அல்லாமல், ஏற்கனவே வெற்றியை வாக்குத்தத்தம் பண்ணினவரின் மேல் இருந்தது. நம்முடைய சிந்தனையை நாம் தேவனாகிய கர்த்தருடைய சத்தியத்தோடு ஒன்று பொருத்தும் போது நாம் இனி பயத்தினால் அல்லாமல் விசுவாசத்தினால் வரையறுக்கப்படுவோம், மற்றும், பொய்களினால் அல்லாமல் இயேசு கிறிஸ்து நமக்குள் இருக்கும் நிஜத்தினால் வனையப்படுவோம்.

எனவே, இந்த புதிய வருடத்தின் கேள்வி இதுதான்: நம்முடைய பயங்களின் நிமித்தமான பொய்யான அறிக்கையோடு ஒத்துக்கொள்கிறோமா, அல்லது, இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக முழுமையாக ஜீவனோடு இருக்கும் நம்முடைய மெய்யான சுயத்தோடு இருக்கும் படியாக அவர் அழைக்கும் அடையாளத்துக்குள் தைரியமாக அடி எடுத்து வைப்போமா? வானத்தையும் பூமியையும் உருவாக்கினவர் இடத்தில் இருந்து வாக்குத்தத்தம் வந்தது என்பதை நாம் மறந்து நம்முடைய கட்டுப்பாடுகளுக்கும் குறைபாடுகளுக்கும் “இல்லை” என்று சொல்ல மறந்து விட்டோம். இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் வாங்கபட்டும் மீட்கப்பட்டும் மற்றும் அனைத்தையும் தேவனாகிய கர்த்தருடைய மகிமைக்காக சுதந்தரித்துக் கொள்வதற்கு தகுதியாக்கப்பட்டு இருக்கிறோம்.

எனவே, நம்முடைய பயம், சந்தேகம், மற்றும் கட்டுப்பாடுகளுக்கு நாம் இல்லை என்று சொல்லி, தேவனாகிய கர்த்தருடைய ஐஸ்வர்யங்களுக்கு ஆம் என்று சொல்லும் வருடமாக இந்த வருடம் இருக்கட்டும். அவர் உங்களை எப்படி பார்க்கிறாரோ அவ்வாறே நீங்களும் உங்களை பாருங்கள்.

 

இன்றைய சிந்தனைக்கு

உங்களுடைய பயங்களையும் கட்டுப்பாடுகளையும் விட தேவனாகிய கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் பெரிதானவைகள் என்பதை இன்று நினைவு கூறுங்கள். எண்ணாகமம் 13 மற்றும் 14 இல் இருக்கும் அந்த பத்து வேவுகாரர்களைப் போல, சந்தேகமும் பொய்யான அடையாளங்களும் நாம் நம்மை எவ்வாறு காண்கிறோம் என்பதை வனைவதற்கு அனுமதிப்பது எளிதானதாகும். ஆனால், இயேசு கிறிஸ்து பயத்தை விட்டு நீங்கள் வெளியே வந்து அவருக்குள்ளாக நீங்கள் உண்மையாக யாராய் இருக்கிறீர்கள் என்பதை கண்டடையும்படியாக உங்களை அழைக்கிறார். யோசுவாவும் காலேபும் தங்களுடைய சொந்த பெலத்தை அல்லாமல் தேவனாகிய கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை நம்பி அவருடைய வார்த்தையை தோற்றங்களை விட நம்ப தேர்ந்தெடுத்தனர். இந்த புதிய வருடத்தன்று பயம், சந்தேகம், மற்றும் கட்டுப்படுத்துபவைகளுக்கு இல்லை என்று சொல்லி உங்களுக்காக இயேசு கிறிஸ்து வைத்திருக்கும் முழுமையான ஜீவனுக்கு ஆம் என்று சொல்லுங்கள். நீங்கள் எதை உணர்கிறீர்கள் அல்லது இந்த உலகம் எதை சொல்லுகிறது என்பதை பொறுத்து வாழாமல் உங்களை தன்னுடைய பிள்ளை என்று அழைக்கும் அவருடைய வாக்குத்தத்தங்களின்படி வாழுங்கள்.

 

ஜெபம்

பரலோகத்தில் இருக்கும் எங்களுடைய பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உமக்கு முன்பாக நன்றியுள்ள இருதயங்களுடன் வருகிறோம். நாங்கள் உம்முடைய இரக்கத்திற்காகவும், கிருபைக்காகவும், மற்றும் நீர் எங்களை அனைத்து ஆபத்துகளில் இருந்தும் இந்த கடந்த வருடத்தில் பாதுகாத்ததற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் எங்களை விசாரித்து எங்களுக்கு கொடுத்த அனைத்துக்கும் நாங்கள் உண்மையாகவே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உம்முடைய மகிமையையும் நீர் எங்களுக்கு கொடுத்த இரட்சிப்பில் நாங்கள் களிகூறவும் நீர் எங்களை உம்முடைய அன்பினால் ஆறுதல் படுத்தி எங்களுடைய ஒவ்வொரு தேவையிலும் எங்களை வழிநடத்துவதற்கு உம்முடைய பரிசுத்த ஆவியானவரை கொடுத்தற்காக நன்றி. தேவனே, எங்களுடைய வாழ்க்கையில் நீர் எங்களுக்கு கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களை மறந்து விட்டு இந்த உலகத்தின் பொய்களை நம்பும் எங்களுடைய தீய பழக்க வழக்கத்தில் இருந்து விடுவிக்கப்படுவதற்காக நாங்கள் ஜெபிக்கிறோம். தேவனே, எங்களை நீர் பெலப்படுத்தி உம்முடைய கிருபையை எங்களுக்கு அருளி எங்களைக் கண்டித்து உணர்த்தி உம்மோடு நெருக்கமாக இருக்க எங்களை வழி நடத்தும். இந்த ஜெபம் உம்முடைய பார்வையில் ஏற்புடையதாக இருப்பதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம், ஆமென்.

 

இந்த வாரம் கற்றுக்கொள்ள வேண்டியது

உங்களுடைய பயமோ அல்லது பொய்யான அடையாளங்களோ உங்களை வரையறுக்க அனுமதிப்பதை விட தேவனாகிய கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை நம்புங்கள். அவருக்குள் முழு ஜீவனோடு உங்களுடைய மெய்யான தன்மைக்குள் நீங்கள் அடி எடுத்து வைக்கும் படியாக இயேசு கிறிஸ்து உங்களை அழைக்கிறார். சந்தேகத்திற்கும் குறைபாடுகளுக்கும் இல்லை என்று சொல்லி அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிற ஜீவனுக்கும் வெற்றிக்கும் ஆம் என்று சொல்லுங்கள்.

அறிவிப்புகள்:

1.உங்களுடைய சீஷத்துவ   பயணத்தில்   நீங்கள்  ஆதரவை  தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும்  காலை 6   மணிக்கு  (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ         கூடுகையில்          சேர         உங்களை          நாங்கள்    அன்புடன் அழைக்கிறோம்.

இணைப்பு: https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09 (சந்திப்பு ஐடி (Meeting ID) : 8114423 5750.    கடவுச்சொல் (Password): 12345).

  1. தனிப்பட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை உபயோகித்த தயவாக ஏற்பாடு செய்யுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul/appointment
  2. எங்களுடைய ஊழியங்கள் மற்றும் கூடுகைகளை குறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல் தொடர்புகளை பெற்றுக் கொள்ள எங்களுடைய வாட்ஸ்அப் (WhatsApp) குழுவில் சேர உங்களை அழைக்கிறோம் https://chat.whatsapp.com/EokMFGuZdgb23Sg8BsHzas
  3.  இனி வரும் எங்களுடைய தியான செய்திகளை நீங்கள் தொடர்ந்து பெற விரும்புவீர்கள் என்றால், உங்களுடைய பெயரையும் மின்னஞ்சல் ஐடி யையும் (email ID) எங்களுடைய தகவல் சேகரிக்கும் தரவுதளத்தில் புதுப்பித்து மேம்படுத்துவதற்காக உங்களுடைய உதவியை நாங்கள் தயவாக கேட்டுக் கொள்கிறோம்.இதற்காக, நீங்கள் நிரப்பும் படியாக ஒரு சிறிய கேள்வித்தாளை நாங்கள் தயார் செய்து இருக்கிறோம். இதை நீங்கள் நிரப்பி அனுப்பியவுடன் ஒரு ஆறு மாத பதிவு திட்டத்தில் நீங்கள் சேர்க்கப்படுவீர்கள். தமிழ், ஆங்கிலம், மற்றும்/ அல்லது தெலுங்கு மொழிகளில் நீங்கள் எந்த மொழியில் இந்த வெளியீடுகளை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யலாம். நீங்கள் ஒன்று அல்லது பல மொழிகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

    இந்த செயல்முறையை நாங்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மறுபடியும் புதுப்பிப்போம். இந்த கேள்வித்தாளிற்கான இணைப்பை உங்களுடன் மின்னஞ்சல் மூலமாக வரும் சில நாட்களில் பகிர்ந்து கொள்ளுவோம். இதை எங்களுடைய இணையதளத்திலும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த செயல்முறை மூலமாக கேள்வித்தாளை முடிப்பவர்களுக்கு மட்டுமே இனி வரும் தியான செய்திகள் அனுப்பப்படும் என்பதை தயவாக குறித்துக் கொள்ளுங்கள்.

உங்களுடன் விசுவாசத்திலும்  ஐக்கியத்திலும்  நடக்க   நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

Click Here to Download as PDF -> Tamil

 

 

Read More →

வாராந்திர வேத தியானம்: இது கிறிஸ்துமஸ்

வேத தியானக் குறிப்பு : ஏசாயா 9:2 “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.( ஏசாயா 9 : 2 )

நம் தேவனாகிய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பேற்ற நாமத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தச் செய்தி கிறிஸ்துமஸுக்குப் பிறகு உங்களைச் சென்றடையலாம், ஆனால் நாம் கிறிஸ்துமஸ் ஏன்  கொண்டாடுகிறோம் என்பதைப் பற்றி சிந்திப்பதற்க்கு இது ஒருபோதும் தாமதமான ஒன்று அல்ல. நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை நாம் அடிக்கடி சொல்லுகிறோம். அது உண்மையிலேயே அற்புதமான நற்செய்தி தான்! ஆனால், சில நேரங்களில் கிறிஸ்துமஸுக்குப் பின்னால் உள்ள ஒரு முக்கியமான கேள்வியை நாம் தவறவிடுகிறோம்.

இயேசு கிறிஸ்து ஏன் வந்தார்?

வேதாகமம் முழுவதும், கர்த்தராகிய தேவன் தனிநபர்களையும், கோத்திரங்களையும், ஜனங்களையும் தங்களை தாங்களே உயர்த்திக் கொள்வதற்காக அல்லாமல் உலகத்திற்கு ஆசிர்வாதமாக இருப்பதற்கே தெரிந்துகொண்டார். இந்த அழைப்பு சுயநலமாக மாற்றப்பட்ட போதெல்லாம், அழிவு தொடர்ந்தது.

நம்மை நம்முடைய பாவத்திலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் விடுவிக்க இயேசு கிறிஸ்து வந்ததால் அவருடைய பிறப்பு நற்செய்தியே. ஆனால், நாம் இதன் நோக்கத்தை மறந்துவிட்டால், நாம் உண்மையில் எதைக் கொண்டாடுகிறோம்? தேவன், ஆதாமையும் ஏவாளையும் ஆசீர்வாதமாக இருப்பதற்கே உருவாக்கினார். அவர் ஆபிரகாமைத் தெரிந்துகொண்டது, அவரின் மூலம் எல்லா ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதற்காகவே. இயேசு கிறிஸ்து அவருடைய சீஷர்களை உலகிற்கு அவருடைய ஒளியை எடுத்துச் செல்லவே அழைத்தார். சகேயு கூட இயேசு கிறிஸ்துவை சந்தித்தபின், தன்னுடைய வளங்களை எல்லாம் தேவையுள்ளவராகிய ஏழைகளை உயர்த்தும்படி பயன்படுத்தினான்; அவனுடைய வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது.

சாலொமோனைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். அவர் கட்டிய ஆலயம் இஸ்ரவேலுக்கான ஒரு பரிசுத்த இடமாக மட்டும் இல்லாமல், ஜாதிகள் அனைத்துக்கும் ஆசீர்வாதமாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டது. எல்லா மக்களும் தேவனுடைய நாமத்தை அறிந்து அவருக்கு பயப்படும்படியாக, சாலமோன் தன்னுடைய ஜெபத்தில், ஆலயத்தை நோக்கி திரும்பி வருகிற புறஜாதியார்களின் அழுகுரல்களையும் கர்த்தராகிய தேவன் கேட்க வேண்டும் என்று வேண்டுகிறார். தேவன் தமது ஜனங்களின் மூலம் உலகத்தை ஆசீர்வதிக்க விரும்புகிறார் என்பதை தேவாலயத்தின் கட்டிட  அமைப்பும் அதன் நோக்கமும் சுட்டிக்காட்டின. எனவே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் நடுவில், நான் உங்களிடம் இந்தக் கேள்வியை கேட்க என்னை தயவாக அனுமதியுங்கள்:

நீங்கள் ஒரு ஆசீர்வாதமாக இருக்க தேர்ந்தெடுப்பீர்களா?

வெறும், “நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்” என்று மட்டும் சொல்லாமல் இயேசு கிறிஸ்துவின் அன்பை உங்கள் குடும்பத்திற்கும், பிறரிடத்திலும், மற்றும் தேசத்தின் மேலும் அன்பு காட்ட தேர்வு செய்ய உங்களால் முடியுமா? உங்களை சுற்றி இருக்கும் மக்கள் உங்களுடைய கனிவான, மனமார்ந்த, மற்றும் இறக்கமான செயல்களின் மூலமாக மீட்பரின் பிறப்பின் பிரகாசத்தை காணட்டும். தாவீது தன்னுடைய அந்தஸ்தை தவறாய் பயன்படுத்தி பாவம் செய்தபோது அவன் வெளிச்சத்திற்கு ஒரு தடங்கலாய் மாறினதினால் தேவனாகிய கர்த்தர் அவனை நியாயம் தீர்த்தார். ஆனால் இயேசு கிறிஸ்து இருளும் மரணமும் நிறைந்திருந்த இந்த உலகத்திற்கு ஒரு மகத்தான மறுரூபப்படுத்தக் கூடிய ஒளியாக வந்தார்.

இந்தக் காலத்திலும் மற்றும் எப்போதும் இந்த ஒளியை நாம் பிரகாசிப்போமாக. மற்றவர்களை நாம் ஆசீர்வதிப்பதின் மூலமாக இயேசு கிறிஸ்துவின் மூலம் நாம் பெற்றிருக்கும் நித்திய ஜீவனை நாம் வெளி காட்டுவோமாக. நம்முடைய கொண்டாட்டங்கள் பாடல்களுடனும் அலங்காரங்களுடனும் முடிவடையாமல் கிரியையிலும் அன்பிலும் சேவையிலும் நிரம்பி வழிவதாக.

இயேசு கிறிஸ்துவின் ஒளியானது இன்று உங்கள் மூலமாக பிரகாசிக்கக்கடவதாக.

 

இன்றைய சிந்தனைக்கு

இன்று, நாம், இயேசு கிறிஸ்து நம்மை இரட்சிப்பதற்காக மட்டுமல்லாமல்  மற்றவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக வைக்கவும் வந்தார் என்பதை நினைவு கூறுகிறோம். வேதாகமத்தின் முழுவதிலும், தேவன், ஆதாம் ஏவாளிலிருந்து ஆபிரகாம், சாலமோனின் தேவாலயம், மற்றும் தன்னுடைய சீஷர்களுக்கும் வைத்திருந்த அழைப்பு எப்போதுமே அவருடைய ஒளியை உலகத்திற்கு பிரகாசிக்க கூடிய வெளிப்புற நோக்கத்துடன் இருந்தது. சகேயுவைப் போல மெய்யான மறுரூபமாக்கப்படுதல் தானாகவே இரக்கத்தின் மூலமாகவும் தாராள மனத்தன்மையின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்தும். இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நம்முடைய விசுவாசமானது வார்த்தைகளை தாண்டி இயேசு கிறிஸ்துவின் இருதயத்தை வெளிக்காட்டும் செய்கையாக கடந்து செல்வதாக. இன்று உங்களின் மூலமாக ஏதாவது ஒருவர் தேவனின் அன்பை அனுபவிக்கட்டும்.

ஜெபம்

பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உமக்கு முன்பாக வருகிறோம். தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்களுக்காக வழங்கிய அனைத்து காரியங்களுக்காகவும் உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்காகவும் அவருடைய வார்த்தைக்காகவும் பரிசுத்த ஆவியானவர்க்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்று, கிறிஸ்துமஸ் என்ற ஈவுக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அது நாட்காட்டியில் ஒருநாளாய் இருந்தாலும் அது மெய்யாகவே தினமும் நினைவு கூறப்பட வேண்டும் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள் சில நேரங்களில் இந்த உலகத்தின் கவலைகளிலும் நுகத்திலும் சிக்கிக் கொண்டு நீர் வாஞ்சிக்கிற விதத்தில் கொண்டாட மறந்துவிடுகிறோம் என்பதை நாங்கள் அறிக்கை செய்கிறோம். கிறிஸ்துமஸ் ஏன் (நோக்கம் என்ன) என்பதை நாங்கள் சற்று நிதானித்து தியானம் செய்ய நீர் கொடுத்த இந்த நேரத்திற்காக உமக்கு நன்றி. எங்களுடைய துன்மார்க்கத்திலிருந்து எங்களை விடுவித்து உம்முடைய இராஜ்யத்திற்கு கனி கொடுக்கிறவர்களாக எங்களை மாற்றி  ஆசிர்வாதமாக இருக்க எங்களுக்கு உதவி செய்யும். உம்முடைய ஒளி எப்போதும் எங்கள் மூலமாக பிரகாசிக்கட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமேன்.

இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது

இயேசு கிறிஸ்து ஒரு நோக்கத்துடன் வந்தார்: அதாவது, இந்த உலகத்திற்கு இரட்சிப்பையும் ஒளியையும் கொண்டு வந்தார். தேவன், எப்போதுமே தன்னுடைய பிள்ளைகள் வெறும் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளுகிறவர்களாய் மட்டும் அல்லாமல் ஒரு ஆசீர்வாதமாகவும் இருக்க தெரிந்து கொண்டார். சாலமோனின் தேவாலயத்தை போல நம்முடைய வாழ்க்கை மற்றவர்களை தேவனுக்கு நேராக இழுக்க கூடியதாக இருக்க வேண்டும். மெய்யான கொண்டாட்டம் சடங்காச்சாரங்களை தாண்டி கிரியையாக மாற வேண்டும். நம்முடைய கனிவு, இரக்கம், மற்றும் அன்பின் நிமித்தமாக இயேசு கிறிஸ்துவை ஒவ்வொரு நாளும் வெளிகாட்டுவோமாக.

(2025 டிசம்பர் மாதம் 27 அன்று கேள் மத்தேயு 11:28 ஊழியங்கள் சார்பாக Rev. இம்மானுவேல் அருள் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி லல்லி மற்றும் ஜெசிந்த் ஏஞ்சலால் மொழிப்பெயர்க்ப்பட்டது).

 அறிவிப்புகள்:

1.உங்களுடைய சீஷத்துவ   பயணத்தில்   நீங்கள்  ஆதரவை தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும்  காலை 6   மணிக்கு  (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ         கூடுகையில்          சேர         உங்களை          நாங்கள்    அன்புடன் அழைக்கிறோம்.

இணைப்பு: https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09 (சந்திப்பு ஐடி (Meeting ID) : 8114423 5750.    கடவுச்சொல் (Password): 12345).

2. தனிப்பட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை உபயோகித்த தயவாக ஏற்பாடு செய்யுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul/appointment 

3. எங்களுடைய ஊழியங்கள் மற்றும் கூடுகைகளை குறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல் தொடர்புகளை பெற்றுக் கொள்ள எங்களுடைய வாட்ஸ்அப் (WhatsApp) குழுவில் சேர உங்களை அழைக்கிறோம் https://chat.whatsapp.com/EokMFGuZdgb23Sg8BsHzas

4. இனி வரும் எங்களுடைய தியானச் செய்திகளை நீங்கள் தொடர்ந்து பெற விரும்புவீர்கள் என்றால், உங்களுடைய பெயரையும் மின்னஞ்சல் ஐடி யையும் (email ID) எங்களுடைய தகவல் சேகரிக்கும் தரவுதளத்தில் புதுப்பித்து மேம்படுத்துவதற்காக உங்களுடைய உதவியை நாங்கள் தயவாக கேட்டுக் கொள்கிறோம்.

இதற்காக, நீங்கள் நிரப்பும் படியாக ஒரு சிறிய கேள்வித்தாளை நாங்கள் தயார் செய்து இருக்கிறோம். இதை நீங்கள் நிரப்பி அனுப்பியவுடன் ஒரு ஆறு மாத பதிவு திட்டத்தில் நீங்கள் சேர்க்கப்படுவீர்கள். தமிழ், ஆங்கிலம், மற்றும்/ அல்லது தெலுங்கு மொழிகளில் நீங்கள் எந்த மொழியில் இந்த வெளியீடுகளை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யலாம். நீங்கள் ஒன்று அல்லது பல மொழிகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த செயல்முறையை நாங்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மறுபடியும் புதுப்பிப்போம். இந்த கேள்வித்தாளிற்கான இணைப்பை உங்களுடன் மின்னஞ்சல் மூலமாக வரும் சில நாட்களில் பகிர்ந்து கொள்ளுவோம். இதை எங்களுடைய இணையதளத்திலும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த செயல்முறை மூலமாக கேள்வித்தாளை முடிப்பவர்களுக்கு மட்டுமே இனி வரும் தியான செய்திகள் அனுப்பப்படும் என்பதை தயவாக குறித்துக் கொள்ளுங்கள்.

உங்களுடன்  விசுவாசத்திலும்   ஐக்கியத்திலும்  நடக்க  நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

 

 

 

 

Read More →

அனுதின வேத தியானம்: தேவனின்ஆம்” மற்றும்ஆமேன்

வேத தியானக் குறிப்பு : 2 கொரிந்தியர் 1 : 20 “எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.

இன்றைக்கு, நான் உங்களோடு சேர்ந்து தேவனுடைய வாக்குத்தத்தங்களின் வல்லமையையும் அர்த்தத்தையும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் இருந்து தியானிக்க விரும்புகிறேன். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உறுதியற்றவையோ அல்லது முரண்பாடானவையோ அல்ல. கிறிஸ்துவில், அவருடைய பதில் உறுதியானதும் முழுமையானதுமான ஆம் என்றே இருக்கிறது. நாம் ஆமென் என்று பதிலளிக்கும்போது, “உண்மையாகவே, அப்படியே ஆகட்டும், அது நிறைவேறட்டும்” என்று அறிவிக்கிறோம். ஆமென் என்பது நம்முடைய ஒப்பந்தத்தின் வார்த்தையாகும். அதாவது, அது தேவனின் உண்மை தன்மையின் மேல் இருக்கும் நம்முடைய நம்பிக்கையின் முத்திரை ஆகும்.

மேலிருக்கும் இந்த வசனத்தில் இருக்கும் நுட்பமான ஆனால் வல்லமையான பகுதி இதுதான்: தேவனுடைய அனைத்து ஆம் என்பவைகள் அவரிலேயே உள்ளன; எல்லா ஆமென் என்பதும் அவரினாலேயே வருகிறது; இவை அனைத்தும் தேவனுடைய மகிமைக்காகவே உண்டானவை.

அவரில் – தேவனுடைய வாக்குத்தத்தங்கள் குறைபாடு உள்ளவைகளாகவோ அல்லது நோக்கம் இல்லாமல் சிதறடிக்கப்பட்டோ இருப்பதில்லை. அவை, கிறிஸ்துவை மையமாகக் கொண்டுள்ளன. நம்முடைய நம்பிக்கை, விசுவாசம், மற்றும் மகிழ்ச்சி ஆகியவை அவரிலே உறுதியாக பதியப்பட்டுள்ளன.

அவர்மூலமாக — தேவனுடைய “ஆமென்” வெறும் ஒரு சொல்லாக மட்டும் இருப்பது அல்ல. அது நம்முடைய வாழ்க்கையின் நடைமுறையில் உண்மையாக செயல்படுவதாகும். கிறிஸ்துவின் மூலமாக தன்னுடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதற்காக அவர் செயல்படுகிறார். ஆசீர்வாதங்களும், வழிநடத்துதலும், மறுரூபமாக்கப்படுதலும் அவர்மூலமாகவே பெருகி வருகின்றன.

தேவனுடைய மகிமைக்காக —தேவன் செய்கிற ஒவ்வொரு செயலும், அவர் உரைக்கிற ஒவ்வொரு “ஆம்” மற்றும் “ஆமென்” என்பதும் இறுதியில் அவருடைய மகிமையையே வெளிப்படுத்துகின்றன. நம்முடைய வாழ்க்கையானது  அவருடைய உண்மைத் தன்மையை வெளிப்படுத்திக் காட்டும் கருவியாய் இருக்கின்றது.

அங்கீகரிக்கப்படுவதா அல்லது மறுரூபமாகப்படுவதா?

பெரும்பாலும், நாம் ஏற்கனவே வேண்டும் என்று நினைத்து விரும்புவதை தேவன் வெறுமென அங்கீகரிப்பார் என்று நம்பிக்கையோடு ஜெபிக்கிறோம். அவர் தலையசைத்து, “ஆம், தொடர்ந்து செய்” என்று சொல்லுவாரென நாம் ஏங்குகிறோம். ஆனால், தேவனுடைய இருதயம் நம்முடைய விருப்பங்களை வெறும் உறுதிப்படுத்துவதற்காக அல்ல — நம்மை மறுரூபப்படுத்துவதே அவருடைய நோக்கமாக இருக்கிறது.  அவருடைய வாக்குத்தத்தங்கள் நாம் எப்படி இருக்க வேண்டுமோ அத்தகைய மக்களாக வனையப்படுவதற்கு ஏதுவாகவே இருக்கின்றன. சில நேரங்களில், அவருடைய “ஆம்” உடனடியாக நம்மை மகிழ்ச்சியடையச் செய்யக்கூடிய ஒன்றாய் இருப்பதில்லை; ஆனால், அது நம்மை உண்மையில் நன்மையானவர்களாய் இருக்கவும், நமது குணாதிசயத்தை சுத்திகரிக்கிறதாகவும், மற்றும் அவரோடு  நம்மை இன்னும் கிட்டி நெருங்கச்  செய்கிறதாயும் இருக்கிறது.

எல்லா நல்ல உணர்வுகளும் நன்மையானவை அல்ல

உணர்வுகள் தந்திரமானவை. நீதிமொழிகள் 14:12 “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.” என்று எச்சரிக்கிறது. நாம் நல்லதாய் உணர்கிற அனைத்துமே எப்போதும் நன்மையானதல்ல. நம்முடைய உணர்வுகள் நம்மைத் தவறாக வழிநடத்தலாம்; ஆனால், தேவனுடைய வார்த்தையோ நிலையானதும், மாறாத உண்மையுமாயிருக்கிறது. அவருடைய ஆம் என்பது நமது நிலையற்ற விருப்பங்களில் வேர் கொண்டு அல்லாமல் அவருடைய பரிபூரண ஞானத்தில் வேரூன்றி இருக்கிறது.

தேவனால் அருளப்பட்ட வேத வாக்கியங்கள்

 வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையும் தேவனுடைய உயிர் மூச்சாகும் (2 தீமோத்தேயு 3:16). ஒவ்வொரு வாக்குத்தத்திற்கும் ஒரு குறிப்பான நோக்கம் இருந்தது. ஒவ்வொரு சத்தியமும் ஜீவன் உள்ளதாயும் செயல்முறையில் உள்ளதாயும் இருக்கிறது. ஏசாயா 55:11 இவ்வாறு நம்மை நினைவூட்டுகிறது: அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். தேவனுடைய ஆம், அவருடைய வாக்குத்தத்தங்களில் காணப்பட்டவைகளின் மூலமாக நாம் முற்றிலும் புரிந்து கொள்ளாவிட்டாலும் நம்முடைய வாழ்க்கையில் முக்கியமாக நிலைத்திருக்கும் நன்மையை நிறைவேற்றுகிறார்.

தேவனுடைய ஆவியினால் மறுரூபமாக்கப்பட்ட ஒரு ஆத்துமா

மெய்யான காரியம் இதுதான் – மாம்சத்தில் குறைபட்ட நிலைமையில் நாம் வாழுவதினால் நம்முடைய ஆத்துமாவினால் தேவனுடைய ஆம் என்பதை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாது. அவருடைய “ஆமேன்” எப்போதுமே உடனடியான திருப்தியையும் சிற்றின்பத்தையும் கொடுக்காது. சில நேரங்களில் அது ஒரு சிட்ச்சையாகவும் சீர்திருத்துதலாகவும் தோன்றலாம். ஆனால் இதுதான் நம்முடைய ஆத்துமாவிற்கு சரியாக தேவைப்பட்டதாகும். தேவனுடைய உடன்படிக்கை, நம்மை அழிக்கக்கூடிய நம்முடைய வாஞ்சைகளிலிருந்து நம்மை விடுதலையாக்கவும், நமக்கு தீங்கு உண்டாக்கக்கூடியவைகளிலிருந்து நம்முடைய ஏக்கத்தை திருப்புவதும், மற்றும் நித்திய சந்தோஷத்திற்குள் நம்மை நடத்துவதற்காகவும் இருக்கிறது. “ஆம்” என்று தேவன் சொல்லுவது நம்மை பிரியப்படுத்துவதற்காக அல்ல. அது மீட்பிற்க்காகவும், மறுரூபப்படுவதற்காகவும், அவருக்குள் மெய்யாக களிகூறுவதற்காகவும் உண்டானது.

    எனவே, இன்றைக்கு, தேவனுடைய வாக்குத்தத்தங்களின் நிச்சயதத்தில் நாம் இளைப்பாறுவோமாக. நாம் அதின் முழு தாக்கத்தையும் பார்க்க முடியாவிட்டாலும் அவருடைய ஆம் என்பது பூரணமானது என்பதை நம்பி “ஆமேன்” என்று விசுவாசத்திலே சொல்லுவோமாக. மாம்சத்தின் அழிந்துபோகும் தற்காலிகமான திருப்தியிலிருந்து  நம்முடைய சந்தோஷம் வராமல், எப்போதுமே உண்மையுள்ளவராகவும், நன்மையானவராகவும், தன்னுடைய வாக்குத்தத்தங்களில் தோல்வியற்றவராகவும் இருக்கும் தேவனோடு நம்முடைய ஆத்துமா ஒன்று பொருந்தி இருப்பதினால் மட்டுமே வருகிறது. தேவனுடைய ஆம் என்பது ஒரு அங்கீகாரம் அல்ல. அது ஒரு ஜீவன் கொடுக்கும் ஆத்துமாவின் ஆழத்தில் நடைபெறும் மறுரூபம் ஆகும். ஆமேன்.

இன்றைய சிந்தனைக்கு

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் என்றுமே நிச்சயமானவை. கிறிஸ்துவுக்குள் அனைத்து வாக்குத்தத்தங்களும் உறுதியான ஆம் என்பதாகும். அதற்கு நாம், ஆமேன் என்று பதில் அளிக்கும் போது நாம் தேவனுடைய நம்பிக்கையான திட்டத்திற்கு ஒப்புக்கொள்கிறோம். அவருடைய ஆம் என்பது நம்முடைய வாஞ்சைகளுக்கு ஒரு ஒப்புதலாக மட்டுமல்லாமல், அது நம்முடைய இருதயங்களை வனையக்கூடிய, நம்முடைய ஏக்கங்களை திசை திருப்பக்கூடிய, மற்றும் நம்மை நித்திய சந்தோஷத்திற்குள் நடத்தக்கூடிய ஒரு மறுரூபமாகும் கிரியையாகும். அது ஒரு சிட்சையாகவோ அல்லது சீர்திருத்ததலாகவோ தோன்றினாலும், தேவனுடைய ஆமேன் என்பது கிறிஸ்துவின் நிமித்தமாக நம்முடைய நன்மைக்காக அவருடைய மகிமைக்காக கிரியை செய்கிறது. இன்று நாம் அவருடைய பூரணமான ஆம் என்பதை நம்பி அதற்கு ஆமேன் என்று விசுவாசத்திலே சொல்லி அவருடைய மாறாத வாக்குத்தத்தங்களின் நிச்சயத்தில் இளைப்பாறுவோமாக.

ஜெபம்

பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உமக்கு முன்பாக நாங்கள் வருகிறோம். நீர் எங்களை மிக ஆழமாக அன்பு கூர்ந்ததினால் உம்முடைய ஒரே பெயரான குமாரனை எங்களுடைய இரட்சிப்பிற்காக நீர் கொடுத்தீர். நீர் எத்தகையான விலையேறப்பெற்ற மதிப்பை எங்கள் மேல் வைத்திருக்கிறதை அது காட்டுகிறது. ஆனாலும் அந்த மதிப்பை நாங்கள் அநேக நேரம் புரிந்து கொள்ளாமல் நீர் எங்களுக்காக வைத்திருக்கும் தரத்திலிருந்து நாங்கள் எங்களை தாழ்த்துகிறோம். நாங்கள் பாவிகளாய் இருந்தாலும் நீர் எங்களை  விலையேறப்பெற்றவர்கள் என்று அழைக்கிறீர். நாங்கள் தகுதியற்றவர்களாய் இருந்தாலும் எங்களை தேர்ந்தெடுத்தீர். உம்முடைய அனுகிரகத்தில் மெய்யாக களிகூறுவதற்காக இன்றைக்கு எங்களை உமக்கு முன்பாக தாழ்த்துகிறோம். நீரே அன்பு, சமாதானம், மற்றும் சந்தோஷத்தின் முழுமையாய் இருக்கிறீர். இந்த உலகத்தின் தற்காலிகமான இன்பங்கள் அல்லாமல் உம்முடைய இரட்சணியத்தின் சந்தோஷமே எங்களுடைய வாழ்க்கையில் தொடர்ந்து இருப்பதாக. எங்களை உயிர்ப்பியும் கர்த்தாவே. நீ நல்லவர் என்பதை ருசித்துப் பார்க்கும்படியாய் எங்களுக்கு உதவி செய்யும். எங்களுக்கு எதிராக எழும்பும் அனைத்து வஞ்சனைகளில் இருந்தும் குற்றஞ்சாட்டுகளில் இருந்தும் எங்களை விடுவியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம், ஆமேன்.

இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது

கிறிஸ்துவுக்குள்ளான தேவனின் வாக்குத்தத்தங்கள் அனைத்தும் உறுதியான ஆம் என்பதாயும், நம்முடைய ஆமென் என்பது அவருடைய உண்மைத் தன்மையில் நாம் வைக்கும் விசுவாசமாகும். அவருடைய ஆம் என்பது நம்முடைய தற்காலிகமான வாஞ்சைகளை மட்டும் திருப்திபடுத்தாமல், அது நம்மை மறுரூபப்படுத்தி அவருடைய நித்திய சந்தோஷத்திற்குள் நடத்துகிறது. சீர்திருத்துதலாக தோன்றினாலும் தேவனுடைய ஆமேன் என்பது நம்முடைய நலனுக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் செயல்படுகிறது. எனவே, அவருடைய மாறாத வாக்குத்தத்தங்களில் இளைப்பாறும்படியாக நான் உங்களை இன்று அழைக்கிறேன். 

(2025 டிசம்பர் மாதம் 20 அன்று கேள் மத்தேயு 11:28 ஊழியங்கள் சார்பாக Rev. இம்மானுவேல் அருள் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி லல்லி மற்றும் ஜெசிந்த் ஏஞ்சலால் மொழிப்பெயர்க்ப்பட்டது). 

அறிவிப்புகள்:

1.உங்களுடைய  சீஷத்துவ   பயணத்தில்   நீங்கள்  ஆதரவை  தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும்  காலை 6   மணிக்கு  (இந்திய நேரப்படி)  நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ         கூடுகையில்          சேர         உங்களை          நாங்கள்    அன்புடன்  அழைக்கிறோம்.

இணைப்பு: https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09 (சந்திப்பு ஐடி (Meeting ID) : 8114423 5750.    கடவுச்சொல் (Password): 12345).

2. தனிப்பட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை உபயோகித்த தயவாக ஏற்பாடு செய்யுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul/appointment

3. எங்களுடைய ஊழியங்கள்  மற்றும்  கூடுகைகளை குறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல் தொடர்புகளை பெற்றுக் கொள்ள எங்களுடைய வாட்ஸ்அப் (WhatsApp) குழுவில் சேர உங்களை அழைக்கிறோம் https://chat.whatsapp.com/EokMFGuZdgb23Sg8BsHzas

உங்களுடன் விசுவாசத்திலும்  ஐக்கியத்திலும்  நடக்க   நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் -> Tamil

Read More →

அனுதின வேத தியானம்: தேவனுடைய பாதுகாப்பு என்றால் என்ன?

வேத தியானக் குறிப்பு : சங்கீதம் 121:8 யெகோவா உங்களை எல்லாத் தீங்கினின்றும் விளக்கி காப்பார்; / அவர் உங்கள் ஆத்துமாவைப் பாதுகாப்பார்.

      “தேவன் நம்மைப் பாதுகாப்பார்” என்று மக்கள் பொதுவாக சொல்வார்கள், தெரியுமா? ஆனாலும், வாழ்க்கையானது இன்னும் ஏன் வேதனையாக இருக்கிறது? நாம் நம் அன்றாட வாழ்க்கையில் மக்களை இழக்கிறோம், போராட்டங்களை சந்திக்கிறோம், உலகிலுள்ள தீமைகளை காண்கிறோம். ”அப்படியானால், தேவன் உண்மையில் எதிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறார்?” என்று நம்மை சிந்திக்க வைக்கிறது. நீங்கள் வேதத்தை நீதானமாகப் பார்க்கும்போது அது உண்மையில் மூன்று விஷயங்களின் அடிப்படையில் வருகிறது. அவைகள்: மரணம், பிசாசு மற்றும் தீமை.

     முதலாவதாக, நம்மில் பெரும்பாலோர் மரணம் நிகழ்வதை இருப்பதிலேயே மிகவும் மோசமான விஷயமாக பார்க்கிறோம். ஆனால், இயேசுவுக்கு சொந்தமான ஒருவருக்கோ மரணம் என்பது முடிவு அல்ல. அது உண்மையில் ஒரு நுழைவாயிலாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார். அப்படியென்றால், மரணம் என்பதற்கு இனிமேல் இறுதி வாக்குரிமை இல்லை. நிச்சயம், எல்லோரும் ஒரு நாள் மரணத்தை எதிர்கொள்ள தான் போகிறோம். ஆனால், நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருப்பீர்களானால் அதைக் குறித்து பயப்பட வேண்டியதில்லை. நாம் சரீர ரீதியாக மரிப்பதை அநேக நேரம் தேவன் தடை செய்யாமல் இருந்தாலும் நம்மை அதின் பயத்தில் இருந்து பாதுகாக்கிறார். “மரணம் என்பது தோல்வி அல்ல, அது நம்முடைய நித்திய வாசஸ்தலத்திற்கு செல்வது” என்று நாம் சொல்லக்கூடியதாய் இருக்கிறது. இது ஒரு மகத்தான காரியம் ஆகும்.

     இரண்டாவதாக இயேசு, மரணத்தை மட்டும் ஜெயங்கொள்ளவில்லை, பிசாசையும் தோற்கடித்தார். சில நேரங்களில் நாம் நம்முடைய சிந்தையில் சத்துருவிற்கு  அதிக பலத்தை கொடுக்கிறோம். நாம் சோதிக்கப்படும்போது, ​​குழப்பமடையும்போது அல்லது ஆவிக்குரிய விஷயங்களில் தாக்கப்படும்போது ​​நாம் உறுதியாக நின்று, “நான் இயேசுவைச் சேர்ந்தவன் – நான் அவருடைய இரத்தத்தால் மூடப்பட்டிருக்கிறேன்.” என்று சொல்ல முடியும். இதை பிசாசு  வெறுக்கிறான். மாறாக, பயம் மற்றும் சந்தேகத்தின் மூலமாக நாம் அவனுக்கு இடம் கொடுப்பதை அவன் தக்க வைத்துக் கொள்கிறான். கடிக்க இயலாத பாம்பைப் போல சாத்தான் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுள்ளான். நாம் நம்மில் பலம் உள்ளவர்களாக இருப்பதன் மூலம் அல்ல, மாறாக, நாம் யாரைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்வதன் மூலமே அவனை எதிர்த்து நிற்கிறோம்.

     இறுதியாக, தீமை என்பது எப்போதும் வெளிப்படையானதாகவே இருக்காது. அது, நாம் சில நேரங்களில் இயேசுவை விட்டு சிறிதளவு விலகிப் போகும் போதும் ஒரு அமைதியான வெறுமையை நாம் உணர்வதாயும் இருக்கிறது. ஆனால், அதில் இதுதான் சிறந்த பங்கு – அதாவது, நாம் அங்கேயே சிக்கிக் கொள்வதில்லை. இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார். நாம் அவரைப் பற்றிக் கொள்ளும் போது வெளிச்சமானது இருளை பின் தள்ளுகிறது. ஆத்துமாவைப் பாதுகாத்துக் கொள்வது என்பது கோபத்துடனோ  அல்லது பழிவாங்குவதற்காகவோ சண்டை போடுவது அல்ல. அது, பொய்களுக்கு “இல்லை” என்று பதில் அளித்து தேவனுடைய சத்தியத்தை அதற்கு மாறாக தெரிந்து கொள்வதாகும். தானியேலை குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். யோசேப்பை குறித்து சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் கசப்புடன் எதிர்த்து சண்டை போடவில்லை. அவர்களின் அநீதியான காலங்களில் அவர்கள் தேவனை நம்பினார்கள். சரியான நேரத்தில், தேவன் அவர்களை தூக்கி எடுத்தார். அதே தேவன் உங்கள் மேலும் இப்போது கண்ணோட்டமாய் இருக்கிறார். உங்கள் ஆத்துமாவை பாதுகாக்க அவர் பலன் உள்ளவராய் இருக்கிறார். அவர் உங்களை அவருடன் நடப்பதற்காக மட்டுமே அழைக்கிறார். எனவே, இருளானது கிசுகிசுக்கும் போது அதனுடன் ஒத்துக் கொள்ளாதீர்கள். உங்களுடைய கண்களை இயேசுவுக்கு நேராக திருப்பி, அவர் அந்த பாரத்தை சுமக்க அனுமதியுங்கள்.

இன்றைய சிந்தனைக்கு:

     வாழ்க்கையானது நிச்சயமற்றதாகவும், பாரமானதாகவும், நிர்ணயிக்க முடியாததாகவும் இருக்கலாம். ஆனால், தேவனுடைய பாதுகாப்பு நாம் உணர்வதற்கு மேலாக ஆழமாக செல்கிறது. அவர் நம்முடைய ஆத்துமாக்களை பாதுகாக்கிறார். கிறிஸ்துவுக்குள், மரணம் முடிவு அல்ல, பிசாசிற்கு அதிகாரம் கிடையாது, மற்றும் தீமை ஜெயிக்க முடியாது. ஒருவேளை தற்போது வாழ்க்கையானது செம்மையாய் இல்லாதிருக்கலாம். யாரும் காணக் கூடாத கேள்விகளையும் பயங்களையும் போராட்டங்களையும் நீங்கள் தாங்கிக் கொண்டு இருக்கலாம். ஆனால், நீங்கள் பாதுகாக்கப்படாமல் இல்லை. நீங்கள் தனிமையாய் இல்லை. தேவன் பயத்தை விட அருகாமையில் இருக்கிறார், சத்ருவை விட பலமானவராய் இருக்கிறார், மற்றும் இருளை விட வெளிச்சமானவராய் இருக்கிறார்.

ஜெபம்:

     பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உமக்கு முன்பாக தாழ்மையான இருதயங்களுடன் நாங்கள் வருகிறோம். அநேக நேரம் நீர் எங்களுக்கும் எங்களுடைய ஆத்மாக்களுக்கும் கொடுக்கும் பாதுகாப்புக்காகவும் நீர் எங்களுக்கு வாக்குதத்தம் பண்ணின நித்திய ஜீவனுக்காகவும் நன்றியோடு இருக்க மறந்து விடுகிறோம். நாங்கள் எங்களுடைய வியாதிகளிலும் போராட்டங்களிலும் மற்றும் இந்த உலகத்தின் சோதனைகளிலும் சிக்கிக் கொண்டு உம்முடைய கரிசனையையும் இரக்கத்தையும் கண்டு கொள்வதில் தோல்வி அடைகிறோம். ஆனால், வாழ்க்கையானது கடினமாய் இருந்தாலும் நீர் உண்மையுள்ளவராய் இருக்கிறீர். பேதுருவின் விசுவாசம் ஒழிந்து போகாத படி இருக்க நீர் ஜெபித்தது போலவே எங்களுடைய விசுவாசத்தை நீர் பலப்படுத்தி, எங்களுடைய இருதயத்தை பாதுகாத்து, உம்முடைய அதிகாரத்திலும் தெய்வத்துவத்திலும் நாங்கள் முழுமையாக நம்பி இருக்க உதவி செய்யும்படியாக கேட்டுக்கொள்கிறோம். தேவனே, நீர் எங்களை உம்மோடு கிட்டி சேர்த்து கொண்டு உம்முடைய ஆவி எங்களை வழி நடத்தி பாதுகாப்பதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபித்து இதை ஒப்புக்கொடுக்கிறோம். ஆமென்.

இன்றைக்கு கற்றுக் கொள்ள வேண்டியது:

   தேவன் நம்மை பாதுகாப்பது என்பது வாழ்க்கை எப்போதும் இலகுவானதாக இருக்கும் என்பது அல்ல. ஆனால், அது, நம்முடைய ஆத்துமா அவரில் பாதுகாப்பாய் இருக்கிறது என்று அர்த்தமாகும். மரணம் நம்முடைய முடிவு அல்ல. பிசாசு நம்மை உரிமை கோர முடியாது. மேலும், கிறிஸ்துவுக்குள் நாம் கொண்டிருக்கும் ஒளியை பிசாசு மேற்கொள்ள முடியாது. இயேசுவோடு நெருங்கி இருங்கள். அவருடைய பிரசன்னம் உங்களின் சமாதானமாய் இருப்பதாக.

(2025 டிசம்பர் மாதம் 13 அன்று கேள் மத்தேயு 11:28 ஊழியங்கள் சார்பாக Rev. இம்மானுவேல் அருள் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி லல்லி மற்றும் ஜெசிந்த் ஏஞ்சலால் மொழிப்பெயர்க்ப்பட்டது).

அறிவிப்புகள்:

1.உங்களுடைய  சீஷத்துவ   பயணத்தில்   நீங்கள்  ஆதரவை தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும்  காலை 6   மணிக்கு  (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ         கூடுகையில்          சேர         உங்களை          நாங்கள்    அன்புடன்  அழைக்கிறோம்.

இணைப்பு: https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09 (சந்திப்பு ஐடி (Meeting ID) : 8114423 5750.    கடவுச்சொல் (Password): 12345).

  1. தனிப்பட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை உபயோகித்த தயவாக ஏற்பாடு செய்யுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul/appointment
  2. எங்களுடைய ஊழியங்கள்  மற்றும்  கூடுகைகளை குறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல் தொடர்புகளை பெற்றுக் கொள்ள எங்களுடைய வாட்ஸ்அப் (WhatsApp) குழுவில் சேர உங்களை அழைக்கிறோம் https://chat.whatsapp.com/EokMFGuZdgb23Sg8BsHzas  உங்களுடன்             விசுவாசத்திலும்             ஐக்கியத்திலும்               நடக்க           நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

.

Read More →

அனுதின வேத தியானம்: மோசடி செய்பவர்களை குறித்து கவனமாக இருங்கள்

            என் குடும்பத்தினரே, நான் உங்களிடத்தில் ஒரு நிமிடம் வெளிப்படையாக பேசலாமா? இந்த வாரத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என்னை அதிகமாக உலுக்கியது. என்னைப் போல் பாசாங்கு செய்து எவரோ ஒருவர் பேஸ்புக்கில் (Facebook) ஒரு போலி கணக்கை உருவாக்கி மக்களிடத்திலிருந்து என் பெயரில் பணம் வாங்கும் அளவிற்கு செயல்பட்டுள்ளார். இதயம் நொறுங்கும் வகையில் இதில் அநேகர் வஞ்சிக்கப்பட்டனர். நான் காலை விழித்தெழுந்து என்னுடைய செய்திகளை பார்த்த போது இச்சம்பவம் நடந்ததை நான் கண்டு என்னுடைய இருதயம் தோய்ந்து போனது. “ஏன் இது நடந்தது? ஏன் மக்கள் இத்தகைய காரியங்களுக்கு பலியாகிறார்கள்?” போன்ற எண்ணங்கள் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இதைக் குறித்து ஒரு சகோதரர் சொல்லிய ஒரு கருத்து என்னை ஜெபத்திற்குள்ளாகவும் சிந்தனை செய்வதற்காகவும் நடத்தியது அந்த நேரத்தில் வந்த இந்த தியான செய்தியை உங்களிடத்தில் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இதில் மெய்யான காரியம் இதுதான்: மோசடி செய்பவர்கள் கொம்புடனும் கையில் மண் கோரி போன்ற கருவியுடனும் வர மாட்டார்கள். அப்படி அவர்கள் வருவார்கள் என்றால் நாம் அவர்களை எளிதாக கண்டுகொள்ள முடியும். ஆனால், பிசாசைப் போலவே, அவர்கள் ஒளியை போல் இருக்கும் ஒரு வஞ்சகத்தை போர்த்தி கொண்டு வருவார்கள். அதாவது, பார்வைக்கு சரியாகவும், கேட்பதற்கு சரியாகவும், நம்புவதற்கு பெரும்பாலும் ஏற்றதாகவும் தோன்றும் ஒரு பாவனையில் வருவார்கள். வேதாகமம், பிசாசு ஒளியின் தூதன் போல் வேஷம் தரித்து வருவான் என்று கூறுகிறது. அதாவது, மெய்யான தேவனின் பிரகாசமான ஒளியாக அல்லாமல் ஒரு காவல் காக்கப்படாத இருதயத்தை வஞ்சிக்க கூடிய ஒரு மங்கலான போலியான ஒளியாக வருகிறான்.

அப்படியெனில், இதற்கு நாம் ஏன் சில நேரங்களில் விழுந்து போகிறோம்? நாம் முட்டாள்களாய் இருப்பதினாலோ அல்லது கவனக்குறைவாக இருப்பதினாலோ அல்ல. மாறாக, அது, அந்த நேரத்தில் இயேசுவோடு இருக்கும் நம்முடைய ஐக்கியம் ஆழமாகவோ, நிலையாகவோ, அல்லது செயல்பாட்டிலோ இருக்க வேண்டிய நிலையில் இல்லாமல் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பாக இதை ஏதேன் தோட்டத்திலும் நாம் காண முடிகிறது. ஆதாமும் ஏவாளும் தேவனோடு அனுதினமும் ஐக்கியமான பிணைப்பில் நடப்பதற்காக ஒரு தோட்டத்தை தேவன் உருவாக்கினார். ஆனால், “அறிவு” என்ற வேஷத்தில் வஞ்சனை வந்த போது அவர்கள் அந்த ஐக்கியத்தில் சார்ந்திருக்கவில்லை. அடிப்படையாக, “இது, உங்களுடைய வாழ்க்கையை மேன்மைப்படுத்தும்.” என்று சர்ப்பம் அவர்களிடத்தில் சொல்லியது. இந்தக் குறிப்பு, கேட்பதற்கு நன்கு அறிந்ததாக இருக்கிறதா?

உலகமும் இன்னும் இதே வாக்கியங்களை தான் நுண்ணியமாக சொல்லிக்கொண்டே இருக்கிறது. ” இங்கு வா, இது உன்னுடைய வாழ்க்கையை மேம்படுத்தும்.” “இதை செய்து பார். இதைத்தான் நீ இவ்வளவு நாள் இழந்து போய் இருக்கிறாய்.” “மெய்யான ஞானம் இதுதான்.” ஆனால், இயேசு இதற்கு மாறாக முற்றிலுமான வேறு ஒரு பாதைக்கு நம்மை அழைக்கிறார். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” என்று சொல்லுகிறார். நாம் அநேக நேரம், காணிக்கை கொடுப்பது, தசம பாகம் செலுத்துவது, வேதம் வாசிப்பது, சடங்காச்சாரமாக ஜெபிப்பது, மற்றும் சபை ஆராதனைகளுக்கும் சுவிசேஷ கூட்டங்களுக்கும் செல்வது போன்ற பக்திக்கு ஏதுவான செயல்களை தேவனுடனான ஐக்கியமான உறவை கொள்வதற்கு பதிலாக கையாளுகிறோம். இவைகள் நமக்கு மன ரீதியாக ஒரு ஆறுதலை தருவது போல் தோன்றுவதினால் இவைகளை செய்கிறோம். கவலைக்கிடமாக, இந்த பழக்கங்களே ஒருவரின் வாழ்க்கைக்குள்ளாக மோசடி செய்பவர்கள் நுழைவதற்கு உகந்தவைகளாக மாறுகின்றன. இந்த வஞ்சனை மோசடிகளாய் மற்றும் வருபவை அல்ல. அது, மாம்சத்திற்கு ஆறுதல் தரும் சோதனைகள் மூலமாகவும் வருகிறது. மது அருந்துதல், புகைபிடித்தல், ஆபாச காட்சிகளை பார்த்தல் அல்லது வாசித்தல், கட்டுப்படுத்த முடியாத கோபம், கசப்பு, குற்றப்படுத்துதல், மற்றும் அனைத்து விதமான அழிவிற்கான பழக்க வழக்கங்களாக இருக்கலாம். இவை சிற்றின்பம், நிவாரணம், ஒரு சூழ்நிலையில் இருந்து மனரீதியாக பிரிக்கப்பட்டு தப்பிப்பதற்கு, அல்லது “இன்னும் ஒரே முறை மாத்திரம்” போன்றவைகளாக வேஷம் தரித்து வருகின்றன. ஆனால், இதற்கு கீழாக அவைகள் ஆத்துமாவைக் கட்டுப்படுத்த விரும்புகின்றன, விடுதலை செய்ய அல்ல.

குடும்பத்தினரே, உங்களுக்கான மெய்யான அழைப்பு இதுதான்: குறுக்கு வழியில் ஒரு மேம்படுத்தப்பட்ட நல்ல வாழ்க்கைக்காக வாக்குத்தத்தம் பண்ணப்படும் அறிவை நாடாதீர்கள். பரிசுத்த ஆவியானவரோடு கிட்டி சேர்ந்து இருங்கள். தேவனுடைய சரீரமான விசுவாசிகளின் கூடுகையில் வேரூன்று இருங்கள். நாம் ஒன்றாக நடக்கும் போது, ஒன்றாக வளரும் போது, ஒன்றாக ஜெபிக்கும் போது, மற்றும் பரிசுத்த ஆவியானவருடன் ஒரே நிலையில் இருக்கும் போது தேவனுடைய ராஜ்யம் என்பது நாம் வெறுமென பேசும் ஒரு காரியமாக அல்லாமல் நாம்  மெய்யாகவே வாழ்வதாக மாறுகிறது.

மேலும், நீங்கள் சமீபத்தில் வஞ்சிக்கப்பட்டு, வேதனைப்படுத்தப்பட்டு, அல்லது தவறாக வழிநடத்தப்பட்டு இருப்பீர்கள் என்றால் நான் சொல்லுவதை தயவு செய்து கேளுங்கள். அவமானமோ வெட்கமோ படாதிருங்கள். அது, தேவனை விட்டு உங்களை தள்ளுவதாக அல்லாமல் அவருடன் உங்களை கிட்டி சேர்ப்பதாக இருக்கட்டும். இயேசுவுடன் நாம் வைக்கக்கூடிய ஆழமான ஐக்கியம் அவரின் இரத்தத்தின் மூலமாக வாங்கப்பட்டும் உறுதிப்படுத்தப்பட்டும் இருப்பதினால் நமக்கு அதற்கு முழு அங்கீகாரம் இருக்கிறது. எந்த ஒரு மங்கலான போலியானதும் நம்மை இனி ஏமாற்றாத படி நாம் அவருடைய மெய்யான ஒளியின் அருகிலே நிற்போமாக.

 

இன்றைய சிந்தனைக்கு:

            இயேசு கிறிஸ்து, ஏற்கனவே பிசாசையும் அவனுடைய அனைத்து திட்டங்களையும் கல்வாரியின் சிலுவையிலே வெற்றி சிறந்தார் என்று இன்றைக்கு நான் நினைவு படுத்தப்படுகிறேன். இருப்பினும் விசுவாசிகளாக நாம் சில நேரங்களில் சத்துருவின் கண்ணியில் சிக்கிக் கொள்கிறோம். இது அவன் பலனானவன் என்பதால் அல்ல, ஆனால், நாம் தொடர்ச்சியாக இயேசு கிறிஸ்துவுடன் ஐக்கியத்தில் நெருக்கமாக இல்லாமல் இருப்பதினால். இந்த உலகம், நம்மை எளிதான முறையில் வெற்றி கொள்ள, துரிதமாக சந்தோஷத்தை பெற்றுக்கொள்ள, மற்றும் பலருக்குக் கிடைக்காத இரகசிய அறிவை பெற்றுக்கொள்ள வாக்களித்து நம்மை ஆசை காட்டுகிறது. ஆனால் இவைகள் எல்லாம் அவருடைய சத்தியத்தில் இருந்து நம்மை கவனம் சிதற வைக்கிறவைகள். இயேசு கிறிஸ்துவுடன் நாம் ஐக்கியமாக பிணைக்கப்பட்டு அவருடைய பிரசன்னத்தில் அனுதினமும் நடப்பது நம்மை வஞ்சனைகளை கண்டு கொள்ளவும் அவர் ஜெயித்து பெற்ற வெற்றியை வாழவும் நம்மை தகுதிப்படுத்துகிறது. ஆகவே, நம்முடைய பெலனும், ஒளியும், அசைக்க முடியாத கோட்டையுமாக இருக்கும். இயேசு கிறிஸ்துவை நாம் பற்றிக் கொள்வோமாக.

 

ஜெபம்:

            பரலோகத்தில் இருக்கும் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உமக்கு முன்பாக வருகிறோம். நீர் ஒருவரே எங்களை அனைத்து கண்ணியில் இருந்தும் தீய திட்டங்களில் இருந்தும் பாதுகாக்கிறவராய் இருக்கிறீர். ஆனால், அநேக நேரம், நீர் எங்களுடைய வாழ்க்கையை தீமையிலிருந்தும் அழிவிலிருந்தும் வஞ்சனையிலிருந்தும் எண்ணற்ற நேரங்களில் பாதுகாத்து வைத்திருப்பதை நாங்கள் அங்கீகரிக்கவும் அதற்காக நன்றி சொல்லவும் மறந்து விடுகிறோம். நீர் எப்பொழுதும் எங்களுடைய வழிநடத்தும் ஒளியாய், மீட்பராய், மற்றும் இரட்சகராய் இருக்கிறீர். இரட்சணியத்தின் சந்தோஷத்தில் நாங்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கும்படியாக உம்முடைய செட்டைகளின் கீழ் அடைக்கலம் பெற எங்களுக்கு உதவி செய்யும். மேலும், நாங்கள் புரிந்து கொள்ளாமல் ஜெபம் செய்யும் பொழுதோ அல்லது நடந்துகொள்ளும் பொழுதோ எங்களை உம்முடைய கிருபையின் அன்பிலே நினைவுகூர்ந்து எங்களுடைய அர்ப்பணிப்பை ஏற்றுக்கொண்டு உம்மோடு கிட்டி சேர்ப்பீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமென்.

 

இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது:

வஞ்சனையானது, அநேக நேரம், கவர்ச்சிகரமாகவும் நம்பத்தக்கதாகவும் அல்லது ஒளி நிறைந்ததாகவும் காணப்படுகிறது. ஆனால், நம்முடைய இருதயங்கள் இயேசு கிறிஸ்துவை விட்டு தூரமாய் இருக்கும்போது மட்டுமே சத்துருவின் திட்டங்கள் பலிக்கின்றன. ஜெபம், வேதம் வாசித்தல், மற்றும் ஐக்கியம் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் இயேசு கிறிஸ்துவுடன் நாம் வைக்கும் அனுதின நெருக்கமே நம்முடைய பகுத்தறியும் தன்மையை கூர்மைப்படுத்தி பொய்யானவைகளில் இருந்து நம்மை பாதுகாத்து மெய்யான ஒளியிலே தொடர்ந்து நடக்க வைக்கின்றது. குறுக்கு வழிகள் அல்லது துரிதமாக ஆதாயம் பெற்றுக் கொள்ளும்படியான வாக்குத்தத்தங்கள் மூலமாக ஈர்க்கப்படும் போது, சற்று ஓய்ந்திருங்கள், இயேசு கிறிஸ்துவின் மேல் சார்ந்து இருங்கள், மற்றும் அவருடைய பிரசன்னத்தில் வேரூன்றி நில்லுங்கள்.

 

(2025 டிசம்பர் மாதம் 06 அன்று கேள் மத்தேயு 11:28 ஊழியத்தின் சார்பாக Rev. இம்மானுவேல் அருள் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி ஜெசிந்த் ஏஞ்சலால் மொழிப்பெயர்க்ப்பட்டது).

 

அறிவிப்புகள்:

     1.உங்களுடைய  சீஷத்துவ   பயணத்தில்   நீங்கள்  ஆதரவை தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும்  காலை 6   மணிக்கு  (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்.

இணைப்பு: https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09 (சந்திப்பு ஐடி (Meeting ID) : 8114423 5750.    கடவுச்சொல் (Password): 12345).

  1. தனிப்பட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை உபயோகித்த தயவாக ஏற்பாடு செய்யுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul/appointment
  2. எங்களுடைய ஊழியங்கள்  மற்றும்  கூடுகைகளை குறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல் தொடர்புகளை பெற்றுக் கொள்ள எங்களுடைய வாட்ஸ்அப் (WhatsApp) குழுவில் சேர உங்களை அழைக்கிறோம் https://chat.whatsapp.com/K8DxEhNz9cn6xW12gKBVL0?mode=wwt உங்களுடன்             விசுவாசத்திலும்             ஐக்கியத்திலும்               நடக்க            நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

 

Read More →

அனுதின வேததியானம்: உங்களுடைய முயற்சிகளே முக்கியம், பிரதிபலன்கள் அல்ல.

வேததியானக் குறிப்பு:  மத்தேயு 25:14-30 

நம்முடைய பள்ளி, சமூகம், மற்றும் குடும்பங்கள் நமக்கு என்ன கற்றுக் கொடுத்திருக்கின்றன என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? அவைகள் நமக்கு அர்ப்பணிப்புடன் இருக்கக் கற்றுக் கொடுத்திருக்கின்றனவா அல்லது எப்போதுமே குற்றமில்லாமல் செம்மையானவர்களாய் இருக்கக் கற்றுக் கொடுத்திருக்கின்றனவா? அவைகள் நம்மைக் கொள்கைகளுடனும் கோட்பாடுகளுடனும் வாழக் கற்றுக் கொடுத்திருக்கின்றனவா அல்லது வெற்றிகரமான வாழ்க்கை வாழக் கற்றுக் கொடுத்திருக்கின்றனவா? இந்தக் கேள்விகளை உன்னிப்பாகப் பாருங்கள். நான் பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகளில் மிக பெரிய வித்தியாசம் இருக்கிறது. அர்ப்பணிப்புடன் இருப்பது செம்மையாக இருப்பதை விட மிகவும் வித்தியாசமானது. நாம் கொள்கையுள்ளவர்களாக இருப்பதும் வெற்றியுள்ளவர்களாக இருப்பதும் ஒன்றல்ல. இப்போது, ​​இவற்றில் உண்மையில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் கொள்கைகளை முதன்மைப் படுத்துகிறீர்களா அல்லது உங்களுடைய வெற்றி மற்றும் குற்றமில்லாத செம்மையான வாழ்வை விரும்புகிறீர்களா? உங்களில் பெரும்பாலோர்க்கு உங்களுடைய பதில் தெளிவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இப்போது, ​​உங்களை நீங்களே, “இதை குறித்து வேதம் என்ன அறிவுறுத்துகிறது?” என்று கேட்டுக்கொள்ளுங்கள். அப்போது அதற்கான பதில் தெளிவாக இருக்கும். 1 சாமுவேல் 16:7 “கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.”  

மத்தேயு 25:14-30-ல் உள்ள தாலந்துகளின் உவமையைக் கவனித்துப் பாருங்கள். இரண்டு மனிதர்கள் தங்களிடம் இருந்த தாலந்துகளை கொண்டு வியாபாரம்பண்ணி சம்பாதித்தார்கள். ஒருவனோ, ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தான். 27-வது வசனத்தைக் கவனியுங்கள். மூன்றாவது மனிதனை, தன்னுடைய தாலந்துகளை அவன் வியாபாரம் பண்ணாமல் இருந்ததற்காகவோ அல்லது வர்த்திக்காமல் இருந்ததற்காகவோ எஜமான் கண்டிக்கவில்லை. அந்த மனிதன் குறைந்தபட்சம் அதை காசுக்காரர் வசத்திலாவது போட்டு வைத்திருந்திருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். அதில் வந்த லாபத்தைக் குறித்து அவர் பேசவில்லை, மாறாக, அந்தத் தாலந்தைக் கொண்டு அந்த மனிதன் எதையும் செய்ய ஆர்வமில்லாதிருக்கிறான் என்பதையே குறிப்பிடுகிறார். இதை வேறு விதமாக சொல்ல வேண்டுமானால், அந்த மனிதன் எந்த முயற்சிகளும் எடுக்காமல் தன்னை ஒரு பாதுகாப்பான நிலைமையில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்ததை குறித்தே அவர் கோபப்படுகிறார். அவன் ஈட்டிய பணத்தின் அளவை விட, அவனுடைய தவறான மனப்பான்மையையும் அணுகுமுறையையும் தேவன் கண்டிக்கிறார். நாம் சற்று நேரமெடுத்து இதை நம்மை நாமே கேட்டுக்கொள்வோம் – பெரும்பாலும், நாம் சரியான காரியத்தை செய்கிறோமா, அல்லது பிரச்சினைகளைத் தவிர்க்க முயற்சித்து மூன்றாவது மனிதனைப் போல குற்றமற்றவர்களாக இருக்க முயற்சிக்கிறோமா? நம்முடைய கவனம் நம்முடைய மனப்பான்மையின் மேல் இருக்கிறதா அல்லது நம்முடைய செயல்திறனின் மேல் இருக்கிறதா? 2 கொரிந்தியர் 8:12 “ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.”

      வேதாகமத்தில் எங்கும் தேவன் குற்றமில்லாமல் செவ்வையாய் இருப்பதையும் மற்றும் வெற்றியையும் அறிவுறுத்தவில்லை. அவர், தேவனுடைய கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் நம்முடைய அர்ப்பணிப்பை மட்டுமே பரிந்துரைக்கிறார். அவர் நம்முடைய குற்றமற்ற செவ்வையான செயல்களை அல்லாமல் நம்முடைய இருதயத்தையே விரும்புகிறார். கொலோசெயர் 3:23,24 “நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்”. பூரணமான உதாரணமான இயேசு கிறிஸ்துவை இப்போது நாம் பார்க்கலாம். இந்த பூமியில் அவருடைய முடிவு தோல்வியானதாகவே இருந்தது. அவர், நீண்ட காலம் வாழவில்லை, அவர் ஒரு துரோகியாகவும் தேவ தூஷணம் செய்பவராகவும் ஜனங்கள் எல்லார் மத்தியில் சிலுவையில் அறையப்பட்டார். அவர் கைவிடப்பட்டார், மற்றும், அவமதிக்கப்பட்டு சபிக்கப்பட்டார். இருப்பினும், அவருடைய மரணம் வரையில் சத்தியத்திற்காக தனது இருதயத்திலிருந்தும் ஆத்துமாவிலிருந்தும் உழைத்தார். அவர் ஜனங்களுடைய கருத்துக்களில் கவனம் செலுத்தவில்லை, மாறாக, நன்மை செய்வதற்கான அவருடைய அர்ப்பணிப்பின் மீதே கவனம் செலுத்தினார். ஆனால், நாம், இதற்கு நேர் மாறாக செயல்படுகிறோம் அல்லவா?

நாம் அநேக நேரம் குற்றமற்று செம்மையாய் இருப்பதிலும் காரியங்களை செய்யக்கூடிய செயல் திறனிலும் பெலனிலும் நம்முடைய கவனத்தை செலுத்தி தோல்வி அடைகிறோம். ஏனென்றால், இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு காரியத்திலும் மனிதனை அல்லாமல் நாம் தேவனையே சேவிக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம். நாம் ஒரு நல்ல கிறிஸ்தவராக, பெற்றோராக, பிள்ளையாக, அல்லது வேலைக்காரராக இருப்பது என்றால் எப்போதுமே மிகச் சிறந்த விளைவுகளையும் பிரதிபலன்களையும் கொடுப்பதே என்று நினைக்கிறோம். ஆனால், அது இதற்கு மாறானது. நாம் எந்த இருதயத்துடன் காரியங்களை செய்கிறோம் என்பதே தேவனுக்கு முக்கியமானது. நம்முடைய செயல்பாடுகளின் அடிப்படையானது அவரை வேர் கொண்டு இருக்குமானால் நம்முடைய பலவீனங்களின் மேல் அவர் எஜமானாய் இருப்பார். முயற்சிகளும் அர்ப்பணிப்பும் நம்முடைய வேலைகள். விளைவுகளை உருவாக்குவது அவருடைய வேலை. இயேசுவினுடைய அர்ப்பணிப்பு உலகத்திற்கு அடுத்த பரிமாணங்களை அல்லாமல் நித்திய பரிமாணங்களை உருவாக்கியது. பிரசங்கி 9:10 செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. 

இன்றைய சிந்தனைக்கு:

தேவனுடைய பார்வையில் மெய்யாகவே எது மதிப்பிடப்படுகிறது – என்னுடைய குணாதிசயமா அல்லது செயல்திறனா? நான் என்னுடைய முழு இருதயத்தின் முயற்சிகளில் மகிழ்ச்சி கொள்கிறேனா அல்லது என்னுடைய மிக செம்மையான செயல்களில் மகிழ்ச்சி கொள்கிறேனா? என்னை திருப்தி படுத்துவது எது – சரியானதை செய்வதா அல்லது நற்பெயரை சம்பாதிப்பதா? நான் இயேசு கிறிஸ்துவை சேவிக்கின்றேனா அல்லது என்னுடைய புகழை சேவிக்கின்றேனா?

ஜெபம்:

பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, நாங்கள் பெரும்பாலும் எங்களுடைய குற்றமற்ற செம்மையிலும், வெற்றிகளிலும் நோக்கமாய் இருக்கிறோம். நாங்கள் எப்பொழுதும் சரியானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நாங்கள் எப்போதும் எங்களுடன் வேலை செய்கிறவர்கள், முதலாளிகள், சக விசுவாசிகள், மற்றும் குடும்ப அங்கத்தினர்களின் அங்கீகரிப்பையும் மதிப்பையும் எதிர்பார்க்கிறோம். நீர் எங்களை எங்களுடைய ஆத்துமாவில் இருந்து உமக்கென்று மனப்பூர்வமாக காரியங்களை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர் என்பதை மறந்து விட்டோம். எல்லா தீர்க்கதரிசிகளும், நியாயாதிபதிகளும், உம்முடைய சீஷர்களும் பலவீனங்களை கொண்டிருந்தார்கள் என்பதை நினைவு கூற எங்களுக்கு உதவி செய்யும். எவருமே குறைபாடற்று செவ்வையானவர்களாய் இருக்கவில்லை. நீர் அவர்களுடைய செவ்வையற்ற நிலைமையை கண்டிக்கவில்லை. அவர்களுடைய கடின இருதயத்தைக் கண்டித்து, அவர்களுடைய மனம் திரும்புதலை கனம் பண்ணினீர். இன்று, எங்களுடைய பலவீனங்களை நாங்கள் ஏற்றுக் கொண்டு எங்களுடைய செம்மையான பிரதிபலிப்புகளின் மேல் அல்லாமல் எங்களுடைய அர்ப்பணிப்பின் மேல் நாங்கள் கவனம் செலுத்த எங்களுடைய இருதயங்களை நீர் சதையானதாய் மாற்ற விண்ணப்பம் செய்கிறோம். எப்படிப்பட்டதான பிரதிபலிப்புகள் நேரிட்டாலும் நாங்கள் நன்மையானதையே செய்ய நோக்கமாய் இருக்க எங்களுக்கு உதவி செய்யும். எங்களுடைய பலவீனங்களின் மேல் நாங்கள் நோக்கம் வைக்கும் போது, நாங்கள் குற்றமில்லாதவர்களாய் இருக்க வேண்டும் என்று நீர் எங்களை கேட்டுக் கொள்ளாமல் நாங்கள் உம்மோடு மாத்திரம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர் என்பதை புரிந்து கொள்ள உதவி செய்யும். எங்களுடைய தேவனும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இணையற்ற நாமத்தின் மூலம் இதை கேட்டுக்கொள்கிறோம், ஆமென்.

இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது:   

      I கொரிந்தியர் 3: 6,7 நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும். குறைபாடு இல்லாமல் செவ்வையாய் இருப்பது என்பது நாம் எப்போதுமே தோல்வி அடைந்து, அடையவே முடியாத ஒரு இலக்கை நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பதற்கே பிசாசினால் உட்படுத்தப்பட்ட ஒரு அளவுகோல் ஆகும். நாம் தேவனுடன் சேர்ந்து இயங்குகிறோமா அல்லது குற்றமில்லாமல் செவ்வையாய் இருப்பதற்காக இயங்குகிறோமா என்பதை மட்டுமே தேவன் எப்போதும் ஆராய்ந்து பார்க்கிறார். நாம் அவருடன் சேர்ந்து இயங்கும் போது செவ்வையாய் இருக்க வேண்டும் என்ற பாரம் நம்முடையது அல்ல. நாம் சவால்களையும் கடினங்களையும் சந்திக்கும் போது, மற்றவர்கள் நம்மை எப்படி பார்த்து மதிப்பிடுகிறார்கள் என்பதை குறித்து கவலைப்படாமல், நாம் நம்முடைய குணாதிசயத்தை இந்த செயல்பாட்டின் மூலம் வளர்த்துக் கொள்ளுவதிலும் தேவனுக்கு முன்பாக உண்மையாய் இருப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவோமானால், பெரும்பாலான பாரம் நம் மேல் இருந்து எடுக்கப்படும். எந்த சூழ்நிலையிலும் நாம் எத்தகைய பிரதிபலன்களை உற்பத்தி செய்கிறோம் என்று அல்லாமல் நம்முடைய குணாதிசயம் மட்டுமே மதிப்பிடப்படுகிறது. நாம் நம்முடைய கரங்களில் இருந்து மனுஷர்களுக்கென்று அல்லாமல், நம்முடைய ஆத்துமாவிலிருந்து மனப்பூர்வமாக தேவனுக்கென்று வேலை செய்யும் பழக்கத்திற்குள் வரவேண்டும். நமக்கு இருக்கும் எல்லாவற்றையும் கொண்டு நமக்கு முடிந்த அளவு சிறந்தவைகளை கொடுக்கிறோமோ? நாம் எல்லா நேரங்களிலும் மனப்பூர்வமாகவும், உண்மையாகவும், முழு அர்ப்பணிப்புடனும் இருக்கிறோமா? இதன் அடிப்படையிலேயே தேவன் நம்மை நியாயம் தீர்க்கிறார். இவைகளில் மட்டும் நாம் நம்முடைய கவனத்தை செலுத்துவோமானால் அவர் மற்றவைகளை பார்த்துக் கொள்வார்.

(2025 நவம்பர் மாதம் 29 அன்று மத்தேயு 11:28 ஊழியத்தின் சார்பாக சகோதரி ஜெசிந்த் ஏஞ்சல் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி ஜெசிந்த் ஏஞ்சல் மற்றும் சகோதரி லல்லியால் மொழிப்பெயர்க்ப்பட்டது).

 

அறிவிப்புகள்:

  1. உங்களுடைய சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவைத் தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இணைப்பு:https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09  (சந்திப்பு ஐடி (Meeting ID) : 811 4423 5750.  கடவுச்சொல் (Password): 12345). 

  1. தனிப்பட்ட ஆலோசனை பெறுவதற்கு எங்களைத் தொடர்புகொள்ளவும். உங்களுடன்    விசுவாசத்திலும்  மற்றும்  ஐக்கியத்திலும்  நடக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம். 
  • எங்களுடைய    ஊழியங்கள்    மற்றும்      கூடுகைகளை குறித்த  அறிவிப்புகளுக்கும்  மற்றும் தகவல் தொடர்புக்கும்  எங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேரவும்: https://chatwhatsapp.com/FQuH58GtkEEApPCm9gN8no 
  • நேரடி ஆலோசனை பெற்றுக்கொள்ளநீங்கள் விரும்பினால்,கீழேஉள்ள  இணைப்பை  உபயோகித்து   ஏற்பாடு செய்யுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul-appointment.
Read More →

அனுதின வேததியானம்: நினைவு கூறுகிற தேவன் 

வேத தியானக் குறிப்பு: உபாகமம் 31:6

வேதாகமம், அநேக நேரம், “தேவன் நினைவுக்கூர்ந்தார்” என்ற சொற்றொடரை உபயோகிப்பதை நாம் பார்க்கலாம். எல்லையற்ற ஜலப்பிரளயத்தில் நோவா மிதந்து கொண்டிருந்ததை தேவன் நினைவுக்கூர்ந்தார். இஸ்ரவேல், எகிப்தில் இருந்து கூக்குரலிட்டதை அவர் நினைவுக்கூர்ந்தார். நீண்ட காலமாக ஒரு குழந்தைக்கான ஏக்கத்தில் இருந்த ராகேலை அவர் நினைவுக்கூர்ந்தார். முதல் கண்ணோட்டத்தில், “நினைவுக்கூர்ந்தார்” என்பது தேவன் சில காலம் மறந்து இருந்திருக்கலாம் என்பதைப் போல தோன்றுகிறது. ஆனால், வேதாகமம், தேவன் “நினைவுக்கூர்ந்தார்” என்று சொல்லும் போது, அவர் தன்னுடைய மக்களை நோக்கி புதிய இரக்கத்துடனும் திட்டமான நடவடிக்கையோடும் கடந்து சென்றதைக் குறிக்கிறது. அது, “இனி, நான் உள்ளே நுழைகிறேன்.” என்று அவர் சொல்லுவதாக இருந்தது.

முக்கியமானவைகள் எவைகளோ அவைகளை மறந்து விடக்கூடாது என்ற முயற்சியில் நாம் அதிக ஆற்றலை செலுத்துகிறோம். ஆனால், முக்கியமானவைகளைப் பற்றிக் கொண்டு மற்றவைகளை கடந்து போக விடுவதற்கு நமக்கு உதவி செய்ய பரிசுத்த ஆவியானவர் ஒரு வழியை வைத்திருக்கிறார். நம்மை ஆழமாய் பாதித்த நம்முடைய பழைய காயங்கள், சட்ட ரீதியான குரல்கள், மற்றும் ஞாபகங்கள் மேல் நமக்கு இருக்கும் பிடியை அவர் தளர்த்துகிறார். சில நேரங்களில், நம்முடைய கடந்த கால துன்பங்களை பற்றி நமக்கு ஞாபக மறதி இருப்பதைப் போல் தோன்றலாம். ஆனால், இந்த ஞாபக மறதியும் ஒரு அமைதியான குணப்படுத்துதலின் ஈவாக மாறுகிறது.

ஆனால், தேவன் மறப்பாரோ? ஒரு பரிசுத்த ரீதியில், ஆம், அவர், நம்முடைய பாவங்களை “மறக்கிறார்.” அதாவது, நம்முடைய பாவங்களை பற்றி அவருக்கு இருக்கும் அறிந்து கொள்ளுதலை அவர் அழிக்க மாட்டார், ஆனால், நாம் செய்ததற்கு ஏற்றவாறு நம்மை கையாளாமல் இருக்கத் தெரிந்து கொள்வதின் நிமித்தம் அதை செய்கிறார். அவருடைய மறதி, நமக்கு கொடுக்கபடும் கிருபையாகும், அவருடைய குறைபாடு அல்ல.

ஆனால், மறுபுறமாக, நிவாரணமே இல்லாமல் அக்கினியாய் தோன்றும் சில காலங்களும் இருக்கின்றன. ஏசாயா, தேவனை, வெள்ளியையும் பொன்னையும் புடமிடுகிறவர் என்று வரையறுக்கிறார். அந்த அக்கினியில் நம்மை சுற்றி எதுவுமே மாறாதது போல் தோன்றுகிறது. அந்த அழுத்தம் நிலை நிற்கிறது. அந்த அக்கினி நிலை நிற்கிறது. வாழ்க்கை ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டதைப் போல் தெரிகிறது. அந்த தருணத்தில் தான் அநேக நேரம் தேவன் அங்கிருந்து வெளியேறி இருப்பதைப் போல் தோன்றுகிறது. ஆனால், புடமிடுகிற ஒருவர், உலோகத்தை எப்போதுமே கவனிக்காமல் விட மாட்டார். தன்னுடைய கண்களை அதின் மேல் நோக்கமாய் வைத்து தன்னுடைய சொந்த ரூபத்தை அதில் காணும் நேரம் வரைக்கும் காத்திருக்கிறார்.

இதுதான் “பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை” என்று உபாகமத்தில் இருக்கும் வாக்குத்தத்திற்க்கு பின்னாக இருக்கும் அர்த்தமாகும். இது, தேவனின் கவனம், ஒரு நிமிடத்திற்கு கூட சிதறவில்லை என்பதற்கான நினைவூட்டுதல் ஆகும். அவருடைய பிரசன்னம் அமைதியாக தோன்றினாலும் அது நிலையானதாகவும் அசையாததாகவும் இருக்கிறது. அவர் நம்மை வனைந்து கொண்டும் மெருகேற்றிக் கொண்டும் இருக்கிறார். பின்பு, உங்களுடைய வாழ்க்கையில் இருந்து அவருடைய குணாதிசயம் பிரகாசிக்கும் போது, தன்னுடைய சுத்திகரிப்பு அதன் வேலையை செய்து முடித்திருக்கிறது என்று அறிகிறார். அதன் பிறகு, அந்த அக்கினியில் இருந்து அவர் உங்களை தூக்கி எடுத்து அவருடைய மகிமைக்கு ஏதுவான ஒன்றாக உங்களை உருவாக்குகிறார். இப்போது அந்த அக்கினி கடுமையானதாக தோன்றினால் நீங்கள் கைவிடப்பட்டிருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அக்கினி என்பது நிராகரிப்பு அல்ல. அது, மறுரூபப்படுத்துவது. மற்றும், உங்கள் மேல் கண்ணோக்கமாய் இருக்கிறவர் இன்றும் உங்களை நினைவு கூறுகிறார்.

இன்றைய சிந்தனைக்கு:

தேவனுடைய அமைதி, அவர் இல்லாதிருக்கிறார் என்பது அல்ல. ஆனால், அது அக்கினியை விட்டு எப்போதுமே விலகாமல் இருக்கும் புடமிடுகிறவரின் நிலையான கண்காணிப்பு ஆகும். இன்று, நீங்கள் காணப்பட்டும், நினைவு கூறப்பட்டும், தாங்கப்பட்டும் இருக்கிறீர்கள் என்ற வாக்குத்தத்தில் இளைப்பாருங்கள். அவர், உங்களில் தொடங்கிய வேலையானது இன்னும் ஒரு நோக்கத்துடன் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை விசுவாசியுங்கள்.          

ஜெபம்:

           பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உமக்கு முன்பாக வருகிறோம். நாங்கள் காண்கிறதை வைத்து அல்லாமல் விசுவாசத்திலே நடக்க நீர் எங்களை அழைத்து இருந்தாலும், அநேக நேரம், எங்களுடைய கண்கள் உம்முடைய மகிமையையும் வல்லமையையும் பார்ப்பதில் குறைவுபட்டு, மாறாக, எங்களுடைய பலவீனங்களிலும், கடந்த கால காயங்களிலும், எங்களுடைய பயங்களிலும் நாங்கள் சார்ந்து இருந்திருக்கிறோம். ஒன்றும் இல்லாதவைகளில் இருந்து அனைத்தையும் உருவாக்குகிற தேவனாகிய கர்த்தர் நீரே என்பதை எங்களுக்கு மறுபடியுமாக கற்பித்தருளும். தேவனே, எங்களை நீர் ஆறுதல் செய்து உம்முடைய பலத்த கரத்தினால் எங்களை நிலை நிறுத்தும். இருளிலே நாங்கள் வெளிச்சமாய் பிரகாசிப்பதற்கு உம்முடைய குணப்படுத்துதல் எங்களுக்குள்ளாக கடந்து வருவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம், ஆமென்.

இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது:

தேவன் “நினைவு கூறுகிறது” என்பது அவர் அதுவரை மறந்திருந்தார் என்றதால் அல்ல. மாறாக, அவர் நமக்கு நேராக இக்கத்துடனும் நோக்கத்துடனும் ஒரு புதுப்பிக்கப்பட்ட செயல்பாட்டுடன் கடந்து வருவதை குறிக்கிறது. நம்முடைய வாழ்க்கையானது புடமிடும் அக்கினியைப் போல் தோன்றினாலும் தேவனுடைய பிரசன்னம் தொடர்ச்சியாய் நம்மை அவருடைய மகிமைக்காக வனைந்து பரிசுத்தப்படுத்துகிறதாய் இருக்கிறது. நமக்குள், ஞாபக மறதி என்பது சில நேரங்களில் நம்முடைய குணப்படுதலுக்காக தேவையானதாயும் இருக்கிறது. அது, நம்முடைய கடந்த கால வேதனைகளிலிருந்து நம்மை விடுவித்து குணப்படுத்துதல் நமக்குள் வேர் கொள்ளுவதற்கான ஒரு ஈவு. நாம் அநேக நேரம் அதை பார்க்காவிட்டாலும் தேவனுடைய கவனம் எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை. அவருடைய அன்பு என்றைக்கும் குறையாததாயும் நம்மை கைவிடாததாயும் இருக்கிறது. இந்த அக்கினியானது நம்மை கைவிடுவதற்காக அல்லாமல் நம்மை மறுரூபப்படுத்துவதற்காகவே இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொண்டு இந்த செயல்பாட்டில் அவரை நம்பி இருப்பதற்காக  நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம்.

(2025 நவம்பர் மாதம் 22 அன்று மத்தேயு 11:28 ஊழியத்தின் சார்பாக Rev. இம்மானுவேல் அருள் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி ஜெசிந்த் ஏஞ்சலால் மொழிப்பெயர்க்ப்பட்டது).

அறிவிப்புகள்:

  1. உங்களுடைய சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவைத் தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இணைப்பு:https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09  (சந்திப்பு ஐடி (Meeting ID) : 811 4423 5750.  கடவுச்சொல் (Password): 12345). 

  1. தனிப்பட்ட ஆலோசனை பெறுவதற்கு எங்களைத் தொடர்புகொள்ளவும்.உங்களுடன்    விசுவாசத்திலும்  மற்றும்  ஐக்கியத்திலும்  நடக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம். 
  • எங்களுடைய ஊழியங்கள்    மற்றும்      கூடுகைகளை குறித்த  அறிவிப்புகளுக்கும்  மற்றும் தகவல் தொடர்புக்கும்  எங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேரவும்: https://chatwhatsapp.com/FQuH58GtkEEApPCm9gN8no
  • நேரடி ஆலோசனை பெற்றுக்கொள்ளநீங்கள் விரும்பினால்,கீழேஉள்ள இணைப்பை  உபயோகித்து   ஏற்பாடு செய்யுங்கள்https://scheduler.zoom.us/rev-immanuel-paul-appointment.
Read More →

னுதின வேததியானம்: நோக்கங்கள் மட்டும் போதுமானதல்ல

வேத தியானக் குறிப்பு: 2 சாமுவேல் 6:6,7 

      இயேசு கிறிஸ்து, “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; (யோவான் 14 : 6) என்று கூறினார். இது, கேட்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும், அதை நம்முடைய வாழ்வில் நடைமுறைப்படுத்துவது கடினம். நாம் அநேக நேரம் நம்முடைய நல்ல நோக்கங்கள் நல்ல முறையில் மதிப்பிடப்பட்டு கணக்கில் கொள்ளப்படும் என்று நினைக்க விரும்புகிறோம். அதாவது, நம்முடைய இருதயம் சரியான இடத்தில் இருக்குமானால், தேவன் நம்மை புரிந்து கொள்வார் என்று நினைக்கிறோம். ஆனால், வெறும் நம்முடைய நல்ல நோக்கங்கள் மட்டும் எப்பொழுதுமே நம்மை தேவனுடைய வழிகளோடு ஒத்துப் போக வைப்பதற்கு போதுமானது அல்ல என்று வேதாகமம் நமக்கு காட்டுகிறது. 

      2 சாமுவேல், 6 ஆம் அதிகாரத்தில் உள்ள ஊசாவை எடுத்துக் கொள்ளுங்கள். தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி சுமந்து செல்லப்பட்டது, அந்த நிலையில் மாடுகள் தடுமாறின போது, ஊசா பெட்டியை நிலைநிறுத்த அவனுடைய கையை நீட்டினான். அது, தீங்கற்றதாகவும் மேலும் கனத்துக்குரிய ஒன்றாகவும் தெரிகிறது, இல்லையா? ஆனால், தேவன் அவனை அங்கேயே அடித்து விட்டார். ஊசா, தூன்மார்க்கானாக இருந்ததால் அல்ல, ஆனால், அவன் தேவனுடைய கட்டளைக்கு புறம்பாகச் செயல்பட்டதால் தேவன் அவனை அடித்தார். அவனுடைய இருதயம் நல்லதையே நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அவனுடைய கைகள் தேவனுடைய வழியை விட முந்திச் சென்று செயல்பட்டன.   

    இந்த சம்பவம் என்னை கொஞ்சம் உலுக்கியது. அது, தேவனுடைய வார்த்தையைவிட நம்முடைய உணர்வுகளை நம்புவது எவ்வளவு எளிதானது என்பதை நினைவூட்டுகிறது. இதை தான் பிசாசு விரும்புகிறான். அவன், நாம்உண்மையில் சரியானதுமீது நம்பிக்கை வைப்பதை விட சரி என்று தோன்றுவதுமீது நம்பிக்கை வைப்பதையே விரும்புகிறான். ஆனால், வேதாகமம் கூறுவது போல, நம்முடைய இருதயம் ஏற்கனவே பாவத்தினால் தீட்டுப்பட்டு இருக்கிறது. எனவே, நாம் எவ்வளவு உண்மையாக இருந்தாலும், உடைந்து போன இருதயத்திலிருந்து பிறக்கும் எதுவும் தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்தத்தை உருவாக்க முடியாது. 

     அதனால் தான்  இயேசு கிறிஸ்து நமக்கு தேவையானவராய் இருக்கிறார். நம்முடைய நோக்கங்கள் நம்மைக் இரட்சிக்க முடியாது. அவருடைய இரத்தம் மட்டுமே நம்மை இரட்சிக்க முடியும். நம்மால் சரி செய்ய முடியாத நம்முடைய குழப்பங்களில் அவரே உள்ளே நுழைந்து நாம் முன்பாக செல்லக்கூடிய புதிய வழியை உருவாக்குகிறார். ஏசாயா 45:2ல் தேவன் இப்படியாக வாக்குத்தத்தம் செய்கிறார், “நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்; வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்து”. இது, அவர்,நான் உன்னை வழிநடத்துகிறேன், நீ என்னை பின்பற்றுஎன்று சொல்லும் அவருடைய குரலாகும். 

        எனவே, உங்களுடைய நல்ல நோக்கங்கள் உங்களுடைய சாக்கு போக்காக மாற விடாதீர்கள். மாறாக, இயேசு கிறிஸ்துவின் மீது உங்கள் கண்களை வைத்திருங்கள்அவருடைய வழிகள் நமக்கு இயல்பாகத் தோன்றும் காரியங்களை ஊடுருவி வெட்டி சென்று அதற்கு மாறியதாய் தோன்றினாலும் அவைகளை பின்பற்றுங்கள். உண்மையான மகிழச்சி அங்குதான் தொடங்குகிறது. அது, சரியாகச் செய்வதன் மூலம் வரும் தற்காலிகமான மகிழ்ச்சி அல்லமால் இரட்சிப்பின் மூலம் வரும் ஆழமான நிலைத்திருக்கக்கூடிய மகிழ்ச்சியே ஆகும். 

இன்றைய சிந்தனைக்கு

     என்னுடைய நோக்கங்கள் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையினாலும் ஆவியினாலும் வழிநடத்தப்படுகின்றதா? என்னுடைய செயல்கள் என் சொந்த பகுத்தறிவிலிருந்து வராமல் அவருடைய சத்தியத்திலிருந்து வருகிறதா?  நான் ஒரு விஷயத்தை சரியாய் செய்வதில் திருப்தியடைகிறேனா அல்லது என்னை அவரிடம் அர்ப்பணித்து அவருக்காகக் காத்திருப்பதில் திருப்தி அடைகிறேனா? 

ஜெபம் 

      பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உம்முடைய இரக்கத்திர்க்காக உம்முடைய கிருபையின் சிங்காசனத்திற்கு முன்பாக வருகிறேன். என்னுடைய சொந்த நோக்கங்களை விட உம்முடைய வழியை முதன்மை படுத்துவதற்கு எனக்கு உதவி செய்யும். நான் உம்முடைய குணாதிசயத்தை பிரதிபலிப்பதன் மூலம் என்னுடைய வாழ்க்கையின் மூலமாக உம்முடைய நாமம் மட்டுமே மகிமைப்படுவதாக. தேவனே, உம்மை பிரியப்படுத்துவதற்கு என்னுடைய விருப்பங்கள் மட்டும் போதுமானவை அல்ல என்பதை நான் அரிந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் வழியைத் தேடவும், என்னுடைய நோக்கங்களை ஒரு காரணமாகப் பயன்படுத்தாமல் இருக்கவும் எனக்கு கிருபை செய்வீராக. குயவனின் கையில் களிமண்ணைப் போல நான் என்னை உம்மிடத்தில் கீழ்ப்படுத்துகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென். 

இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது

நம்முடைய புரிந்து கொள்ளுதலிலும் அறிவிலும் இருந்து வரும் நம்முடைய மிக சிறந்த நோக்கங்களும் தேவனுடைய இருதயத்திலிருந்து தவறி இருக்க முடியும். நன்மையானதை மனதில் கொண்டு செயல்படுவதும் கீழ்படிதலில் நடப்பதும் ஒன்று அல்ல என்பதை ஊசியாவின் சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. இயேசு கிறிஸ்து, நம்முடைய நல்ல நோக்கங்களினால் மட்டும் அல்லாமல் நம்முடைய ஒவ்வொரு படிகளும் அவரிடத்தில் சரணடைக்கப்பட்டதாய் இருந்து அவருடைய வழிகளை பின்பற்ற நம்மை அழைக்கிறார்.

(2025 நவம்பர் மாதம் 15 அன்று மத்தேயு 11:28 ஊழியத்தின் சார்பாக Rev. இம்மானுவேல் அருள் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி லல்லியால் மொழிப்பெயர்க்ப்பட்டது) 

அறிவிப்புகள்: 

  1. உங்களுடைய சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவைத் தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இணைப்பு:https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09  (சந்திப்பு ஐடி (Meeting ID) : 811 4423 5750.  கடவுச்சொல் (Password): 12345). 

  1. தனிப்பட்ட ஆலோசனை பெறுவதற்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.  உங்களுடன்    விசுவாசத்திலும்  மற்றும்  ஐக்கியத்திலும்  நடக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம். 
  • எங்களுடைய ஊழியங்கள்  மற்றும்  கூடுகைகளை குறித்த  அறிவிப்புகளுக்கும்    மற்றும் தகவல் தொடர்புக்கும்  எங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேரவும்:  https://chatwhatsapp.com/FQuH58GtkEEApPCm9gN8no
  • நேரடி ஆலோசனை பெற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால், கீழே உள்ள  இணைப்பு உபயோகித்து ஏற்பாடு செய்யுங்கள்.                    https://scheduler.zoom.us/rev-immanuel-paul-appointment.

Click Here to Download as PDF-> Tamil

Read More →